NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புதிய நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவினார் பிரதமர் மோடி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    புதிய நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவினார் பிரதமர் மோடி 
    அரசர்கள் வாழ்ந்த காலத்தில் இந்த செங்கோல் முடியாட்சி மற்றும் அதிகாரத்தின் சின்னமாக கருதப்பட்டது.

    புதிய நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவினார் பிரதமர் மோடி 

    எழுதியவர் Sindhuja SM
    May 28, 2023
    08:45 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க 'செங்கோல்' புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் இன்று(மே 28) நிறுவப்பட்டது.

    செங்கோல் என்ற வார்த்தையை செம்மை+கோல் என்று பிரிக்கலாம்.

    செம்மை என்ற வார்த்தை செழிப்பு, சிறப்பு, அரசத் தன்மை, வீரம் என்று பொருள்படும்.

    அரசர்கள் வாழ்ந்த காலத்தில் இந்த செங்கோல் முடியாட்சி மற்றும் அதிகாரத்தின் சின்னமாக கருதப்பட்டது.

    "ஆகஸ்ட் 14, 1947அன்று இரவு 10.45 மணியளவில், பண்டிட் நேரு இந்த செங்கோலை தமிழகத்திலிருந்து பெற்றார். மேலும், பல மூத்த தலைவர்கள் முன்னிலையில், சுதந்திரத்தை அடைவதற்கான அடையாளமாக இதை ஏற்றுக்கொண்டார். இது ஒரு மாற்றத்தின் அடையாளம். ஆங்கிலேயர்களிடமிருந்து இந்த நாட்டு மக்களுக்கு அதிகாரம் மாற்றப்பட்டதற்கான சின்னம் இது" என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருந்தார்.

    details

    செங்கோலுக்கு முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கிய பிரதமர் மோடி 

    இதுவரை உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் இந்த செங்கோல் வைக்கப்பட்டிருந்தது.

    புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறுவப்படுவதற்கு முன், 'செங்கோல்' தமிழ்நாட்டின் பல்வேறு ஆதீனங்களைச் சேர்ந்த 30 சைவ குருமார்களால் பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டது.

    ஆதீனங்களைச் சேர்ந்த குருமார்கள் தமிழ் சைவ பாடல்களை பாடி வாழ்த்தினர்.

    பிரதமர் மோடி, செங்கோலுக்கு முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி மரியாதை செலுத்தினார்.

    அதற்கு பின், நாதஸ்வரம் மற்றும் வேத மந்திர முழக்கங்களுக்கு மத்தியில், "செங்கோலை" ஊர்வலமாக புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் எடுத்து சென்ற பிரதமர் மோடி, அதை மக்களவை சபாநாயகர் நாற்காலியின் வலது பக்கத்தில் நிறுவினார்.

    இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், பல மாநில முதல்வர்கள், பாஜக தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    நாடாளுமன்றம்
    பிரதமர் மோடி
    மோடி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    பெங்களூரில் புதிய தூதரகத்தை அமைக்க ஆஸ்திரேலியா முடிவு  ஆஸ்திரேலியா
    புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை ஒற்றுமையாக புறக்கணிக்கும் 19 எதிர்க்கட்சிகள்  பாஜக
    தமிழகத்தின் 'செங்கோல்' புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வைக்கப்படும்: அமித்ஷா  தமிழ்நாடு
    இந்தியாவில் ஒரே நாளில் 552 கொரோனா பாதிப்பு: 6 பேர் உயிரிழப்பு கொரோனா

    நாடாளுமன்றம்

    ராமர் பாலம் இருந்ததாக திட்டவட்டமாக கூற முடியாது - இஸ்ரோ செயற்கைக்கோள் ஆய்வின் மூலம் தகவல் இந்தியா
    பிபிசி ஆவணப்படம் மற்றும் அதானி பிரச்சனைகளைப் பற்றி பட்ஜெட் கூட்டதொடரில் பேச இருக்கும் திமுக எம்பிகள் பட்ஜெட் 2023
    அதானி நிறுவன பிரச்சனை: நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் ஒத்திவைப்பு இந்தியா
    நாடாளுமன்றத்தில் போராட்டம்: மெகபூபா முப்தி கைது டெல்லி

    பிரதமர் மோடி

    14,300 கோடி மதிப்பிலான திட்டங்களை அசாமில் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி  இந்தியா
    அசாம் மாநிலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையினை துவக்கி வைத்தார் மோடி  அசாம்
    சூடானில் சிக்கியுள்ள இந்தியர்கள் பிரச்சனை: பிரதமர் மோடி ஆலோசனை இந்தியா
    கேரளாவிற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக வருகிறார் பிரதமர் மோடி  கேரளா

    மோடி

    பாஜக நிறுவன தினம்: பிரதமர் மோடி பேசியது என்ன இந்தியா
    நாட்டில் ஏழைகள் ஏழையாகி கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடியை சாடிய கபில் சிபல் இந்தியா
    நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி: சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் அறிமுகம் இந்தியா
    தெலுங்கானா மாநில அரசு ஒத்துழைக்க மறுக்கிறது: பிரதமர் மோடி காட்டம் நரேந்திர மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025