NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவின் முதல் தண்ணீர் மெட்ரோ திட்டம்.. 'கொச்சி வாட்டர் மெட்ரோ' 
    இந்தியாவின் முதல் தண்ணீர் மெட்ரோ திட்டம்.. 'கொச்சி வாட்டர் மெட்ரோ' 
    1/2
    இந்தியா 1 நிமிட வாசிப்பு

    இந்தியாவின் முதல் தண்ணீர் மெட்ரோ திட்டம்.. 'கொச்சி வாட்டர் மெட்ரோ' 

    எழுதியவர் Prasanna Venkatesh
    Apr 25, 2023
    09:57 am
    இந்தியாவின் முதல் தண்ணீர் மெட்ரோ திட்டம்.. 'கொச்சி வாட்டர் மெட்ரோ' 
    இந்தியாவின் முதல் தண்ணீர் மெட்ரோ

    கேரளாவின் கனவுத் திட்டம் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் குறிப்பிட்ட 'கொச்சி வாட்டர் மெட்ரோ' திட்டத்தை இன்று கொடியசைத்து துவக்கி வைக்கவிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. கொச்சி மற்றும் அதனைச் சுற்றி அமைந்துள்ள பத்து தீவுகளை இணைக்கும் வகையில் 38 முனையங்கள் மற்றும் 78 எலெக்ட்ரிக் படகுகளுடன் ரூ.1,136 கோடியில் செயல்படுத்தப்பட்டிருக்கிறது இந்தத் திட்டம். கடந்த நூற்றாண்டில் 90% கேரள மக்கள் சிறிய படகுகளைப் போக்குவரத்திற்குப் பயன்படுத்தி வந்தனர். ஆனால், தற்போது புதிய பாலங்கள் மற்றும் சாலைகளின் கட்டமைப்பு படகுப்போக்குவரத்தை 3%-மாகக் குறைத்துவிட்டது. சாலைகளில் வாகன நெரிசலைக் குறைப்பது, அதன் மூலம் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுப்பது எனப் பல வழிகளில் இந்த கொச்சி வாட்டர் மெட்ரோ கேரளாவிற்கு பயனுள்ளதாக இருக்கும்.

    2/2

    கொச்சி வாட்டர் மெட்ரோ (Kochi Water Metro): 

    இந்தத் திட்டத்தின் கீழ் பயன்படுத்தப்படவிருக்கும் 78 படகுகளுமே பேட்டரியால் இயங்கும் வகையிலான எலெக்ட்ரிக் ஹைபிரிட் வகையைச் சேர்ந்தவையே. இந்தப் படகுகளில் லித்தியம் டைட்டனேட் ஆக்ஸைடு பேட்டரிக்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதனைக் குறிப்பிட்ட வகையில் 15 நிமிடத்தில் மிக வேமகாக சார்ஜ் செய்து விட முடியுமாம். இந்த பேட்டரிக்களின் ஆயுட்காலம் 7 முதல் 10 ஆண்டுகள். உலகிலேயே வணிக ரீதியான பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் நீண்ட ஆயுட்காலம் கொண்ட, அதே நேரம் பாதுகாப்பான பேட்டரிக்கள் இவை. ஒவ்வொரு படகும் 50 பயணிகளை ஏற்றிச்செல்லும் திறனுடன் இருக்கின்றன. இவற்றில் 23 படகுகள் 100 பயணிகள் வரை ஏற்றிச் செலுக்கும் திறனைக் கொண்டிருக்கின்றன. 76 கிமீ தூரத்திற்கு 15 வழித்தடங்களில் இந்தப் படகுகள் இயக்கப்படவிருக்கின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    கேரளா
    பினராயி விஜயன்
    நரேந்திர மோடி

    கேரளா

    இந்தியாவின் முதல் நீர் வழி மெட்ரோ: நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி இந்தியா
    2 நாள் பயணமாக கேரளா வர இருக்கும் பிரதமர் மோடி இந்தியா
    கேரளாவிற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக வருகிறார் பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    நடிகர் மம்மூட்டியின் தாயார் மறைவு - இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்  இந்தியா

    பினராயி விஜயன்

    கல்வியை காவி மயமாக்கும் செயல்: NCERT புத்தக பிரச்சனை குறித்து கேரள முதல்வர் கருத்து இந்தியா
    பெண்களின் பாதுகாப்பு குறித்து பொய் பிரச்சாரம் செய்வதை சகித்துக்கொள்ள முடியாது: கேரள முதல்வர் கேரளா
    வைக்கம் விழாவை பினராயி விஜயன், மு.க.ஸ்டாலின் இணைந்து தொடங்கி வைக்க இருக்கின்றனர் ஸ்டாலின்
    'தி கேரளா ஸ்டோரி' கதையை உண்மை என்று நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு: முஸ்லீம் யூத் லீக் சவால்  கேரளா

    நரேந்திர மோடி

    ராகுல் காந்தியின் தண்டனைக்கு இடைக்கால தடை: பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவு  இந்தியா
    சூடானில் சிக்கியுள்ள இந்தியர்கள் பிரச்சனை: பிரதமர் மோடி ஆலோசனை இந்தியா
    14,300 கோடி மதிப்பிலான திட்டங்களை அசாமில் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி  இந்தியா
    மீண்டும் பிபிசி நிறுவனத்தில் சோதனை: அமலாக்க இயக்குநரகம் நடவடிக்கை  இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023