NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பணிப்பெண் சித்ரவதை வழக்கு: திமுக எம்எல்ஏ மகன், மருமகளுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பணிப்பெண் சித்ரவதை வழக்கு: திமுக எம்எல்ஏ மகன், மருமகளுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம்
    இருவரும், நீலாங்கரை காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது

    பணிப்பெண் சித்ரவதை வழக்கு: திமுக எம்எல்ஏ மகன், மருமகளுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 01, 2024
    05:20 pm

    செய்தி முன்னோட்டம்

    வீட்டில் தங்கியிருந்த பணிப்பெண்ணை சித்ரவதை செய்த வழக்கில், பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினா இருவருக்கும், நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

    அதோடு, அவர்கள் இருவரும், இரண்டு வாரங்களுக்கு நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில், ஆண்டோ மதிவாணன் மற்றும் மெர்லினா சார்பாக,"பெற்றோர் இல்லாமல் தங்களது 4 வயது குழந்தை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே எங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்" என கோரிக்கை விடப்பட்டது.

    இதற்கு, எதிர்தரப்பிலும், காவல்துறை தரப்பிலும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

    எனினும் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, குற்றம் சுமத்தப்பட்ட இருவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

    முன்கதை

    பணிப்பெண்ணை அடித்து சித்ரவதை செய்த தம்பதி 

    சில மாதங்களுக்கு முன்னர், செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்ட்டோ மதிவாணனும், அவரது மனைவி மெர்லினாவும் தங்களது வீட்டில் தங்கி பணிபுரிந்த 18 வயது பணிப்பெண்ணை அடித்து துன்புறுத்தியதாக வீடியோ ஒன்று வைரலானது.

    அதனை தொடர்ந்து, அவர்கள் இருவர் மீதும், வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் நீலாங்கரை அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர்கள் தலைமறைவாயினர்.

    அவர்கள் இருவரையும் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

    பலவார தேடுதலுக்கு பிறகு, அவர்களை ஆந்திராவில் கைது செய்தனர் காவல்துறையினர். அதன்பின்னர் இருவரும் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை உயர் நீதிமன்றம்
    திமுக

    சமீபத்திய

    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்

    சென்னை உயர் நீதிமன்றம்

    செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு - சென்னை உயர்நீதிமன்றம் செந்தில் பாலாஜி
    அரசு வழக்கறிஞர்களின் கட்டண விகிதம் 2 மடங்காக உயர்வு - அரசாணை வெளியீடு  தமிழக அரசு
    'லியோ' படத்தின் சிறப்பு காட்சிக்கான அனுமதி மறுப்பு - சென்னை உயர்நீதிமன்றம் லியோ
    செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் செந்தில் பாலாஜி

    திமுக

    அமைச்சர் பொன்முடி விடுதலையை ரத்து செய்து உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம் உயர்கல்வித்துறை
    திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அமைச்சர் துரைமுருகன் துரைமுருகன்
    மீட்பு பணிகள் குறித்து விமர்சித்தவர்களுக்கு, இயக்குனர் மாரி செல்வராஜ் நெத்தியடி உதயநிதி ஸ்டாலின்
    "ஹிந்தி தெரியணும்" - நிதீஷ் குமார் பேச்சால் இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் சலசலப்பு டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025