NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தேர்தல் ஆணையத்திடம் 5 கோரிக்கைகளை முன் வைத்தது 'இண்டியா' கூட்டணி கட்சிகள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தேர்தல் ஆணையத்திடம் 5 கோரிக்கைகளை முன் வைத்தது 'இண்டியா' கூட்டணி கட்சிகள் 

    தேர்தல் ஆணையத்திடம் 5 கோரிக்கைகளை முன் வைத்தது 'இண்டியா' கூட்டணி கட்சிகள் 

    எழுதியவர் Sindhuja SM
    Mar 31, 2024
    08:43 pm

    செய்தி முன்னோட்டம்

    தேர்தலுக்கு முன்னதாக இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி (இண்டியா) கட்சிகள் தங்களது ஐந்து கோரிக்கைகளை தேர்தல் ஆணையத்திடம் முன் வைத்துள்ளனர்.

    இன்று டெல்லியில் நடைபெற்ற லோக்தந்த்ரா பச்சாவோ(ஜனநாயகத்தை காப்பாற்றுவோம்) பேரணியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா தங்களது கூட்டணியின் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்தார்.

    தனித்தனி பணமோசடி வழக்குகளில் அமலாக்க இயக்குனரகத்தால் (ED) கைது செய்யப்பட்ட ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகிய இருவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் அதில் அடங்கும்.

    டெல்லி மதுபான கொள்கை தொடர்புடைய பணமோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்க இயக்குனரகம் (ED) மார்ச் 21 அன்று கைது செய்தது.

    டெல்லி

    தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக திரட்டிய நிதி குறித்து  விசாரிக்க கோரிக்கை 

    இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இண்டியா கூட்டணி கட்சிகளின் உயர்மட்டத் தலைவர்கள் இன்று டெல்லியில் 'லோக்தந்திர பச்சாவ்' பேரணியை நடத்தினர்.

    தேர்தலுக்கு முன் நியாயமான முறையில் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்றும், எதிர்க்கட்சிகளின் நிதியை சீர்குலைக்கும் முயற்சிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் இண்டியா கூட்டணி கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

    கூடுதலாக, ED, மத்திய புலனாய்வுப் பிரிவு(சிபிஐ) மற்றும் வருமான வரித் துறையின் நடவடிக்கைகளை நிறுத்துமாறு பிரியங்கா வத்ரா அழைப்பு விடுத்துள்ளார்.

    கடைசியாக, தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக திரட்டிய நிதி குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    தேர்தல் ஆணையம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    டெல்லி

    பஞ்சாப்-ஹரியானா எல்லையில் கண்ணீர்புகை குண்டுகள் வீச்சு: 5வது கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது அரசாங்கம்  பஞ்சாப்
    விவசாயிகளின் பேரணி பிப்ரவரி 29 வரை இடைநிறுத்தம் விவசாயிகள்
    5 மாநிலங்களில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஆம் ஆத்மி
    டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் சிபிஐ அனுப்பிய சம்மனை நிராகரித்தார் பிஆர்எஸ் தலைவர் கே.கவிதா இந்தியா

    தேர்தல் ஆணையம்

    5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம் இந்தியா
    ராஜஸ்தான் தேர்தல் தேதி திடீர் மாற்றம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு  இந்தியா
    நவம்பர் 4,5ஆம் தேதிகளில் வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம்: தேர்தல் அதிகாரி அறிவிப்பு  சென்னை
    வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுவதும், 6.11 கோடி வாக்காளர்கள் வாக்காளர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025