NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / போலீஸ் வாகனமாக பயன்படுத்தப்படும் பொலிரோ உண்மையில் பாதுகாப்பானதா? ஆனந்த் மஹிந்திரா நோக்கி கேள்விகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    போலீஸ் வாகனமாக பயன்படுத்தப்படும் பொலிரோ உண்மையில் பாதுகாப்பானதா? ஆனந்த் மஹிந்திரா நோக்கி கேள்விகள்
    அந்த வாகனத்தின் டயர் வெடித்ததால் விபத்து ஏற்பட்டது

    போலீஸ் வாகனமாக பயன்படுத்தப்படும் பொலிரோ உண்மையில் பாதுகாப்பானதா? ஆனந்த் மஹிந்திரா நோக்கி கேள்விகள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 02, 2024
    06:13 pm

    செய்தி முன்னோட்டம்

    கர்நாடகாவில் நடந்த சாலை விபத்தில் 26 வயது தகுதிகாண் ஐபிஎஸ் அதிகாரி ஹர்ஷ் பர்தன் உயிரிழந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    அவர் மஹிந்திரா பொலேரோவில் பயணித்ததாகவும், அந்த வாகனத்தின் டயர் வெடித்ததால் விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    பல காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் பயன்படுத்தும் பொலிரோ வாகனங்களின் பாதுகாப்பு குறித்து விசாரணை நடத்துமாறு மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவை பெங்களூரு முன்னாள் காவல் ஆணையர் பாஸ்கர் ராவ் உள்ளிட்ட பலர் கேள்விகள் கேட்டுள்ளனர்.

    விபத்து

    தகுதிகாண் IPS அதிகாரி பயணித்த பொலேரோவின் டயர் வெடித்ததால் ஏற்பட்ட விபத்து

    இந்த சம்பவம் நேற்று மாலை ஹசன்னில் நடந்தது.

    மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள துாசர் என்ற கிராமத்தை சேர்ந்தவர், ஹர்ஷ் பர்தன்.

    இவர் 2023 ஆம் ஆண்டு ஐ.பி.எஸ்., பயிற்சியை, மைசூருவில் உள்ள கர்நாடக போலீஸ் அகாடமியில் 6 மாத மாவட்ட பயிற்சியை முடித்துள்ளார்.

    இவருக்கு முதல் போஸ்ட்டிங்காக கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் உள்ள ஹொலேநராசிபூரில் ஏ.எஸ்.பி.,யாக பதவி அளிக்கப்பட்டது.

    பதவியேற்பதற்காக வந்த பர்தனின் கார் டயர் வெடித்ததால், காரை ஓட்டி வந்த மாவட்ட ஆயுதபடை கான்ஸ்டபிள் மஞ்சேகவுடா, நிலை தவறினார்.

    இதனால் சாலையின் ஓரத்தில் இருந்த வீடு மற்றும் மரத்தின் மீது கார் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த பர்தன் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.

    பாதுகாப்பு

    இந்திய காவல்துறை பயன்படுத்தும் வாகனமாக பொலிரோ அறியப்படுகிறது; பாதுகாப்பானதா?

    ஒரு எக்ஸ் இடுகையில், முன்னாள் காவல் ஆணையர் பாஸ்கர் ராவ், "சாலையில் காவல்துறை இயக்கங்கள் எப்போதும் மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. தனது தொழிலைத் தொடங்கத் தயாராக இருந்த இளம் ஐபிஎஸ் அதிகாரியின் சோக மரணம் கடைசி மணியாக கேட்கிறது. இந்திய காவல்துறை மஹிந்திரா ஜீப்களை பெரிதும் நம்பியுள்ளது. பல ஆண்டுகளாக, பொலிரோ மேம்பட்டுள்ளது, ஆனால் அவசரகால பதில் வாகனம் எப்படி இருக்க வேண்டுமோ அதைவிட சாற்றி தரம் குறைவாகவே உள்ளது" என தெரிவித்துள்ளார்.

    காவல்துறையினர் பயன்பாட்டிற்கு வரும் வாகனங்களில் மோசமான பாதுகாப்பு தரம் உள்ளது எனவும், சீட் பெல்ட்கள் இல்லை, எச்சரிக்கை, ஏர் பேக்குகள் இல்லை, மோதலை எதிர்க்கும் எச்சரிக்கை இல்லை போன்ற பல குறைபாடுகள் இருப்பதை அவரின் பதிவு சுட்டிக்காட்டியது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    Police movements on road are always stressful . The tragic death of a young IPS Officer who was all set to start his career is last straw on camel’s back. Indian Police heavily relies on Mahindra Jeeps. Over the years, the Bolero has improved but terribly falls short of what an… pic.twitter.com/Y9Yo5OqXuL

    — Bhaskar Rao (@Nimmabhaskar22) December 2, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மஹிந்திரா
    ஆனந்த் மஹிந்திரா
    கர்நாடகா
    விபத்து

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    மஹிந்திரா

    மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கிளாஸிக் மாடல் கார்களை வாங்கத் திட்டமிட்டிருக்கும் இந்திய ராணுவம் இந்திய ராணுவம்
    ஸ்கார்ப்பியோ N பிக்அப், எலெக்ட்ரிக் தார்.. புதிய மாடல்களை அறிமுகப்படுத்தவிருக்கும் மஹிந்திரா எஸ்யூவி
    2026க்குள் ஐந்து மின்சார எஸ்யூவி கார்களை அறிமுகப்படுத்த மஹிந்திரா திட்டம் எலக்ட்ரிக் கார்
    XUV300 மாடலின் இரண்டு புதிய வேரியன்ட்களை வெளியிட்டுள்ளது மஹிந்திரா எஸ்யூவி

    ஆனந்த் மஹிந்திரா

    AI உருவாக்கிய ஆனந்த் மஹிந்திராவின் புகைப்படம்.. ட்வீட் செய்த ஆனந்த் மஹிந்திரா! செயற்கை நுண்ணறிவு
    பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு எலக்ட்ரிக் காரை பரிசளிக்கும் ஆனந்த் மஹிந்திரா பிரக்ஞானந்தா
    மகன் இறப்புக்கு காரணம் ஆனந்த் மஹிந்திரா; கான்பூரை சேர்ந்த தந்தை வழக்கு பதிவு உத்தரப்பிரதேசம்

    கர்நாடகா

    பிரஜ்வால் வழக்கு: பொய் புகார் அளிக்க பெண் கட்டாயப்படுத்தப்பட்டதாக NCW தகவல் பாலியல் தொல்லை
    கர்நாடகா: 3 பேரை கடத்தி அவர்களது அந்தரங்க உறுப்பில் மின்சாரம் பாய்ச்சி கொடுமைப்படுத்திய கும்பல்  இந்தியா
    கர்நாடகாவில் காதலிக்க மறுத்த பக்கத்து வீட்டு பெண்ணை கத்தியால் குத்திக் கொன்றவர் தப்பி ஓட்டம்  கொலை
    பிரஜ்வல் ரேவண்ணாவின் டிப்ளமேடிக் பாஸ்ப்போர்ட்டை ரத்து செய்ய MEA நடவடிக்கை  பாலியல் தொல்லை

    விபத்து

    கார் ஏற்றி கொன்ற வழக்கில் ஜெகன் ரெட்டியின் கட்சி எம்பியின் மகளுக்கு ஜாமீன் ஜெகன் மோகன் ரெட்டி
    புனே போர்ஷே விபத்தில் குற்றம் சாட்டப்பட்ட சிறுவனை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு புனே
    மும்பை - நாக்பூர் விரைவு சாலையில் இரு கார்கள் நேருக்கு நேர் மோதியதால் 7 பேர் பலி மும்பை
    குஜராத்தின் சூரத்தில் பல மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: உள்ளே பலர் சிக்கியிருக்கலாம் என தகவல்  குஜராத்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025