Page Loader
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 56 நபர்களை மீட்டது இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை
சிக்கிமின் மாநிலத்தில் வரலாறு காணாத வெள்ளத்தால், 25,065 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,875 பேர் அரசின் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 1,203 வீடுகள் சேதமடைந்துள்ளன.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 56 நபர்களை மீட்டது இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை

எழுதியவர் Srinath r
Oct 08, 2023
06:13 pm

செய்தி முன்னோட்டம்

சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 56 சுற்றுலா பயணிகளை திபெத்திய எல்லை காவல்படை பாதுகாப்பாக மீட்டுள்ளது. சிக்கிமில் கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி மேக வெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் ராணுவ வீரர்கள் உட்பட 27 பேர் உயிரிழந்தனர். மேலும் மாயமான 141 நபர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. வடக்கு சிக்கிம் மாநிலத்தில் சுங்தாங் பகுதியில் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட 4 பெண்கள் மற்றும் 52 ஆண்கள் என 56 பேரை இந்தோ திபெத்திய எல்லை காவல்படை கயிறு மூலம் பத்திரமாக மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட நபர்கள் அவர்களின் குடும்பத்தை தொடர்பு கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

இந்தோ-திபெத்திய எல்லை காவல் படை மக்களை மீட்கும் காட்சிகள்