NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 கடற்படை வீரர்கள் வழக்கில் இந்தியா மேல்முறையீடு
    அடுத்த செய்திக் கட்டுரை
    கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 கடற்படை வீரர்கள் வழக்கில் இந்தியா மேல்முறையீடு
    கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 கடற்படை வீரர்கள் வழக்கில் இந்தியா மேல்முறையீடு

    கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 கடற்படை வீரர்கள் வழக்கில் இந்தியா மேல்முறையீடு

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 09, 2023
    06:11 pm

    செய்தி முன்னோட்டம்

    அறியப்படாத காரணங்களுக்காக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட எட்டு கடற்படை வீரர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிராக கத்தார் அதிகாரிகளிடம் இந்தியா மேல்முறையீடு செய்துள்ளது.

    இந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட எட்டு பேரும், இந்திய போர்க்கப்பல்களுக்கு தலைமை தாங்கிய அலங்கரிக்கப்பட்ட அதிகாரிகள் ஆவர்.

    அதிலிருந்து பணி ஓய்வு பெற்ற பிறகு, தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டன்சி சர்வீசஸ் எனப்படும் கத்தார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர்.

    இந்த நிறுவனம், கத்தாரின் ஆயுதப் படைகளுக்கு பயிற்சி மற்றும் தொடர்புடைய சேவைகளை வழங்கும் ஒரு தனியார் நிறுவனமாகும்.

    ஊடக செய்திகள்படி, குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீர்மூழ்கி கப்பல் பற்றிய அரசாங்க தகவல்களை கசிய விட்டதாகவும், இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    card 2

    செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் 

    இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், இந்தியா அரசு ஏற்கனவே மேல்முறையீடு செய்துள்ளது எனக்கூறினார்.

    இந்த தீர்ப்பால் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளதாக இந்திய அரசு முன்னதாக கூறியிருந்தது.

    செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், வழக்கு விவரங்கள் இன்னும் அரசிற்கு கிடைக்கவில்லை என்றும்,

    "இந்த தீர்ப்பு ரகசியமானது... சட்டக் குழுவுடன் மட்டுமே பகிரப்பட்டுள்ளது. நாங்கள் இப்போது சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்." என அவர் தெரிவித்தார்.

    தண்டனை விதிக்கப்பட்டவர்களில் நவ்தேஜ் சிங் கில், பிரேந்திர குமார் வர்மா மற்றும் சௌரப் வசிஷ்ட் ஆகியோர், கடற்படையில் கேப்டன் பதவி வகித்தவர்கள் மற்றும் அமித் நாக்பால், பூர்ணேந்து திவாரி, சுகுணாகர் பகாலா, சஞ்சீவ் குப்தா ஆகியோர் தளபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கடற்படை
    கத்தார்

    சமீபத்திய

    EPFO 3.0: ஜூன் 2025இல் அமலுக்கு வரும் புதிய திட்டம்; விரைவில் கிளைம் பணத்தை ஏடிஎம்மிலேயே பெறலாம் வருங்கால வைப்பு நிதி
    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்
    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை

    கடற்படை

    வரலாறு படைத்த INS விக்ராந்த்: முதன்முதலில் விகாரந்த் கப்பலில் தரையிறங்கிய ஜெட் இந்தியா
    மீன்பிடி பைபர் படகில் கடத்திவரப்பட்டு கடலில் வீசப்பட்ட மர்ம பொருள்-விசாரணையில் தங்கம் என தகவல் இலங்கை
    ராமேஸ்வர கடலில் வீசப்பட்ட கடத்தல் தங்கக்கட்டிகள்-12 கிலோ தங்கம் பறிமுதல் ராமேஸ்வரம்
    தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படை - மத்தியமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் இலங்கை

    கத்தார்

    உளவு பார்த்ததாக 8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதித்தது கத்தார் மரண தண்டனை
    கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்களின் குடும்பத்தினரை சந்தித்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025