NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அணு ஆயுதத்தை காட்டி இனி மிரட்ட முடியாது; பாகிஸ்தான் வெள்ளைக்கொடி காட்டியதன் பின்னணி இதுதானா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    அணு ஆயுதத்தை காட்டி இனி மிரட்ட முடியாது; பாகிஸ்தான் வெள்ளைக்கொடி காட்டியதன் பின்னணி இதுதானா?
    அணு ஆயுதத்தை காட்டி இனி மிரட்ட முடியாது; பாகிஸ்தான் வெள்ளைக்கொடி காட்டியதன் பின்னணி

    அணு ஆயுதத்தை காட்டி இனி மிரட்ட முடியாது; பாகிஸ்தான் வெள்ளைக்கொடி காட்டியதன் பின்னணி இதுதானா?

    எழுதியவர் Sekar Chinnappan
    May 12, 2025
    04:07 pm

    செய்தி முன்னோட்டம்

    மே 10 அன்று ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியாவின் துல்லியமான விமானத் தாக்குதல்கள் பாகிஸ்தானின் வான்வழித் திறன்களுக்கு ஒரு தீர்க்கமான அடியைக் கொடுத்தன.

    மேலும், இது இந்தியாவின் இராணுவக் கோட்பாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கின்றன.

    இந்திய விமானப்படை (IAF) பாகிஸ்தானுக்குள் உள்ள 11 ராணுவ பயன்பாட்டிற்கான விமானத் தளங்களை, குறிப்பாக ரஃபிகி, நூர் கான், சியால்கோட் மற்றும் முஷாஃப் போன்ற முக்கியமான விமானத் தளங்களை, வான்வழித் துல்லிய ஆயுதங்களைப் பயன்படுத்தி குறிவைத்தது.

    அழிக்கப்பட்ட ஹேங்கர்கள், செயலிழந்த ரேடார்கள் மற்றும் ஓடுபாதைகளில் உள்ள பள்ளங்கள் உள்ளிட்ட விரிவான சேதத்தை செயற்கைக்கோள் படங்கள் உறுதிப்படுத்தின.

    குறிப்பாக, ராவல்பிண்டிக்கு அருகில் அமைந்துள்ள நூர் கான் விமானத் தளத்தின் மீதான தாக்குதல் ஒரு சக்திவாய்ந்த செய்தியை அனுப்பியது.

    அணு ஆயுதம் 

    மூலோபாய அணு ஆயுத மையங்கள்

    நூர் கான் விமான தளம் பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை கட்டுப்படுத்தும் தேசிய கட்டளை ஆணையம் அமைந்துள்ள பகுதியாகும்.

    மேலும், சர்கோதாவில் உள்ள முஷாஃப் விமானப்படை தளத்தின் ஓடுபாதையில் தாக்குதல் நடத்தப்பட்டதாக செயற்கைக்கோள் படங்கள் சுட்டிக்காட்டின.

    இந்த தளம் கிரானா மலைகளுக்கு அடியில் உள்ள நிலத்தடி அணுஆயுத சேமிப்பு தளங்களுடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது.

    இங்கு பூமியை கிழித்துக் கொண்டு ஊடுருவி சென்று தாக்கும் ஆயுதங்கள் இந்தியாவால் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    பாகிஸ்தான் அணு ஆயுதத்தைக் காட்டி இந்தியாவை எப்போதும் மிரட்டும் நிலையில், அந்த அணு ஆயுதங்கள் அமைந்துள்ள இடங்களின் மீதே இந்தியா தாக்குதல் நடத்தியும், பாகிஸ்தானால் எதுவும் செய்ய முடியவில்லை.

    அணுக்கசிவு

    அணுக்கசிவு குறித்து அச்சம்

    இந்தியாவின் தாக்குதலால் பாகிஸ்தான் நிலைகுலைந்து போன நிலையில், சம்பந்தப்பட்ட இடங்களில் அணுக்கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சமும் ஏற்பட்டது.

    இவை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாவிட்டாலும், அமெரிக்காவின் அணுக்கசிவை ஆராயும் விமானம் பாகிஸ்தானில் தரையிறங்கி உள்ள தகவல் வெளியாகி, இதை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது.

    இதன் பின்னரே, பாகிஸ்தான் அமெரிக்கா மூலம் இந்தியாவிடம் மன்றாடி தாக்குதலை நிறுத்தும் முடிவிற்கு வந்ததாக கூறப்படுகிறது.

    அமெரிக்க மத்தியஸ்தத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தான் டிஜிஎம்ஓ தனது இந்திய பிரதிநிதியைத் தொடர்பு கொண்டு போர் நிறுத்தத்தை முன்மொழிந்தார்.

    இந்தியாவின் புதிய கோட்பாடு இப்போது எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஒரு போர்ச் செயலாகக் கருதுகிறது.

    இதற்கிடையே, பாகிஸ்தானின் அணு ஆயுத நிலைகளை குறிவைத்து எந்த தாக்குதலும் நடத்தவில்லை என இந்திய விமானப்படை விளக்கம் அளித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பாகிஸ்தான்
    அணு ஆயுதங்கள்

    சமீபத்திய

    ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி
    ஜாக்டோ-ஜியோ போராட்டம்: ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து -பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு பள்ளிக்கல்வித்துறை
    அணு ஆயுதத்தை காட்டி இனி மிரட்ட முடியாது; பாகிஸ்தான் வெள்ளைக்கொடி காட்டியதன் பின்னணி இதுதானா? இந்தியா
    பாகிஸ்தானின் அணு உலையை இந்தியா தாக்கியதா: IAF விளக்கம் விமானப்படை

    இந்தியா

    இந்தியா-பாகிஸ்தான் பதட்டத்திற்கு ராணுவ தலைவர் அழைக்கவிருக்கும் பொதுமக்களோடு கலந்திருக்கும் பிராந்திய இராணுவம் யார்? இந்திய ராணுவம்
    ஜம்மு, சம்பா, பதான்கோட் பகுதிகளில் பாகிஸ்தானிய ட்ரோன்கள்; அமிர்தசரஸை உலுக்கிய பலத்த வெடி சத்தம் ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை பாகிஸ்தான்
    தனது மூன்று விமானப்படை தளங்கள் மீது இந்தியா 'ஏவுகணை தாக்குதல்' நடத்தியதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு பாகிஸ்தான்

    பாகிஸ்தான்

    இந்தியாவின் பதிலடியால் பலத்த சேதம்; உலக நாடுகளிடம் நிதி வேண்டி கையேந்தி நிற்கும் பாகிஸ்தான் பொருளாதாரம்
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் காரணமாக CA தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன தேர்வு
    பாகிஸ்தான் விமானப்படையின் AWAC-ஐ நேற்றிரவு இந்தியா சுட்டு வீழ்த்தியது: அதன் சிறப்புகள் என்ன? இந்தியா
    இந்தியாவின் மேம்பட்ட பாதுகாப்பு அரண்: பாகிஸ்தானின் தாக்குதலை இந்தியா எவ்வாறு முறியடித்தது? இந்தியா

    அணு ஆயுதங்கள்

    அணுகுண்டு பரவலுக்கு எதிராக போராடும் ஜப்பான் அமைப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு நோபல் பரிசு
    கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உக்ரைன் மீது ஏவிய ரஷ்யா; அடுத்து அணு ஆயுதமா? ரஷ்யா
    ரஷ்யாவின் அணுசக்தி பாதுகாப்பு படைகளின் தலைவர் வெடிகுண்டு வைத்து கொல்லப்பட்டார் ரஷ்யா
    டிரம்ப் எச்சரிக்கையால் ஆத்திரம்; ஏவுகணைகளுடன் தாக்குதலுக்கு தயாராகும் ஈரான் ஈரான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025