Page Loader
'மோடி அரசு எனது மொபைலை ஒட்டு கேட்கிறது': ராகுல் காந்தி குற்றச்சாட்டு 
தரவு என்பது தான் புதிய தங்கம்: ராகுல் காந்தி

'மோடி அரசு எனது மொபைலை ஒட்டு கேட்கிறது': ராகுல் காந்தி குற்றச்சாட்டு 

எழுதியவர் Sindhuja SM
Jun 01, 2023
11:26 am

செய்தி முன்னோட்டம்

பாஜக அரசு தனது மொபைலை ஒட்டு கேட்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது நாளின் முதல் பாதியை சிலிக்கான் வேலியை சேர்ந்த ஸ்டார்ட்அப் தொழில்முனைவோர்களுடன் செலவிட்டார். செயற்கை நுண்ணறிவு, தரவுகள், இயந்திர கற்றல் மற்றும் மனித குலத்தின் மீதான அவற்றின் தாக்கங்கள் போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து நிபுணர்களின் குழு விவாதித்தது. அதில் ராகுல் காந்தியும் கலந்து கொண்டார். அப்போது, ஃபிக்ஸ்நிக்ஸ் ஸ்டார்ட்அப் நிறுவனர் ஷான் சங்கரன் மற்றும் அமிடி ஆகியோருடன் நடந்த தீயொலி அரட்டையில் பங்கேற்ற ராகுல் காந்தி, இந்தியாவின் குக்கிராமங்களில் உள்ள சாமானியர்களிடம் தொழில்நுட்பத்தின் தாக்கம் எப்படி இருக்கிறது என்பது குறித்து பேசினார்.

details

இந்த அமெரிக்க நிகழ்வில் ராகுல் காந்தி பேசியதாவது:

தரவு என்பது தான் புதிய தங்கம். தரவுகளை பாதுகாப்பதற்கு பொருத்தமான விதிமுறைகள் இருக்க வேண்டும். இருப்பினும், பெகாசஸ் ஸ்பைவேர் மற்றும் அதுபோன்ற தொழில்நுட்பங்கள் குறித்து நான் கவலைப்படவில்லை. என் மொபைலை ஒட்டு கேட்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். ஒரு தேசத்தின் மற்றும் ஒரு தனி நபரின் தனியுரிமையை பாதுகாப்பதற்கு தேவையான தரவுத் தகவலின் தனியுரிமை விதிகளை நாம் நிறுவ வேண்டும். உங்கள் தொலைபேசியை ஒட்டுக்கேட்க வேண்டும் என்று ஒரு தேசிய அரசு முடிவு செய்தால், அதை யாராலும் தடுக்க முடியாது. ஒருவரது தொலைபேசியை ஒட்டுக்கேட்பதில் அரசு ஆர்வமாக இருந்தால், அது போராடத் தகுந்த போர் அல்ல. நான் எதைச் செய்தாலும் அந்த தகவல் அரசாங்கத்திற்குக் கிடைக்கும் என்று நான் நினைக்கிறேன். என்று கூறியுள்ளார்.