NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / காலநிலை மாற்றத்தால் உயரும் வெப்பநிலையால் அதிகம் பாதிகப்படவிருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான்
    அடுத்த செய்திக் கட்டுரை
    காலநிலை மாற்றத்தால் உயரும் வெப்பநிலையால் அதிகம் பாதிகப்படவிருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான்
    காலநிலை மாற்றத்தால் உயரும் வெப்பநிலையால் அதிகம் பாதிகப்படவிருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான்

    காலநிலை மாற்றத்தால் உயரும் வெப்பநிலையால் அதிகம் பாதிகப்படவிருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Oct 10, 2023
    11:19 am

    செய்தி முன்னோட்டம்

    காலநிலை மாற்றத்தால் பூமியின் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதிகமான பசுமை இல்ல வாயுக்களின் வெளியீடு, காடுகள் அழிப்பு என காலநிலை தொடர்ந்து மாற்றமடைந்து வருவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

    இந்நிலையில், இதேபோல் பூமியின் வெப்ப நிலை தொடர்ந்து உயர்ந்து வந்தால், மனிதர்களின் உடல்நிலை எவ்வாறு பாதிப்படையும் என்பது குறித்த ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றனர் அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஸ்டேட் காலேஜ் மற்றும் பர்ட்யூ அறிவியல் பல்கலைக்கழகம் ஆகிய கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள்.

    தொழிற்புரட்சி காலத்திற்கு முன்பிருந்த வெப்பநிலையை விட பூமியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியல் வரை உயர்ந்தாலே மனிதர்களின் உடல்நிலை வெகுவாக பாதிகப்படும் என அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    காலநிலை மாற்றம்

    அதிகம் பாதிப்படையும் நாடுகள்: 

    தொழிற்புரட்சி காலத்திற்கு முன்பிருந்த வெப்பநிலையை விட பூமியின் வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்தால், இந்தியா, பாகிஸ்தான், சீனா மற்றும் கீழமை சாகர ஆப்பிரிக்க பகுதிகளில் வாழும் மக்கள் வெப்பத்தால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

    மேற்கூறிய அளவு பூமி வெப்பமடையும் பட்சத்தில், ஒரு நாளில் சில மணி நேரம் மனித உடலால் தாங்க முடியாத அளவு வெப்பநிலை நீடிக்கும். இதனால் ஹீட் ஸ்ட்ரோக் மற்றும் மாரடைப்பு உள்ளிட்ட உடல் நல பிரச்சினைகள் ஏற்படலாம் என அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், டெல்லி, கொல்கத்தா, ஷாங்காய், முல்தான், நாஞ்சிங் மற்றும் வூகான் ஆகிய நகரங்கள் வெப்பத்தால் அதிகமாக பாதிக்கப்படும் நகரங்களாக இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

    இந்தியா

    வெப்பநிலை 3 செல்சியஸ் வரை உயர்ந்தால்..? 

    பூமியின் வெப்பநிலையானது தொழிர்புரட்சி காலத்திற்கு முன்பிருந்த வெப்பநிலையை விட 3 டிகிரி செல்சியஸ் வரை உயரும் பட்சத்தில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் அதீத வெப்பத்தால் பாதிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், உயரும் இந்த வெப்பத்தால் குறைவான வருவாய் கொண்ட மக்கள் அதிகம் வாழும் நாடுகளையே அதிகம் பாதிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

    ஏனெனனில், குறைவான வருவாய் கொண்ட மக்களால் வெப்பத்திலிருந்து தங்களை காத்துக் கொள்வதற்கான உபகரணங்களை வாங்கவோ அல்லது அதிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வகையிலான கட்டமைப்புகளையோ ஏற்படுத்திக் கொள்ள முடியாது.

    இதன் காரணமாக இந்த அதீத வெப்பத்தால் ஏழை மக்களே அதிகம் பாதிக்கப்படவிருப்பதாகவும் மேற்கூறிய ஆய்வறிக்கையின் முடிவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    காலநிலை மாற்றம்
    சுற்றுச்சூழல்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    இந்தியா

    Sports Round Up : ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு ஹாட்ரிக் தங்கம்; மேலும் பல முக்கிய செய்திகள் ஆசிய விளையாட்டுப் போட்டி
    மும்பை குண்டுவெடிப்பில் தேடப்படும் குற்றவாளி ராணா நாடு கடத்தப்படுவதில் மேலும் தாமதம் அமெரிக்கா
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: அக்டோபர் 6 தங்கம் வெள்ளி விலை
    4வது முறையாக ரெப்போ ரேட்டில் மாற்றம் செய்யாத ரிசர்வ் வங்கி ரிசர்வ் வங்கி

    காலநிலை மாற்றம்

    பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து பரிணாம வளர்ச்சி, தனிம அட்டவணை நீக்கப்பட்டது   இந்தியா
    உலகின் அதிக வெப்பமான நாளாக பதிவு செய்யப்பட்ட ஜூலை 3 சுற்றுச்சூழல் பாதிப்புகள்

    சுற்றுச்சூழல்

    கிரேட்டா துன்பெர்கின் பதிவால் கைதானார் பாக்ஸர் ஆண்ட்ரூ டேட் - 9 மாதங்களாக போலீசாரால் தேடப்பட்டவர் உலக செய்திகள்
    நிபுணர்கள் பரிந்துரைக்கும் ஈக்கோ ஃபிரெண்ட்லி பர்னிச்சர் உபயோகிப்பதனால் ஏற்படும் நன்மைகள்! ஆரோக்கியம்
    9 லட்சம் வாகனங்களுக்கு ஏப்ரல் 1 முதல் தடை - நிதின் கட்கரி அறிவிப்பு நிதின் கட்காரி
    ஸ்டார்ட்-அப் துறையில் 3வது இடத்தில் இந்தியா - என்னென்ன முன்னேற்றங்கள்? தொழில்நுட்பம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025