NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / குடும்ப வன்முறை வெளிநாட்டில் நடந்திருந்தாலும் அதை இந்திய நீதிமன்றங்கள் விசாரிக்கலாம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    குடும்ப வன்முறை வெளிநாட்டில் நடந்திருந்தாலும் அதை இந்திய நீதிமன்றங்கள் விசாரிக்கலாம் 
    இந்த வழக்கிற்கு நீதிபதி ஜி.ஏ.சனாப் தீர்ப்பு வழங்கினார்.

    குடும்ப வன்முறை வெளிநாட்டில் நடந்திருந்தாலும் அதை இந்திய நீதிமன்றங்கள் விசாரிக்கலாம் 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 22, 2023
    11:20 am

    செய்தி முன்னோட்டம்

    வெளிநாட்டில் நடந்திருந்தாலும் குடும்ப வன்முறை வழக்கை இந்தியாவில் உள்ள நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்று மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்ச் கூறியுள்ளது.

    ஜெர்மனியில் இருக்கும் போது தனக்கு குடும்ப வன்முறை நடந்ததாக ஒரு பெண் தன் முன்னாள் கணவன் மீது புகார் அளித்திருந்தார்.

    அந்த சம்பவம் ஜெர்மனியில் நடந்ததாக கூறப்படுவதால் நாக்பூரில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது என்று குற்றம்சாட்டப்பட்டவர் சார்பில் கூறப்பட்டது.

    இந்த வழக்கிற்கு நீதிபதி ஜி.ஏ.சனாப் தீர்ப்பு வழங்கினார்.

    அவர் எழுதிய தீர்ப்பில், குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம்(DV சட்டம்) ஒரு "சமூக நன்மை பயக்கும் சட்டம்" என்றும் குற்றம் எங்கு நடந்திருக்கிறது என்பது முக்கியம் இல்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

    details

    பெண்ணை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்த கணவன்

    "DV சட்டத்தின் பிரிவு 1 இன் கீழ் கூறப்பட்டிருக்கும் படி, குடும்ப வன்முறைச் சட்டம் இந்தியாவுக்கு மட்டுமே பொருந்தும் என்றாலும், வெளிநாட்டு மண்ணில் ஏற்படும் குடும்ப வன்முறையையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்" என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

    புகார் அளித்த பெண் எதிர்கொண்ட அதிர்ச்சி, துன்பம் மற்றும் துயரத்தை கருத்தில் கொண்டால், இந்திய நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று கூறும் கருத்துக்களை நிராகரிக்க அது போதுமானதாக இருக்கும் என்று உயர் நீதிமன்றம் கூறி இருக்கிறது.

    ஜெர்மனியில் இருந்தபோது கருக்கலைப்பு செய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாக அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

    மேலும், அந்த பெண் குற்றமசாட்டப்பட்டவரின் குடும்பத்தால் உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    மும்பை

    சமீபத்திய

    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா
    இனி, நீதித்துறை சேவையில் சேர குறைந்தபட்சம் 3 ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி தேவை: உச்ச நீதிமன்றம் உத்தரவு உச்ச நீதிமன்றம்
    கடந்த 10 நாட்களில் இந்தியாவில் 164 கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன கோவிட் 19

    இந்தியா

    கிறிஸ்தவர்களாக மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு - தமிழக முதல்வர் தனித்தீர்மானம்  மு.க ஸ்டாலின்
    தென் கொரிய சுற்றுலா பயணியிடம் தவறாக நடந்துகொண்ட நபர் கைது தென் கொரியா
    இந்தியாவில் இண்டர்காண்டினென்டல் கோப்பை : அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு அறிவிப்பு கால்பந்து
    ஒரே பாலின திருமணங்கள்: மத்திய அரசின் கருத்துக்கு தலைமை நீதிபதி அளித்த பதில்  உச்ச நீதிமன்றம்

    மும்பை

    செல்ல நாய்க்கு முன்னுரிமை கொடுத்து நடந்த அம்பானி வீட்டு விசேஷம் வைரல் செய்தி
    ஐஸ்வர்யா ராய் முதல் சச்சின் டெண்டுல்கர் வரை: அம்பானி வீட்டு விசேஷத்தில் பங்கு பெற்ற பிரபலங்களின் பட்டியல் ஐஸ்வர்யா ராய்
    விஸ்தாரா விமானத்தில் அரை நிர்வாணமாக தகராறு செய்த பயணி கைது இந்தியா
    மும்பையில் பொது இடத்தில் கணவன் மனைவி அடித்துக்கொள்ளும் வீடியோ: Couplegoals என்று வைரல் வைரல் செய்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025