NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜெய்ப்பூர்- மும்பை ஓடும் ரயிலில் நால்வரை சுட்டுக்கொன்ற ரயில்வே காவலாளி பணி நீக்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜெய்ப்பூர்- மும்பை ஓடும் ரயிலில் நால்வரை சுட்டுக்கொன்ற ரயில்வே காவலாளி பணி நீக்கம்
    நால்வரை சுட்டுக்கொன்ற ரயில்வே காவலாளி பணி நீக்கம்

    ஜெய்ப்பூர்- மும்பை ஓடும் ரயிலில் நால்வரை சுட்டுக்கொன்ற ரயில்வே காவலாளி பணி நீக்கம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 17, 2023
    09:42 am

    செய்தி முன்னோட்டம்

    மகாராஷ்டிராவில், கடந்த ஜூலை 31 அன்று, ஓடும் ரயிலில் தனது மேற்பார்வையாளரையும், மூன்று பயணிகளையும் கொன்றதாகக் கூறப்படும் ரயில்வே பாதுகாப்புப் படை கான்ஸ்டபிள் சேத்தன் சிங், பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    நால்வரை சுட்டு கொன்றதற்காக கைது செய்யப்பட்ட சிங்கை, விசாரணை முடிந்தபின்பு, 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க, மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இது தொடர்பாக, இந்த வழக்கை விசாரித்து வரும் அரசு ரயில்வே காவல்துறை(ஜிஆர்பி), பலிகிராஃப் பரிசோதனை, போதைப்பொருள் பரிசோதனை போன்றவற்றிற்கு சிங்கை உட்படுத்த அனுமதி கோரியிருந்தது.

    எனினும் அதற்கு அனுமதியளிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த வழக்கின் விசாரணையில், 33 வயதான RPF கான்ஸ்டபிள் சிங், ரயிலில் மேலும் பலரைக் கொல்லத் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

    card 2

    அதிக மக்களைக் கொல்ல திட்டம்

    சேத்தன் சிங், துப்பாக்கியை மேலும் சிலரை சுடுவதற்காக பொதுமக்களை நோக்கி திரும்பியுள்ளார். ஆனால் S5 பெட்டியில் இருந்த பயணிகள் கூச்சலிட்டதால் அவர் நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

    இருப்பினும், புர்கா அணிந்திருந்த ஒரு பெண்ணை நோக்கி அவர் துப்பாக்கியை குறிவைத்ததால், பயணிகள் அவரை பார்த்து கத்தத் தொடங்கினர் என்று செய்திகள் கூறுகின்றன.

    அறிக்கையின்படி, போரிவலி ரயில் நிலையம் அருகே ரயிலில் இருந்து இறங்குவதற்கு முன், சேத்தன் சிங் S 6 பெட்டியில் பயணித்த அவரின் மேலதிகாரியான அஸ்கர் அலியைக் கொன்றுவிட்டு, S 5 கோச் நோக்கி சென்றார். அங்கே மேலும் சில பயணிகளை சுட எத்தனித்துள்ளதாக கூறப்படுகிறது.

    தற்போது நீதிமன்ற காவலில் உள்ள அவரை பணி நீக்கம் செய்துள்ளது ரயில்வே துறை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மகாராஷ்டிரா
    மும்பை
    துப்பாக்கி சூடு

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    மகாராஷ்டிரா

    IIT பாம்பேயில் மாணவர் உயிரிழப்பு: சாதிய பாகுபாடுகளால் தற்கொலை செய்து கொண்டாரா இந்தியா
    மகாராஷ்டிராவில் 512 கிலோ வெங்காயம் வெறும் ரூ.2 - விவசாயி அதிர்ச்சி இந்தியா
    உலகின் முதல் மூங்கில் விபத்து தடுப்பு மஹாராஷ்டிராவில் நிறுவப்பட்டுள்ளது: நிதின் கட்கரி இந்தியா
    5ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ஆபாச வீடியோக்களைக் காட்டிய ஆசிரியர் கைது இந்தியா

    மும்பை

    மும்பையில் நடைபெறும் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான ODI போட்டியை ரசித்த ரஜினிகாந்த் ரஜினிகாந்த்
    மும்பையில் வீடு வாங்கிய சூர்யா; வெளியான உண்மை காரணம் நடிகர் சூர்யா
    வெள்ளி தட்டில் விருந்து, ஸ்வீட் உடன் 500 ரூபாய் நோட்டு: களைகட்டிய அம்பானியின் விருந்து உபசரிப்பு வைரல் செய்தி
    இந்தியாவில் முதன் முறையாக ஆப்பிள் ஸ்டோர் திறப்பு - எப்போது தெரியுமா? ஆப்பிள் தயாரிப்புகள்

    துப்பாக்கி சூடு

    பிபா மகளிர் உலகக்கோப்பை : கால்பந்து அணிகள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகே துப்பாக்கிச் சூடு கால்பந்து
    ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் ரயில்வே பாதுகாப்புப் படை கான்ஸ்டபிளால் 4 பேர் சுட்டுக் கொலை ரயில்கள்
    சென்னையில் பதற்றம் - என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 2 ரவுடிகள்  சென்னை
    ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் நடந்த துப்பாக்கி சூடு: உண்மையில் என்ன நடந்தது? மகாராஷ்டிரா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025