NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்த 75 ஆண்டுகளில் இந்தியா சாதித்தது என்ன?-மருத்துவ வளர்ச்சி
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்த 75 ஆண்டுகளில் இந்தியா சாதித்தது என்ன?-மருத்துவ வளர்ச்சி
    75 ஆண்டுகளில் இந்தியா சாதித்தது என்ன?

    இந்த 75 ஆண்டுகளில் இந்தியா சாதித்தது என்ன?-மருத்துவ வளர்ச்சி

    எழுதியவர் Prasanna Venkatesh
    Aug 15, 2023
    07:30 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியா வளர்ச்சியடைந்த முக்கியமான துறைகளுள் ஒன்று மருத்துவம். பிற தேவைகளைப் போல, மருந்துகளுக்கும் பிற நாடுகளைச் சார்ந்தே இருந்தது இந்தியா. வெளிநாட்டு சார்பைத் தவிர்த்து, அதன் விலைகளும் மிகவும் அதிகமாக இருந்தன.

    இதனை மாற்றி, மருத்து தயாரிப்புலும் தன்னிறைடைய 1954-ல் ஹிந்துஸ்தான ஆண்டிபயாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் நிறுவப்பட்டது.

    மருந்துத் தயாரிப்பை மேம்படுத்தும் பொருட்டு, National Chemicals Laboratory, Regional Research Laboratory Hyderabad மற்றும் Central Drug Research Institute ஆகிய அமைப்புகளும் நிறுவப்பட்டன. மருந்து தயாரிப்பிற்கு தேவையான அறிவு மற்றும் மனித வளத்தை வழங்குவதில் முக்கியப் பங்காற்றியது மத்திய அரசு.

    மருத்துவம்

    இந்திய மருத்துவத் துறையின் வளர்ச்சி: 

    இன்று இந்தியாவிற்குத் தேவையான அனைத்து வகையான மருந்துகளையும் உள்நாட்டிலேயே தயாரிக்கும் திறனைக் கொண்டிருக்கிறது இந்தியா.

    அது மட்டுமல்ல, பல்வேறு வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் உலக நாடுகளும் கூட மருந்துகளின் தேவைக்கு இந்தியாவின் இறக்குமதிகளைச் சார்ந்திருக்கும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது. பல்வேறு உலக நாடுகள், மருந்துகளின் தேவைக்கு இந்தியாவைச் சார்ந்திருப்பதற்கு, இந்தியா குறைந்த விலைகளில் மருந்துகளைத் தயாரிப்பது ஒரு காரணம்.

    இன்று 'உலகின் மருந்தகம்' (Pharmacy of the World) என்று அழைக்கப்படுகிறது இந்தியா. உலகளாவிய பெருந்தொற்றாக கொரோனா உறுப்பெற்ற போது, சுயமாக தடுப்பூசிகளைக் கண்டறிந்து உருவாக்கிய நாடுகளுள் இந்தியாவும் ஒன்று.

    கொரோனாவுக்கான தடுப்பூசிகளைக் கண்டறிந்தது மட்டுமல்லாது, பல்வேறு வளர்ந்து வரும் நாடுகளுக்கும் அதனைக் குறைந்த விலையில் இந்தியா பகிர்ந்தளித்தது குறிப்பிடத்தக்கது.

    அணு ஆயுதம்

    இந்திய அணு ஆயுதம்: 

    உலகில் அணு ஆயுதங்களைக் கொண்டிருக்கும் ஒன்பதே ஒன்பது நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பாகிஸ்தான் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் அணு ஆயுதங்களைய உருவாக்கி வந்த நிலையில், நாட்டின் பாதுகாப்பிற்காக இந்தியாவும் அணு ஆயுதங்களை உருவாக்க வேண்டிய தேவை இந்தியாவிற்கு இருந்தது.

    அணு ஆயுதங்களை பிற நாடுகள் உருவாக்க உலக நாடுகல் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், சொந்தமாக அணு ஆயுதத் தொழில்நுட்பத்தை உருவாக்கி 1974-ல் 'சிரிக்கும் புத்தா' என்ற பெயரில் முதல் அணு ஆயுத சோதனையை நடத்தியது இந்தியா.

    1998-ல் இரண்டானது அணு ஆயுத சோதனையையும் இந்தியா நடத்திய நிலையில், எக்காரணத்தைக் கொண்டு அணு ஆயுதத்தை இந்தியா முதலில் பயன்படுத்தாது என்ற கொள்கையையும் கடைப்பிடித்து வருகிறது இந்தியா.

    இந்தியா

    பிற துறைகளில் இந்தியாவின் வளர்ச்சி: 

    1980-கள் வரை ஒவ்வொரு துறையிலும் அடித்தளத்தை பலமாக அமைத்து, 1980-களுக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சியடையத் தொடங்கியது இந்தியா.

    சிறிய கண்டுபிடிப்புகள் முதல் பெரிய கண்டுபிடிப்புகள் வரை ஒவ்வொன்றும், இந்தியாவின் அந்தந்தத் துறைகளின் வளர்ச்சிக்கு வித்திட்டன.

    1983-ல் அன்டார்டிகாவின் அறிவியல் ஆராய்ச்சி மையத்தை நிறுவியது இந்தியா. இந்தியாவில் தொலைத்தொடர்பு வசதிகளின் மேம்பாடு மற்றும் பயன்பாட்டிற்காக C-DOT அமைப்பு 1984-ல் நிறுவப்பட்டது.

    1986-ல் உலகின் மிகப்பெரிய நிறுவனங்களுள் ஒன்றான இந்திய ரயில்வே துறையில், பயணிகள் முன்பதிவுத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. தகவல் தொழில்நுட்பத்துறையில் இது இந்தியாவின் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

    இந்தியா

    அடுத்த இலக்கு:

    1986-லேயே இந்தியாவின் முதல் சோதனைக் குழாய் குழந்தையான ஹர்ஷாவும் பிறந்தது. இது இந்தியாவின் மருத்துவத் துறையில் ஒரு முன்னோடியாகப் பார்க்கப்படுகிறது.

    1991-ல் சட்ட ரீதியிலான தீர்ப்பு வழங்க DNA கைரேகைகள் ஒரு முக்கிய ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. இது இந்தியாவில் தடயவியல் துறை மற்றும் மரபணு ஆராய்ச்சிகளின் மேம்பாடுகளுக்கு வித்திட்டது.

    இன்னும் பல்வேறு துறைகளில் இந்தியா முன்னேற வேண்டியிரு்நதாலும், கடந்த 75 ஆண்டுகளில் இந்தியா கடந்து வந்த பாதை மிகவும் அசாத்தியமானது.

    சுதந்திரத்திற்குப் பிறகு, 1960 மற்றும் 1970-களில் போடப்பட்ட விதைகள் இன்று மரமாகி நிற்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அடுத்த கட்டமாக இந்தியா@100 என்ற இலக்கை நோக்கி தற்போது முன்னேறத் தொடங்கியிருக்கிறது இந்தியா.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மருத்துவம்
    இந்தியா
    மருத்துவ ஆராய்ச்சி
    பாதுகாப்பு துறை

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    மருத்துவம்

    AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் மனநல சிகிச்சை.. புதிய ஆய்வு! செயற்கை நுண்ணறிவு
    இந்தியாவின் முதல் அரசு கருத்தரிப்பு மையம் தமிழகத்தில் தொடங்கப்பட இருக்கிறது இந்தியா
    மரபணு மாற்றப்பட்ட கொசுக்கள் மூலமாக மலேரியாவை ஒழிக்க முடியும்! மலேரியா
    தேசிய மருத்துவர் தினம் 2023: வரலாறும் முக்கியத்துவமும் இந்தியா

    இந்தியா

    இந்திய கொரோனா நிலவரம்: ஒரே நாளில் 25 பேருக்கு பாதிப்பு கொரோனா
    போன்பே மற்றும் கூகுள்பே சேவைத் தளங்களுக்கு சவாலாக அறிமுகமாகியிருக்கும் யுபிஐ பிளக்இன் யுபிஐ
    பெப்பர்ஃபிரை நிறுவனத்தின் துணை நிறுவனர் அம்பரீஷ் மூர்த்தி காலமானார் வணிகம்
    5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு இந்திரதனுஷ் தடுப்பூசி திட்டம் மருத்துவத்துறை

    மருத்துவ ஆராய்ச்சி

    சித்தமருத்துவர் ஷர்மிகா மீது புகார்-இந்திய மருத்துவ இயக்குனரகம் நோட்டிஸ் சமூக வலைத்தளம்
    சோயா பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் உடல் நலம்
    பிறந்த குழந்தைகளுக்கு முக்கியமாக செய்ய வேண்டிய 3 'ஸ்க்ரீனிங்' சோதனைகள் குழந்தை பராமரிப்பு
    புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் இந்தியாவை தாக்கும் அபாயம்: அமெரிக்கா புற்றுநோயியல் நிபுணர் உடல் ஆரோக்கியம்

    பாதுகாப்பு துறை

    மத்திய பிரதேசத்தில் விபத்துக்குள்ளான இந்திய விமானப்படை விமானங்கள் விமானம்
    இந்தியாவின் மேல் பறந்து கொண்டிருந்த அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் இந்தியா
    நடிகர்கள் அமிதாப் பச்சன் மற்றும் தர்மேந்திராவின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் மும்பை
    SCO பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம்: ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025