NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'எல்லா மாநிலங்களிலும் புழங்குவதற்கு இந்தி என்ன இந்திய கரன்சியா?' - கவிஞர் வைரமுத்து காட்டம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'எல்லா மாநிலங்களிலும் புழங்குவதற்கு இந்தி என்ன இந்திய கரன்சியா?' - கவிஞர் வைரமுத்து காட்டம் 
    'எல்லா மாநிலங்களிலும் புழங்குவதற்கு இந்தி என்ன இந்திய கரன்சியா?' - கவிஞர் வைரமுத்து காட்டம்

    'எல்லா மாநிலங்களிலும் புழங்குவதற்கு இந்தி என்ன இந்திய கரன்சியா?' - கவிஞர் வைரமுத்து காட்டம் 

    எழுதியவர் Nivetha P
    Dec 15, 2023
    12:40 pm

    செய்தி முன்னோட்டம்

    'எல்லா மாநிலங்களிலும் புழங்குவதற்கு இந்தி மொழி என்ன இந்திய கரன்சியா?' என்று கவிஞர் வைரமுத்து கேள்விகளை எழுப்பியுள்ளார்.

    அண்மையில் கோவாவில் இருந்து சென்னை விமான நிலையம் வந்து இறங்கிய பெண் ஒருவரிடம் மத்திய பாதுகாப்பு படை வீரர் ஒருவர் 'இந்தி தெரியுமா?' என்று கேட்டுள்ளார்.

    தொடர்ந்து அவர் அந்த பெண்ணிடம் 'இந்தி மொழி தான் தேசிய மொழி' என்றும்,

    'தமிழ்நாடு இந்தியாவில் தானே உள்ளது. எனவே இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தி மொழியை கற்க வேண்டும்' என்றும் அத்துமீறி பேசியுள்ளார்.

    இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த பாதுகாப்பு படை வீரர் அந்த பெண்ணிடம் தான் பேசியதற்கு மன்னிப்பு கோரினார் என்று அந்த பெண்ணே தெரிவித்துள்ளார்.

    வைரமுத்து 

    தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட வைரமுத்து 

    இதற்கிடையே இந்த சம்பவத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், கவிஞர் வைரமுத்து இந்த சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில், "எல்லா மாநிலங்களிலும் புழங்குவதற்கு இந்தி மொழி என்ன இந்திய கரன்சியா?, இந்தி தெரியாதோர் இந்தியர் இல்லை என்று அரசமைப்பில் இருக்கிறதா?" என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார்.

    மேலும் அவர், "இந்திய நாடு இந்தி என்னும் சொல்லடியில் பிறந்ததா?"என்றும்,

    "இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி தெரியாதோர் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? என்றும் கேட்டுள்ளார்.

    தொடர்ந்து, "வடநாட்டு சகோதரர்கள் தமிழகத்திற்கு வந்தால் தெள்ளு தமிழ் மக்கள் தமிழ் தெரியுமா? என்று எள்ளியதுண்டா?" என்றும் பதிவிட்டுள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    வைரமுத்துவின் பதிவு 

    இந்தி பேசாதவர்
    இந்தியர் இல்லை என்று
    அரசமைப்பில் இருக்கிறதா?

    இந்தியா என்ற நாடு
    இந்தி என்ற
    சொல்லடியில்தான் பிறந்ததா?

    எல்லா மாநிலங்களிலும்
    புழங்குவதற்கு
    இந்தி மொழியென்ன
    இந்தியக் கரன்சியா?

    இந்தி பேசும் மாநிலங்களிலேயே
    இந்தி கல்லாதார் எண்ணிக்கை
    எவ்வளவு தெரியுமா?

    வடநாட்டுச்…

    — வைரமுத்து (@Vairamuthu) December 15, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வைரமுத்து
    எக்ஸ்
    மு.க ஸ்டாலின்
    கோவா

    சமீபத்திய

    யூடியூபர், மாணவர், பாதுகாவலர் உட்பட 11 'பாகிஸ்தான் உளவாளிகள்' இதுவரை கைது பாகிஸ்தான்
    உளவு பார்க்க யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவை சோறு போட்டு வளர்த்த பாகிஸ்தான் ஹரியானா
    நடிகர் விஷால் திருமணம் செய்யவிருக்கும் நடிகை இவர்தான்! இணையத்தில் வைரலாகும் தகவல் விஷால்
    அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களின் நுழைவை எளிதாக்க கொள்கைகளை மறுசீரமைக்க மத்திய அரசு ஆலோசனை  அணுசக்தி

    வைரமுத்து

    சின்மயி இப்போ வந்து புகார் அளிப்பது ஏன்? வெண்ணிற ஆடை நிர்மலா பேட்டி  சின்மயி
    முதல்வர் கருணாநிதிக்காக, வைரமுத்து எழுதிய பாடல் ஸ்டாலின்
    கவிப்பேரரசு வைரமுத்துவின் பிறந்தநாளில், அவரின் வரிகளில் வெளியான சில முத்தான பாடல்கள் பிறந்தநாள் ஸ்பெஷல்
    ஐந்து ஆண்டு தடைக்கு பின், தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி ஆன பாடகி சின்மயி பாடகர்

    எக்ஸ்

    அரசு ஆவணத்தைக் கொண்டு கணக்கை சரிபார்க்கும் வசதியை அறிமுகப்படுத்தவிருக்கும் எக்ஸ் ட்விட்டர்
    எக்ஸை முழுமையான கட்டண சமூக வலைத்தளமாக்குகிறாரா எலான் மஸ்க்? ட்விட்டர்
    20 மில்லியன் டாலர்களை வருவாய் பகிர்வு திட்டத்தின் கீழ் பகிர்ந்திருக்கும் எக்ஸ் சமூக வலைத்தளம்
    எக்ஸ் தளத்தில் புதிய மாற்றத்தை அறிமுகப்படுத்தினார் எலான் மஸ்க் எலான் மஸ்க்

    மு.க ஸ்டாலின்

    'சென்னையில் வெள்ளம் வருமோ என பதறும் காலம் மாறியது' - தமிழக முதல்வர் பெருமிதம் கனமழை
    கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் - தமிழக அரசு அதிரடி உத்தரவு தமிழ்நாடு
    தமிழக நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்களுக்கு 20% போனஸ் அறிவிப்பு தமிழ்நாடு
    தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு 20% போனஸ் - தமிழக முதல்வர் அறிவிப்பு  தீபாவளி

    கோவா

    மதுபான ஊழலில் கிடைத்த பணத்தை கோவா பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஆம் ஆத்மி: ED இந்தியா
    கோவா கடற்கரையில் காவல் காக்கும் AI காப்பான்கள் - புதிய முயற்சி! தொழில்நுட்பம்
    கோவாவில் குடும்பத்துடன் படகு சவாரி செய்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் குடும்பத்தார் இந்தியா
    கோவா சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல்: முதல்வர் சாவந்த் என்ன சொல்கிறார் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025