Page Loader
கேக்கில் அதிக அளவு செயற்கை இனிப்பு கலந்திருப்பது தான் சிறுமியின் மரணத்திற்கு காரணம்
செயற்கை இனிப்பு ரசாயனம் அதிகமாகப் பயன்படுத்தும்போது, இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு விரைவாக அதிகரிக்கும்

கேக்கில் அதிக அளவு செயற்கை இனிப்பு கலந்திருப்பது தான் சிறுமியின் மரணத்திற்கு காரணம்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 23, 2024
09:10 am

செய்தி முன்னோட்டம்

10 வயது பஞ்சாப் சிறுமியின் மரணத்திற்கு காரணமான கேக்கில் செயற்கை இனிப்பு அதிக அளவில் இருந்ததாக திங்கள்கிழமை அன்று வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன. மார்ச்-24 அன்று, சிறுமியின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக "கேக் கன்ஹா" என்ற பேக்கரியில் இருந்து ஆன்லைனில் ஆர்டர் செய்த சாக்லேட் கேக்கை சாப்பிட்டதால், சிறுமியின் குடும்பத்தினர் உடல்நிலை பாதிக்கப்பட்டனர். ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த கேக்கை உண்ட சிறுமி இறந்து போனார். இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சூழலில் மாவட்ட சுகாதார அதிகாரி டாக்டர். விஜய் ஜிண்டால் கூறுகையில், கேக் மாதிரியில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவு சாக்கரின் காணப்பட்டது-அந்த செயற்கை இனிப்பு ரசாயனம் அதிகமாகப் பயன்படுத்தும்போது, இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு விரைவாக அதிகரிக்கும்.

வைரலான காட்சிகள்

பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவு

சமூக ஊடகங்களில் வைரலான பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோவில், பாதிக்கப்பட்ட சிறுமி மான்வி, தனது துயர மரணத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு தனது குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடுவதைக் காட்டுகிறது. கொண்டாட்டத்தைத் தொடர்ந்து, மான்வி மற்றும் அவரது தங்கையும் வாந்தி, வாயில் வறட்சி மற்றும் கடுமையான தாகம் போன்ற அறிகுறிகளை அனுபவிக்கத் தொடங்கினர். சுயநினைவை இழந்த மான்வி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆக்ஸிஜன் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அவர் வந்த சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பேக்கரி மீது அபராதம் விதிப்பது உள்ளிட்ட தண்டனை நடவடிக்கைகள் விரைவில் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். பேக்கரி உரிமையாளர் மீது ஏற்கனவே முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது.