NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ரஷ்ய-உக்ரைன் போருக்கு எதிரான புதுடெல்லி பிரகடனத்தில் என்ன கூறப்பட்டுள்ளது?
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரஷ்ய-உக்ரைன் போருக்கு எதிரான புதுடெல்லி பிரகடனத்தில் என்ன கூறப்பட்டுள்ளது?
    அணு ஆயுத அச்சுறுத்தல்கள் அனுமதிக்க முடியாததாக கருதப்படும் என்றும் இந்த பிரகடனம் கூறியுள்ளது.

    ரஷ்ய-உக்ரைன் போருக்கு எதிரான புதுடெல்லி பிரகடனத்தில் என்ன கூறப்பட்டுள்ளது?

    எழுதியவர் Sindhuja SM
    Sep 09, 2023
    06:10 pm

    செய்தி முன்னோட்டம்

    இன்று புது டெல்லியில் நடைபெற்று கொண்டிருக்கும் ஜி20 உச்சி மாநாட்டில் இந்தியா முன்மொழிந்த புதுடெல்லி பிரகடனத்தை அனைத்து நாடுகளும் ஒரு மனதாக ஏற்றுக்கொண்டுள்ளன.

    ரஷ்ய-உக்ரைன் போருக்கு எதிராக முன்மொழியயப்பட்ட இந்த புதுடெல்லி பிரகடனத்தில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை இப்போது பார்க்கலாம்.

    "உக்ரைனில் ஒரு விரிவான, நியாயமான மற்றும் நீடித்த அமைதியை நிலைநாட்ட" இந்த பிரகடனத்தின் மூலம் அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.எனினும், இந்த பிரகடனத்தில் எந்த இடத்திலும் ரஷ்யாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை.

    "ஒரு பிராந்தியத்தை கைப்பற்றுவதற்கு சக்தியைப் பயன்படுத்தி அச்சுறுத்துவதை தவிர்க்க வேண்டும்." என்று ரஷ்யாவின் பெயரை குறிப்பிடாமல் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அணு ஆயுத அச்சுறுத்தல்கள் அனுமதிக்க முடியாததாக கருதப்படும் என்றும் இந்த பிரகடனம் கூறியுள்ளது.

    ட்ஜவென்

    மேலும் இந்த புதுடெல்லி பிரகடனத்தில் கூறப்பட்டிருக்கும் முக்கிய வரிகள்:

    இன்றைய காலகட்டம் போருக்கானது அல்ல.

    அனைத்து நாடுகளும் ஐ.நா. சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கோட்பாடுகளுடன் முழுமையாக ஒத்துப்போகும் வகையில் செயல்பட வேண்டும்.

    ஐ.நா. சாசனத்திற்கு இணங்க, எந்தவொரு நாடும் இன்னொரு நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் அரசியல் சுதந்திரத்திற்கு எதிராக அந்த நாட்டை கைப்பற்ற முயற்சிப்பதையும் அல்லது சக்தியை பயன்படுத்தி அச்சுறுத்த முயற்சிப்பதையும் தவிர்க்க வேண்டும்.

    அணு ஆயுதங்களின் பயன்பாடு அல்லது அணு ஆயுத அச்சுறுத்தல்கள் ஆகியவை ஏற்றுக்கொள்ள முடியாதது.

    உக்ரைன் போரினால் ஏற்படும் மனித துன்பங்கள் மற்றும் எதிர்மறையான தாக்கங்களை நாங்கள் கோடிட்டு காட்டி இருக்கிறோம்.

    உக்ரைன் போர், குறிப்பாக வளரும் மற்றும் குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளை கடுமையாக பாதிக்கிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    புது டெல்லி
    ரஷ்யா
    உக்ரைன்
    ஜி20 மாநாடு

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    புது டெல்லி

    ஜி20 மாநாட்டை முன்னிட்டு ஸ்விக்கி, சோமாட்டோ, அமேசான் டெலிவரிகளுக்கு தடை  ஜி20 மாநாடு
    ஜி20 உச்சி மாநாடு: எந்தெந்த உலக தலைவர்கள் இந்தியாவுக்கு வர இருக்கிறார்கள்? ஜி20 மாநாடு
    ஜி20 மாநாட்டிற்கு வருகை தரும் உலகத் தலைவர்கள் தங்க போகும் இடங்கள் ஜி20 மாநாடு
    ஜி20: உலக தலைவர்களின் மனைவிகளுக்கு அளிக்கப்படும் வரவேற்பு பற்றி தெரிந்துகொள்ளுங்கள் ஜி20 மாநாடு

    ரஷ்யா

    ரஷ்ய அதிபர் வீட்டின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலை அடுத்து உக்ரைனில் குண்டு வெடிப்பு  உக்ரைன்
    ரஷ்யா நடத்திய மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்: உக்ரைனில் பரபரப்பு  உக்ரைன் ஜனாதிபதி
    பராக் ஒபாமா உட்பட 500 அமெரிக்கர்கள் ரஷ்யாவில் நுழையத் தடை! அமெரிக்கா
    உக்ரைனின் முக்கிய நகரமான பாக்முத்தை கைப்பற்றிய ரஷ்யா: புதின் பாராட்டு  உக்ரைன்

    உக்ரைன்

    உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் மோடியை நம்பி இருக்கிறதா அமெரிக்கா இந்தியா
    திடீரென்று உக்ரைனுக்கு சென்ற அமெரிக்க அதிபர் உக்ரைன் ஜனாதிபதி
    உள்ளூர் மோதலை உலகளாவிய மோதலாக மாற்ற அமெரிக்கா முயற்சிக்கிறது: ரஷ்ய அதிபர் உலகம்
    உக்ரைனில் இருக்கும் வீரர்கள் மற்றும் ஆயுதங்களை அமெரிக்கா திரும்பப் பெற வேண்டும்: ரஷ்யா உலகம்

    ஜி20 மாநாடு

    தலைமை செயலாளர் தலைமையில் ஜி20 மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம்  தமிழ்நாடு
    ஜி20 மாநாட்டில் பங்கேற்க தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு மு.க ஸ்டாலின்
    இந்தியாவில் ஜி 20 மாநாடு - வரும் 26ம் தேதி புதிய கட்டிடம் திறப்பு  டெல்லி
    ஜி20 மாநாடு நடைபெற இருக்கும் கட்டிடத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி  டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025