NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மேலும் 97 தேஜாஸ் விமானங்கள், 156 பிரசாந்த் தாக்குதல் ஹெலிகாப்டர்களை வாங்க இந்திய அரசு முடிவு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மேலும் 97 தேஜாஸ் விமானங்கள், 156 பிரசாந்த் தாக்குதல் ஹெலிகாப்டர்களை வாங்க இந்திய அரசு முடிவு 
    இந்த ஒப்பந்தம் முடிந்து விமானங்கள் தயாரிக்க குறைந்தது 10 ஆண்டுகள் ஆகலாம்.

    மேலும் 97 தேஜாஸ் விமானங்கள், 156 பிரசாந்த் தாக்குதல் ஹெலிகாப்டர்களை வாங்க இந்திய அரசு முடிவு 

    எழுதியவர் Sindhuja SM
    Nov 30, 2023
    03:34 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய இராணுவத்தின் பலத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக 97 கூடுதல் தேஜாஸ் விமானங்கள் மற்றும் 156 பிரசாந்த் தாக்குதல் ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கு பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.

    இவை இரண்டுமே உள்நாட்டில் தயாரிக்கப்பட இருக்கும் விமானங்கள் ஆகும். மேலும், இந்த ஒப்பந்தங்களின் மதிப்பு சுமார் ரூ.1.1 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

    தேஜாஸ் மார்க் 1-ஏ போர் விமானங்கள் இந்திய விமானப்படைக்காகவும், பிரசாந்த் தாக்குதல் ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படை மற்றும் இராணுவத்திற்காகவும் வாங்கப்பட இருக்கிறது.

    கூடுதலாக சில ஒப்பந்தங்களுக்கும் பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. இதற்கான மொத்த மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் கோடியாகும்.

    டவ்ட்ஜ்க்

    விமானங்கள் எப்போது இராணுவத்தின் கையில் கிடைக்கும்?

    இந்த ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டால், இந்திய வரலாற்றில் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பெற்ற மிகப்பெரிய ஆர்டராக இது இருக்கும்.

    தற்போது போடப்பட்டிருக்கும் இந்த ஒப்பந்தம் ஒரு முதற்கட்ட மதிப்பீடு மட்டுமே. இதன்பிறகு, உற்பத்தியாளர்களுடன் ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் நடைபெறும்.

    அந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, எல்லாம் சரியாக வந்து, இரு தரப்பும் ஒப்புக்கொண்டால் மட்டுமே இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்படும்.

    அதற்கு சில வருடங்கள் கூட ஆகலாம். ஆனால், வெளிநாட்டு உற்பத்தியாளர்களிடம் ஒப்பந்தம் போட்டால் ஆகும் கால அளவை விட இது குறைவாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

    இறுதி விலை தீர்மானிக்கப்பட்டவுடன், பாதுகாப்பு அமைச்சரவை குழு கடைசி கையெழுத்தை போட்டு இந்த ஒப்பந்தத்தை உறுதி செய்யும்.

    எனவே, இந்த ஒப்பந்தம் முடிந்து விமானங்கள் தயாரிக்க குறைந்தது 10 ஆண்டுகள் ஆகலாம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    இந்திய ராணுவம்
    விமானப்படை
    மத்திய அரசு

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    இந்தியா

    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம் கொரோனா
    தெரிந்து கொள்ளுங்கள்- ஏன் ஏசி பெட்டிகள் எப்போதும் ரயிலின் நடுவில் இருக்கிறது? ரயில்கள்
    தேசிய மருத்துவ ஆணையத்தின் லோகோவில் இந்தியாவின் பெயர் 'பாரத்' என மாற்றம் பாரத்
    ஆடை நிறுவனத்தை புதுப்பொலிவுடன் ரீலான்ச் செய்த விஜய் தேவரகொண்டா நடிகர்

    இந்திய ராணுவம்

    'ஏரோ இந்தியா 2023' சர்வதேச விமான கண்காட்சி - பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார் மோடி
    இந்திய ராணுவத்தில் விரைவில் AI - என்னென்ன பயன்கள்? செயற்கை நுண்ணறிவு
    சீன எல்லையில் உள்ள பாதுகாப்பு படைகளுக்கு தலைமை தாங்க இருக்கும் பெண் அதிகாரிகள் இந்தியா
    அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது இந்தியா

    விமானப்படை

    மத்திய பிரதேசத்தில் விபத்துக்குள்ளான இந்திய விமானப்படை விமானங்கள் விமானம்
    மத்திய பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தானிலும் இந்திய விமானப்படை விமானம் விபத்து மத்திய பிரதேசம்
    வரலாறு படைத்த INS விக்ராந்த்: முதன்முதலில் விகாரந்த் கப்பலில் தரையிறங்கிய ஜெட் இந்தியா
    விமானப்படையில் அக்னி வீரராக சேர விருப்பமுள்ளவர்கள் மார்ச் 31ம் தேதி வரை பதிவு செய்யலாம் என அறிவிப்பு இந்தியா

    மத்திய அரசு

    LGBTQIA+ தம்பதிகளின் உரிமைகளை முடிவு செய்ய குழு அமைக்க உத்தரவு உச்ச நீதிமன்றம்
    ஒரே பாலின தம்பதிகளின் நடைமுறை பிரச்சனைகளை தீர்க்க அறிவுறுத்தியது உச்ச நீதிமன்றம்  இந்தியா
    ஆதார் தகவல் மூலம் பணம் திருட்டு.. தடுப்பது எப்படி? இந்தியா
    மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்த ஒப்புதல் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025