NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பெங்களூரில் போக்குவரத்து விதிகளை மீறினால் இனி உங்கள் ஆபீஸிக்கு நேரடியாக தகவல் அளிக்க காவல்துறை முடிவு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பெங்களூரில் போக்குவரத்து விதிகளை மீறினால் இனி உங்கள் ஆபீஸிக்கு நேரடியாக தகவல் அளிக்க காவல்துறை முடிவு 
    காவல்துறையின் இந்த முயற்சி போக்குவரத்து விதிமுறைகளை குறைக்கும் என நம்பப்படுகிறது. சித்தரிப்பு புகைப்படம்.

    பெங்களூரில் போக்குவரத்து விதிகளை மீறினால் இனி உங்கள் ஆபீஸிக்கு நேரடியாக தகவல் அளிக்க காவல்துறை முடிவு 

    எழுதியவர் Srinath r
    Dec 16, 2023
    04:45 pm

    செய்தி முன்னோட்டம்

    பெங்களூரில் போக்குவரத்து சிக்னல்களை மீறும் முன்னும், அதிவேகமாக பயணிக்கும் முன்னும் இருமுறை யோசித்துக் கொள்ளுங்கள், நீங்கள் பிடிப்பட்டால் போக்குவரத்து காவல்துறையினர் உங்கள் நிறுவனங்களுக்கு தகவல் தெரிவித்துவிடுவர்.

    சாலைப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பெங்களூரு போக்குவரத்துக் காவல்துறையின் கிழக்குப் பிரிவு இந்த வாரம்,

    நகரின் தகவல் தொழில்நுட்ப வழித்தடமான வெளிவட்டச் சாலை மற்றும் ஒயிட்ஃபீல்டு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய இடங்களில் பரீட்சார்த்த முறையில் புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

    தற்போது கிழக்கு பிரிவில் மட்டும் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தால், விதிமீறல்கள் குறையும் பட்சத்தில், நகரின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

    2nd card

    சாலை பாதுகாப்பை உறுதி செய்யவே புதிய நடைமுறை

    குறிப்பிட்ட பகுதியில் அதிகப்படியான விதிமீறல்கள், ஐடி நிறுவன ஊழியர்களால் நிகழ்வதை போக்குவரத்து காவல்துறையினர் கண்டறிந்ததால், இந்த முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளதாக, மூத்த காவல்துறை அதிகாரி என்டிடிவியிடம் தெரிவித்தார்.

    "பெங்களூரு கிழக்குப் பகுதியில் சோதனை அடிப்படையில் இந்த இயக்கத்தைத் தொடங்கியுள்ளோம்.

    எனவே, ஐடி நிறுவன ஊழியர்கள் யாராவது போக்குவரத்து விதிகளை மீறி பிடிபட்டால், குறிப்பிட்ட விதிமீறல் குறித்த தகவல் அந்தந்த நிறுவனங்களுக்கு மின்னஞ்சல் அல்லது வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்படும்.

    வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விதிகள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இது செய்யப்படுகிறது" என காவல்துறை துணை ஆணையர் குல்தீப் குமார் ஜெயின் கூறினார்.

    மேலும், காவல்துறையினர் தொழில்நுட்ப நிறுவனங்களையும் போக்குவரத்து விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பெங்களூர்
    போக்குவரத்து விதிகள்
    போக்குவரத்து காவல்துறை
    சாலை பாதுகாப்பு விதிகள்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    பெங்களூர்

    இந்தியாவின் சிறந்த தெருக்கடை உணவுகளை பற்றி, நகரம் வாரியாக ஒரு பயணம் உணவு குறிப்புகள்
    சசிகலா மற்றும் இளவரசிக்கு பிடிவாரண்ட் சசிகலா
    பெங்களூரில் இன்று முழுவதும் பந்த்: காரணம் என்ன? இந்தியா
    'ஆண்டி' என்று அழைத்ததற்காக ஏடிஎம் காவலாளியை செருப்பால் அடித்த பெங்களூரு பெண் இந்தியா

    போக்குவரத்து விதிகள்

    சென்ற ஆண்டு, சீட் பெல்ட் அணியாததால், சாலை விபத்துகளில் 16,000க்கும் மேல் உயிரிழந்துள்ளனர் ஆட்டோமொபைல்
    ஜனவரி 10 வரை, பாம்பன் பாலத்தின் மேல் ரயில்கள் செல்ல தடை ரயில்கள்
    'தாழ்த்தள பேருந்துகள் இயக்குவது சாத்தியமில்லை' என நீதிமன்றத்தில் போக்குவரத்துத்துறை தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    தமிழகத்தில் பேருந்து படியில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மீது புகார் அளிக்கலாம் - போக்குவரத்துத்துறை தமிழ்நாடு

    போக்குவரத்து காவல்துறை

    புதுச்சேரியில் இனி போக்குவரத்து விதிகளை மீறினால் இ-சலான் மூலம் அபராதம் - போக்குவரத்துத்துறை புதுச்சேரி
    சென்னையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ. மீது இரும்பு கம்பியால் தாக்குதல் சென்னை
    சென்னையில் நம்பர் பிளேட் விதிமீறல்களை கண்டறிந்து அபராதம் விதிக்கும் பணி துவக்கம் சென்னை
    சென்னையில் காவல் அதிகாரியை தாக்கிய வழக்கறிஞர் - பரபரப்பு சம்பவம் சென்னை

    சாலை பாதுகாப்பு விதிகள்

    உலகின் சிறந்த ஓட்டுநர்கள் தரவரிசை - ஜப்பான் முன்னிலை, பின்னுக்கு சென்ற இந்தியா! போக்குவரத்து விதிகள்
    டோல்கேட் கட்டணம் செலுத்துவதால் கிடைக்கும் சலுகைகள் என்னென்ன? வாகனம்
    வாகன ஸ்கிராப்பிங் 11,000 வாகனங்கள் ரத்து - வெளியிட்ட அரசு! போக்குவரத்து காவல்துறை
    FASTag-ல் கூடுதலாக பிடித்தம் செய்யப்பட்ட ரூ.10.. நீதிமன்றத்தின் மூலம் ரூ.8,000 இழப்பீடு! பெங்களூர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025