NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கேக்கில் அதிக அளவு செயற்கை இனிப்பு கலந்திருப்பது தான் சிறுமியின் மரணத்திற்கு காரணம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கேக்கில் அதிக அளவு செயற்கை இனிப்பு கலந்திருப்பது தான் சிறுமியின் மரணத்திற்கு காரணம்
    செயற்கை இனிப்பு ரசாயனம் அதிகமாகப் பயன்படுத்தும்போது, இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு விரைவாக அதிகரிக்கும்

    கேக்கில் அதிக அளவு செயற்கை இனிப்பு கலந்திருப்பது தான் சிறுமியின் மரணத்திற்கு காரணம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 23, 2024
    09:10 am

    செய்தி முன்னோட்டம்

    10 வயது பஞ்சாப் சிறுமியின் மரணத்திற்கு காரணமான கேக்கில் செயற்கை இனிப்பு அதிக அளவில் இருந்ததாக திங்கள்கிழமை அன்று வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன.

    மார்ச்-24 அன்று, சிறுமியின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக "கேக் கன்ஹா" என்ற பேக்கரியில் இருந்து ஆன்லைனில் ஆர்டர் செய்த சாக்லேட் கேக்கை சாப்பிட்டதால், சிறுமியின் குடும்பத்தினர் உடல்நிலை பாதிக்கப்பட்டனர். ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த கேக்கை உண்ட சிறுமி இறந்து போனார்.

    இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

    இந்த சூழலில் மாவட்ட சுகாதார அதிகாரி டாக்டர். விஜய் ஜிண்டால் கூறுகையில், கேக் மாதிரியில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவு சாக்கரின் காணப்பட்டது-அந்த செயற்கை இனிப்பு ரசாயனம் அதிகமாகப் பயன்படுத்தும்போது, இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு விரைவாக அதிகரிக்கும்.

    வைரலான காட்சிகள்

    பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவு

    சமூக ஊடகங்களில் வைரலான பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோவில், பாதிக்கப்பட்ட சிறுமி மான்வி, தனது துயர மரணத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு தனது குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடுவதைக் காட்டுகிறது.

    கொண்டாட்டத்தைத் தொடர்ந்து, மான்வி மற்றும் அவரது தங்கையும் வாந்தி, வாயில் வறட்சி மற்றும் கடுமையான தாகம் போன்ற அறிகுறிகளை அனுபவிக்கத் தொடங்கினர்.

    சுயநினைவை இழந்த மான்வி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    ஆக்ஸிஜன் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அவர் வந்த சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து பேக்கரி மீது அபராதம் விதிப்பது உள்ளிட்ட தண்டனை நடவடிக்கைகள் விரைவில் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

    பேக்கரி உரிமையாளர் மீது ஏற்கனவே முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பஞ்சாப்
    பிறந்தநாள்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    பஞ்சாப்

    பஞ்சாப் ராணுவ நிலைய துப்பாக்கி சூடு: ஒரு ராணுவ வீரர் கைது  இந்தியா
    முகத்தில் தேசிய கொடி வரைந்திருந்ததால் பொற்கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு  இந்தியா
    காலிஸ்தான் தலைவர் அம்ரித்பாலின் மனைவி கைது செய்யப்பட்டார்  இந்தியா
    அசாம் சிறையில் அடைக்கப்பட்டார் காலிஸ்தான் தலைவர் அம்ரித்பால் சிங் இந்தியா

    பிறந்தநாள்

    'கிச்சா 47' திரைப்படத்தினை இயக்குகிறார் சேரன் இயக்குனர்
    மம்மூட்டி பிறந்தநாள்: இவரது இயற்பெயர் இதுவல்ல என தெரியுமா? மலையாள திரையுலகம்
    ஜெயம் ரவி பிறந்தநாள் - 'சைரன்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர், க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு ஜெயம் ரவி
    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தினை துவக்கிவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை மு.க ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025