NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பாகிஸ்தான் நிறுத்தாதவரை பதிலடி தாக்குதல் தொடரும்; மத்திய அரசு உறுதி
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாகிஸ்தான் நிறுத்தாதவரை பதிலடி தாக்குதல் தொடரும்; மத்திய அரசு உறுதி
    பாகிஸ்தான் நிறுத்தாதவரை தாக்குதல் தொடரும் என மத்திய அரசு உறுதி

    பாகிஸ்தான் நிறுத்தாதவரை பதிலடி தாக்குதல் தொடரும்; மத்திய அரசு உறுதி

    எழுதியவர் Sekar Chinnappan
    May 08, 2025
    06:47 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் மேற்கொள்ளும் எந்தவொரு ஆக்கிரமிப்பிற்கும் எதிராக கடுமையாக இந்தியா பதிலடி கொடுக்கும் என்று வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை (மே 8) மீண்டும் உறுதிப்படுத்தியது.

    ஒரு கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற மூத்த பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் சமீபத்திய இந்திய நடவடிக்கைகள் துல்லியமானவை மற்றும் தற்காப்பு நடவடிக்கை மட்டுமே என்பதை தெளிவுபடுத்தினர்.

    அதே நேரத்தில் எதிர்காலத்தில் பாகிஸ்தான் ஆத்திரமூட்டும் வகையில் தாக்குதல் நடத்தினால் சம பலத்துடன் எதிர்கொள்ளப்படும் என்பதை வலியுறுத்தினர்.

    எல்லை தாண்டிய தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக இந்தியா பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்புகளை குறிவைத்ததாக கர்னல் சோபியா குரேஷி உறுதிப்படுத்தினார். லாகூரில் உள்ள ஒரு வான் பாதுகாப்பு கட்டமைப்பு வீழ்த்தப்பட்டது என்று கூறினார்.

    முறியடிப்பு

    பாகிஸ்தான் தாக்குதல் முறியடிப்பு

    மே 7 அன்று சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தான் ராணுவ நிலைகளைத் தாக்குவதைத் தவிர்த்து வந்த இந்தியாவின் முந்தைய நிலைப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டி, இந்தியாவின் பதில் களத்திலும் தீவிரத்திலும் பாகிஸ்தானின் நடவடிக்கைக்கு சமமாக இருக்கும் என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

    இந்தியாவின் கட்டுப்படுத்தப்பட்ட நிலைப்பாடு இருந்தபோதிலும், ஜம்மு, அமிர்தசரஸ், சண்டிகர் மற்றும் பூஞ்ச் உள்ளிட்ட வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் உள்ள ராணுவத் தளங்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவியது.

    இந்தத் தாக்குதல்களை இந்தியாவின் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்புகள் திறம்பட முறியடித்தன. தாக்குதல் முயற்சிக்கான சான்றாக இடிபாடுகள் மீட்கப்பட்டன.

    எல்லைக் கட்டுப்பாட்டுக்கோடு

    எல்லைக் கட்டுப்பாட்டுக்கோட்டில் தாக்குதல்

    எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதல்கள் அதிகரித்ததாகவும், இதன் விளைவாக 16 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் விங் கமாண்டர் வியோமிகா சிங் தெரிவித்தார்.

    பதற்றத்தைத் தணிப்பதில் இந்தியா தொடர்ந்து விருப்பம் கொண்டிருப்பதாகவும், ஆனால் சீண்டினால் உரிய பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    இதற்கிடையே, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் லஷ்கர் இ தொய்பாவின் கிளை அமைப்பான டிஆர்எஃப் பங்கை பாகிஸ்தான் மறுத்ததை வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி விமர்சித்தார்.

    இந்தியாவின் நடவடிக்கைகள் ராணுவத் தாக்குதல் அல்ல என்றும் பயங்கரவாத உள்கட்டமைப்பை நடுநிலையாக்குவதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    இந்திய ராணுவம்
    பாகிஸ்தான்
    பாகிஸ்தான் ராணுவம்

    சமீபத்திய

    பாகிஸ்தான் நிறுத்தாதவரை பதிலடி தாக்குதல் தொடரும்; மத்திய அரசு உறுதி இந்தியா
    PSL போட்டிக்கு சில மணி நேரத்திற்கு முன்பு ராவல்பிண்டி மைதானத்தில் ட்ரோன் தாக்குதல் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
    அமெரிக்காவில் முதல்முறையாக இரண்டாம் உலகப்போர் வெற்றி தின கொண்டாட்டம்; அதிபர் டிரம்ப் அறிவிப்பு அமெரிக்கா
    பாகிஸ்தான் படங்கள், வெப் சீரீஸ்களை ஒளிபரப்புவதை நிறுத்த ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு உத்தரவு ஓடிடி

    இந்தியா

    முகமது முய்சு இந்தியாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்; மாலத்தீவு எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்; காரணம் என்ன? மாலத்தீவு
    IMF-இல் இந்தியாவின் நிர்வாக இயக்குநராக இருந்த டாக்டர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணி நீக்கம்; காரணம் என்ன? மத்திய அரசு
    அணுகுண்டு போட்டுவிடுவார்களாம்; ரஷ்யாவிற்கான பாகிஸ்தான் தூதர் இந்தியாவிற்கு மிரட்டல் பாகிஸ்தான்
    இந்தியா-பாகிஸ்தான் விவகாரத்தில் ஐரோப்பாவின் பாசாங்குத்தனம்; விளாசிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்

    இந்திய ராணுவம்

    2025 ஆண்டை 'பாதுகாப்பு சீர்திருத்த ஆண்டாக' அறிவித்தது மத்திய அரசு மத்திய அரசு
    இந்தியாவின் வரலாற்றில் முக்கிய மைல்கல்; உலகின் மிகப்பெரிய போர்க்களத்தில் இணைய சேவையை நிறுவியது ஜியோ ஜியோ
    ராணுவ தின அணிவகுப்பு ஏன் டெல்லியில் அல்லாமல் புனேவில் நடைபெறுகிறது தெரியுமா? டெல்லி
    பாரத் ரன்பூமி தர்ஷன்; சுற்றுலாத்தலமாக மாறும் இந்தியாவின் முக்கியமான வரலாற்று போர்க்களங்கள் சுற்றுலா

    பாகிஸ்தான்

    பாக்லிஹார் அணை வழியாக பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை இந்தியா தடுத்து நிறுத்தியதாக தகவல் இந்தியா
    இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரிக்கும் பதற்றம்: இன்று கூடுகிறது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் ஐநா சபை
    சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்த பிறகு நீர் மின் திட்டங்களுக்கான பணிகளைத் தொடங்கிய இந்தியா இந்தியா
    இந்தியாவுடன் மோதலைத் தவிர்க்க சமாதானத்திற்கு ரஷ்யா மூலம் மன்றாடும் பாகிஸ்தான் ரஷ்யா

    பாகிஸ்தான் ராணுவம்

    முன்னாள் பிரதமருக்கு சாதகமாக தொகுதிகளை மறுவரையறை செய்ததாக, பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டு பாகிஸ்தான்
    "இந்தியாவோ, அமெரிக்காவோ இல்லை. பாகிஸ்தானின் நிலைமைக்கு நாம் தான் காரணம்"- நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான்
    ஈரானின் தாக்குதலுக்கு பதிலடித் தாக்குதல்கள் நடத்திய பாகிஸ்தான் ராணுவம் பாகிஸ்தான்
    ஈரான்-பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களில் உலக நாடுகளின் நிலை என்ன? ஈரான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025