NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 26 எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு 'I-N-D-I-A' என்று பெயரிடப்பட்டது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    26 எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு 'I-N-D-I-A' என்று பெயரிடப்பட்டது 
    பெரும் ஆலோசனைக்குப் பிறகு இந்த பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

    26 எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு 'I-N-D-I-A' என்று பெயரிடப்பட்டது 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 18, 2023
    04:23 pm

    செய்தி முன்னோட்டம்

    2024ஆம் ஆண்டு பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜகவுக்கு எதிரான 26 எதிர்கட்சிகளின் கூட்டணிக்கு 'I-N-D-I-A' என்று பெயரிடப்பட்டுள்ளது.

    ஏற்கனவே நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி(UPA) என்று அழைக்கப்பட்டு வந்ததது.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு இதுவரை எதிராக இருந்த திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளும் தற்போது இந்த கூட்டணியுடன் சேர்ந்துள்ளது.

    அதை தொடர்ந்து, இன்று பெங்களூரில் நடந்த மாபெரும் கூட்டத்தில், இந்த புதிய 26 எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்திய தேசிய ஜனநாயக உள்ளடக்கிய கூட்டணி(I-N-D-I-A) என்று பெயரிடப்பட்டுள்ளது.

    இதனையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் டெரெக் ஓ பிரையன் தனது ட்விட்டர் பக்கத்தில் "Chak De! INDIA"(ஜெயிப்போம்! INDIA) என்று பதிவிட்டுள்ளார்.

    கஜசவ்

    மோடி VS INDIA: புதிய பெயரை தேர்வு செய்த ராகுல் காந்தி 

    இரண்டு நாட்களாக பெங்களூரில் நடைபெற்று வரும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் நடந்த பெரும் ஆலோசனைக்குப் பிறகு இந்த பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

    இடதுசாரிக் கட்சிகள் 'கூட்டணி' என்ற வார்த்தையை 'முன்னணி' என்று மாற்ற விரும்பியதாக கூறப்படுகிறது.

    சிவசேனா UBT தலைவர் உத்தவ் தாக்கரே, 'எதிர்க்கட்சி' என்ற வார்த்தை கூட்டணி பெயரில் இருக்கக்கூடாது என்று பேசி இருக்கிறார்.

    இறுதியாக, ராகுல் காந்தி தான் I-N-D-I-A என்ற பெயரை முன்மொழிந்தார் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஜிதேந்திர அஹ்வாத் ட்வீட் செய்துள்ளார்.

    "அவரது படைப்பாற்றல் பெரிதும் பாராட்டப்பட்டது," என்றும் அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

    இந்நிலையில், வரும் 2024 பொது தேர்தலில் "மோடியா INDIAவா" என்பதை பார்த்துவிடலாம் என்று பல எதிர்க்கட்சி தலைவர்கள் பேசி வருகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    எதிர்க்கட்சிகள்
    இந்தியா
    காங்கிரஸ்
    பெங்களூர்

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    எதிர்க்கட்சிகள்

    அடுத்த எதிர்க்கட்சிகள் கூட்டம், பெங்களுருவில் கூடும் என சரத் பவார் அறிவிப்பு  பெங்களூர்
    பெங்களுரில் நடைபெற இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ஒத்திவைப்பு  பெங்களூர்
    அடுத்த எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கான மாற்று தேதி அறிவிப்பு  அரசியல் நிகழ்வு
    அடுத்த மாபெரும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார் சோனியா காந்தி  சோனியா காந்தி

    இந்தியா

    'தீவிரவாத தாக்குதல் நடத்துவோம்': மும்பை காவல்துறைக்கு மிரட்டல்  பாகிஸ்தான்
    நிலவை நோக்கி சந்திரயான் 3-இன் பயணத்துளிகள் சந்திரயான்
    சந்திரயான்-3 திட்டத்திற்கு பின்னால் இருக்கும் முக்கிய நபர்கள் சந்திரயான் 3
    இன்றைய கொரோனா நிலவரம்: இந்தியாவில் 52 புதிய பாதிப்புகள்  கொரோனா

    காங்கிரஸ்

    கர்நாடகாவில் புதிதாக பதவியேற்ற 9 அமைச்சர்களும் கோடீஸ்வரர்கள்: ADR அறிக்கை இந்தியா
    லாரியில் பயணம் செய்து ஓட்டுனர்கள் பிரச்சனையினை கேட்டறிந்த ராகுல் காந்தி ராகுல் காந்தி
    புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை ஒற்றுமையாக புறக்கணிக்கும் 19 எதிர்க்கட்சிகள்  இந்தியா
    கர்நாடகாவில் நாளை 24 புதிய அமைச்சர்கள் பதவியேற்க இருக்கிறார்கள் இந்தியா

    பெங்களூர்

    'சமோசா' விற்று, நாளொன்றுக்கு ரூ.12 லட்சம் வரை சம்பாதிக்கும் பெங்களூரு தம்பதி வைரல் செய்தி
    'பெங்களூர் சீரியல் கில்லிங்': கொலை செய்தவர்களை கண்டறிந்த போலீசார் இந்தியா
    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குள் கத்தியுடன் இளைஞர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல் திருவண்ணாமலை
    கர்நாடகாவில் மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தினை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி பிரதமர் மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025