NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சிறு குற்றங்களுக்கு தண்டனையாக சமூக சேவை; நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சிறு குற்றங்களுக்கு தண்டனையாக சமூக சேவை; நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்
    சிறு குற்றங்களுக்கு தண்டனையாக சமூக சேவை

    சிறு குற்றங்களுக்கு தண்டனையாக சமூக சேவை; நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 12, 2023
    11:22 am

    செய்தி முன்னோட்டம்

    இந்திய தண்டனை சட்டங்களில் மாற்றத்தை கொண்டுவர முடிவு செய்துள்ள மத்திய அரசு, இதற்காக மூன்று முக்கிய மசோதாக்களை நாடாளுமன்றத்தில் முன்மொழிந்துள்ளது.

    இதில் குறிப்பிடத்தக்க அம்சங்களாக எப்ஐஆர்களை மின்னணு முறையில் தாக்கல் செய்தல், விரைவான நீதியை உறுதி செய்வதற்காக காணொளி காட்சி முறையிலான விசாரணைகள் உள்ளிட்ட பல சீர்திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

    மேலும், இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக, இந்தியாவில் முதல்முறையாக சிறு திருட்டு, அவதூறு உள்ளிட்ட சிறிய அளவிலான குற்றங்களுக்கு மாற்று தண்டனையாக சமூக சேவை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    சிறையில் உள்ள கைதிகளில் நான்கில் மூன்று பங்கு விசாரணைக் கைதிகளாக இருப்பதால், சமூக சேவையை தண்டனையாக வழங்கி முதல் முறை குற்றவாளிகளையும், சிறிய குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர்களையும் சிறையிலிருந்து விடுவிக்க முடியும்.

    western countries practices social service

    சமூக சேவையை தண்டனையாக வழங்கும் மேற்குலக நாடுகள்

    சமூக சேவை இதுவரை இந்திய நீதித்துறையில் ஒரு பகுதியாக இல்லை என்றாலும், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா உட்பட சில மேற்கத்திய நாடுகளில் பிரபலமாக உள்ளது.

    இங்கிலாந்தில், சமூக சேவையானது சமூகத்திற்கு திருப்பிச் செலுத்துதல் என்று குறிப்பிடப்படுகிறது மற்றும் அந்நாட்டு நீதி அமைச்சகத்தால் செயல்படுத்தப்படுகிறது.

    இங்கிலாந்தின் நீதி அமைச்சகத்தின் இணையதளத்தில் உள்ள தகவல்களின்படி, 2019ஆம் ஆண்டில் மட்டும் இது தொடர்பான 80,039 உத்தரவுகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    அமெரிக்காவில், 1960களில் கலிபோர்னியாவில் தண்டனையின் ஒரு வடிவமாக சமூக சேவை தொடங்கி, பின்னர் நாடு முழுவதும் பரவியது.

    ஆஸ்திரேலியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் அதன் சொந்த குற்றவியல் நீதி நிர்வாக அமைப்பு மற்றும் சமூக அடிப்படையிலான திருத்தங்கள் என்று பிரபலமாக அறியப்படும் சமூக சேவை திட்டங்களைக் கொண்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மத்திய அரசு
    நாடாளுமன்றம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    மத்திய அரசு

    ஜி20 மாநாட்டில் பங்கேற்க தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு ஜி20 மாநாடு
    உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீது விண்டுஃபால் வரிவிதித்த மத்திய அரசு வணிகம்
    நேரடியாகத் தக்காளியைக் கொள்முதல் செய்து குறைந்த விலையில் விற்பனை செய்யவிருக்கும் மத்திய அரசு இந்தியா
    ஊழியர்களுக்கு 4% வரை அகவிலைப்படியை உயர்த்தப் பரிசீலனை செய்யும் மத்திய அரசு இந்தியா

    நாடாளுமன்றம்

    புதிய நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவினார் பிரதமர் மோடி  இந்தியா
    தமிழ் ஆதீன குருமார்களுக்கு அமோக கவனிப்பு: மத்திய அரசு என்னென்ன செய்தது தமிழ்நாடு
    புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இருக்கும் ஃபூக்கோவின் ஊசல் எதற்காக நிறுவப்பட்டது புதிய நாடாளுமன்றம்
    10 ராஜ்யசபா இடங்களுக்கு ஜூலை 24ம் தேதி தேர்தல்  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025