NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'வெடிகுண்டு வைத்தது தமிழ்நாட்டுகாரர் தான்' என்று கூறியதற்கு மன்னிப்பு கோரினார் மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'வெடிகுண்டு வைத்தது தமிழ்நாட்டுகாரர் தான்' என்று கூறியதற்கு மன்னிப்பு கோரினார் மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே 

    'வெடிகுண்டு வைத்தது தமிழ்நாட்டுகாரர் தான்' என்று கூறியதற்கு மன்னிப்பு கோரினார் மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே 

    எழுதியவர் Sindhuja SM
    Mar 20, 2024
    10:23 am

    செய்தி முன்னோட்டம்

    மார்ச் 1 ஆம் தேதி ராமேஸ்வரம் கபேயில் நடந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய சந்தேக நபர் தமிழகத்தைச் சேர்ந்தவர் தான் என்று கூறியதற்கு மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே மன்னிப்பு கோரியுள்ளார்.

    "எனது தமிழ் சகோதர சகோதரிகளுக்கு, எனது வார்த்தைகள் இருளை ஏற்படுத்தவில்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனது கருத்து சிலருக்கு வலியை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை நான் காண்கிறேன். அதற்காக, நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். கிருஷ்ணகிரி வனப்பகுதியில் பயிற்சி பெற்று, ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் தொடர்புடையவரை பற்றி தான் நான் பேசினேன். மனதால் பாதிக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த அனைவரிடமும், என் இதயத்தின் ஆழத்தில் இருந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்." என்று மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே தெரிவித்துள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    ட்விட்டரில் மன்னிப்பு கோரினார் மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே

    To my Tamil brothers & sisters,
    I wish to clarify that my words were meant to shine light, not cast shadows. Yet I see that my remarks brought pain to some - and for that, I apologize. My remarks were solely directed towards those trained in the Krishnagiri forest,
    1/2

    — Shobha Karandlaje (Modi Ka Parivar) (@ShobhaBJP) March 19, 2024

    இந்தியா 

    முதல்வர் மு.க.ஸ்டாலினை விமர்சித்து பேசிய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்துக்கள் மற்றும் பாஜக தொண்டர்களை குறிவைக்க தீவிரவாத சக்திகளை ஊக்கப்படுத்துவதாகவும் மத்திய அமைச்சர் குற்றம்சாட்டினார்.

    "மிஸ்டர் ஸ்டாலின், உங்கள் ஆட்சியில் தமிழகத்துக்கு என்ன ஆயிற்று? உங்கள் அரசியல், இந்துக்கள் மற்றும் பாஜகவினர் மீது இரவும் பகலும் தாக்குதல் நடத்த தீவிரவாத சக்திகளை ஊக்கப்படுத்தியுள்ளது. நீங்கள் கண்ணை மூடி கொள்கிறீர்கள். ஆனால், ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புகளின் செயலை போல் இங்கு அடிக்கடி குண்டுவெடிப்புகள் கண்மூடித்தனமாக வெடிக்கின்றன" என்று கரந்த்லாஜே முன்பு கூறியிருந்தார்.

    இந்நிலையில், இந்த வார்த்தைகளை கூறியதற்கு அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழகம்
    குண்டுவெடிப்பு

    சமீபத்திய

    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்
    மிச்சமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் டிஜே வேண்டாம், cheer leaders வேண்டாம், உணர்வுகளை மனதில் கொள்ளுங்கள்: கவாஸ்கர் கோரிக்கை ஐபிஎல் 2025

    தமிழகம்

    தமிழக பட்ஜெட் 2024: அழகூட்டப்படும் கடற்கரைகள், இலவச Wifi, ECR-இல் மேம்பாலங்கள்!  பட்ஜெட்
    2 கோடி உறுப்பினர்கள் இலக்கு: த.வெ.க அதிரடி உத்தரவு விஜய்
    தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு புதுச்சேரி
    தமிழகத்திற்கு கொண்டு வரப்படும் ஜெயலலிதாவின் நகைகள்: மார்ச் 6ஆம் தேதி, தமிழக உள்துறை செயலாளரிடம் ஒப்படைக்கப்படும் ஜெயலலிதா

    குண்டுவெடிப்பு

    உணவு பற்றாக்குறை, இருளில் மூழ்கிய காஸா - ஹமாஸ் படைக்கு குறிவைத்த இஸ்ரேல் இஸ்ரேல்
    500 பேரை பலி கொண்ட காசா மருத்துவமனை தாக்குதல்  இஸ்ரேல்
    கேரளாவில் தொடர் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி, 20க்கும் மேற்பட்டோர் காயம் கேரளா
    கேரளாவில் நடந்த கிறிஸ்தவ கூட்டத்தில் தொடர் குண்டுவெடிப்பு: கேரள முதல்வரை தொடர்பு கொண்டார் அமித்ஷா   கேரளா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025