NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வெள்ளத்தில் இமாச்சலப் பிரதேசம்: கடும் மழையால் மக்கள் அவதி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    வெள்ளத்தில் இமாச்சலப் பிரதேசம்: கடும் மழையால் மக்கள் அவதி 
    இமாச்சலப் பிரதேச மாநிலத்திற்கு நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ள அபாய எச்சரிக்கையையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    வெள்ளத்தில் இமாச்சலப் பிரதேசம்: கடும் மழையால் மக்கள் அவதி 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 09, 2023
    12:49 pm

    செய்தி முன்னோட்டம்

    இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அடுத்த 48 மணி நேரத்திற்கு இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஏழு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மேலும், 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், இரண்டு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    இது தவிர, இமாச்சலப் பிரதேச மாநிலத்திற்கு நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ள அபாய எச்சரிக்கையையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    "சம்பா, காங்க்ரா, குலு, மண்டி, உனா, ஹமிர்பூர் மற்றும் பிலாஸ்பூர் மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும். சிம்லா, சோலன் மற்றும் சிர்மௌர் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது" என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சஜிக்க்

    நிலச்சரிவில் சிக்கிய கல்லூரி மாணவர்கள் 30 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்

    இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா, லாஹவுல், ஸ்பிதி, சம்பா மற்றும் சோலன் மாவட்டங்களில் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக பல சாலைகள் தடைப்பட்டுள்ளன.

    அம்மாநிலத்தின் கிராம்பு கிராமம் மற்றும் சோட்டா தர்ரா ஆகிய இடங்களில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கித் தவித்த கல்லூரி மாணவர்கள் 30 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    நேற்று, சோலன் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் ஆறு வீடுகள் சேதமடைந்தன. இந்த சம்பவத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதற்கிடையில், இமாச்சல பிரதேசத்தின் சிம்லாவில் இன்று பெய்த கனமழையால் ஒரு வீடு இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர், மேலும் இருவர் காயமடைந்தனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஹிமாச்சல பிரதேசம்
    கனமழை
    வானிலை எச்சரிக்கை

    சமீபத்திய

    சிரஞ்சீவியுடன் நடிக்கும் படத்திற்கு நயன்தாராவின் சம்பளம் இவ்வளவா? நயன்தாரா
    போர் நிறுத்தத்திற்குப் பிறகு, வாரத்தின் முதல்நாளில் வளர்ச்சியுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள் பங்குச் சந்தை
    எல்லை மற்றும் கடலோர கண்காணிப்புக்காக எந்நேரமும் இயங்கும் 10 செயற்கைக்கோள்கள்; இஸ்ரோ தலைவர் வெளியிட்ட தகவல் இஸ்ரோ
    இந்தியா, பாகிஸ்தான் உயர் ராணுவ அதிகாரிகள் இன்று நண்பகல் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் இந்தியா

    ஹிமாச்சல பிரதேசம்

    அதானி வில்மர் நிறுவனத்தில் அதிரடி ரெய்டு! சிக்கியது என்ன? தொழில்நுட்பம்
    90,000 ரூபாய் மதிப்புள்ள ஸ்கூட்டிக்கு 1 கோடி செலவழித்த நபர்! மாநிலங்கள்
    அமெரிக்காவில் பிறந்த சிறுவனை பௌத்தத்தின் 3வது உயர்ந்த தலைவராக தலாய் லாமா அறிவித்தார் அமெரிக்கா
    இமாச்சல் வரை பரவிய H3N2 வைரஸ்: 10 வார குழந்தைக்கு பாதிப்பு இந்தியா

    கனமழை

    கனமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் நெல் அறுவடை பாதிப்பு - விவசாயிகள் கவலை தமிழ்நாடு
    அடுத்த 5 நாட்களுக்கு கேரளாவில் கனமழை எச்சரிக்கை!  கேரளா
    மிகக் கடுமையான புயலாக வலுப்பெற இருக்கும் மோக்கா புயல்: மேற்கு வங்கத்திற்கு எச்சரிக்கை இந்தியா
    தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு

    வானிலை எச்சரிக்கை

    தமிழக மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை - கனமழைக்கு வாய்ப்பு! வானிலை அறிக்கை
    -4°C வெப்பநிலை: வட இந்தியாவில் வரலாறு காணாத குளிர் வரப்போகிறது இந்தியா
    தமிழகத்தில் மழை; பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை இலங்கை
    இந்த வருடம் வறட்சி ஏற்படுவதற்கு வாய்ப்ப: நிபுணர்கள் எச்சரிக்கை இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025