NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தொடர் கனமழை, வெள்ளம்: தென் தமிழகத்திற்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை; உதவி எண்கள் அறிவிப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தொடர் கனமழை, வெள்ளம்: தென் தமிழகத்திற்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை; உதவி எண்கள் அறிவிப்பு 
    ஊட்டுவாழ்மடம், பாறைக்கால்மடம் பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தேங்கிய மழை நீர்

    தொடர் கனமழை, வெள்ளம்: தென் தமிழகத்திற்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை; உதவி எண்கள் அறிவிப்பு 

    எழுதியவர் Sindhuja SM
    Dec 17, 2023
    04:03 pm

    செய்தி முன்னோட்டம்

    தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, சென்னை அரக்கோணத்தில் இருந்து 4 பேரிடர் மீட்புக் குழுக்கள் புறப்பட்டு தென் தமிழகத்திற்கு சென்றுள்ளன.

    தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    நாகர்கோவிலில் அதிகமாக கனமழை பெய்துவருவதால் ஊட்டுவாழ்மடம், பாறைக்கால்மடம் ஆகிய பகுதிகளில் முழங்கால் அளவுக்கு மழை நீர் தேங்கியுள்ளது. மேலும், அப்பகுதியில் வீட்டுக்குள் சிக்கிய பொதுமக்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வருகின்றனர்.

    மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம் அந்த பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

    சகஜஸ்

    வெள்ளத்தில் தத்தளிக்கும் தென் மாவட்டங்கள் 

    கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் மையிலாடி - அஞ்சுகிராமம் சாலை, இறச்சகுளம் - திட்டுவிளை சாலை, கோழிகோட்டு பொத்தை - தோவாளை சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    எனவே, அந்த சாலைகள் முடக்கப்பட்டு, போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

    தென்காசி பகுதியில் பெய்த கனமழை காரணமாக, பழைய குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவி போன்ற அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால், குற்றாலத்தில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    திருநெல்வேலியில் உள்ள தாமிரபரணி ஆற்றிலும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதால், ஆற்றங்கரை ஓரத்தில் இருக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மேலும், பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு 30,000 கன அடி வரை அதிகரிக்கப்பட உள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    பழைய குற்றாலத்தில் வெள்ளம் 

    Watch | பழைய குற்றாலம் அருவியில் கடும் வெள்ளம் - குளிக்கத் தடை#SunNews | #TNRains | #CoutrallamFalls | #Tenkasi pic.twitter.com/ogpc0gArqw

    — Sun News (@sunnewstamil) December 17, 2023

    ட்ஜ்வ்க்

    4 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலெர்ட் 

    நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் இன்று அதிக கனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் வெள்ள நீர் சூழ்ந்துள்ள பகுதிகளை நேரில் பார்வையிட்ட சபா நாயகர் அப்பாவு, பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    மேலும், கன்னியாகுமரியில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், பேச்சிப்பாறை அணையை ஆய்வு செய்த அமைச்சர் மனோ தங்கராஜ், மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது என்றும் கூறியுள்ளார்.

    திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட சேவியர் காலனியில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதால், மக்கள் வெளியே வரமுடியாத சூழல் உருவாகியுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    நெல்லை - மழைக்கால அவசர உதவி எண்கள் 

    #JUSTIN நெல்லை - மழைக்கால அவசர உதவி எண்கள் #helplinenumbers #nellai #News18tamilnadu | https://t.co/243Dw2XfRS pic.twitter.com/FahPEGY6OQ

    — News18 Tamil Nadu (@News18TamilNadu) December 17, 2023

    பிஜிகேஷப்க

    மக்கள் உதவி எண்களை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தல் 

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 6 மணி நேரத்தில் 12 சென்டி மீட்டர் அளவிற்கு மழை பதிவாகி உள்ளது.

    நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் 6 மணிநேரத்திற்குள் 12 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    மழை காரணமாக நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே ஜமீன் சிங்கம்பட்டியைச் சேர்ந்த பூதபாண்டியன் என்பவர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. அவரது வீட்டில் இருந்த 4 பேர் பத்திரமாக மீட்க்கப்பட்டுள்ளனர்.

    மழை, வெள்ளதால் ஏதும் பிரச்சனை ஏற்பட்டால், நெல்லை பகுதியில் உள்ள மக்கள் உடனடியாக மேல்காணும் உதவி எண்களை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    வெள்ளம்
    கனமழை
    தென்காசி

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    தமிழ்நாடு

    சீனாவில் அதிகரிக்கும் சுவாச நோய்த்தொற்றுகள்: உஷார் நிலையில் இந்திய மாநிலங்கள்  சீனா
    பாலிவுட்டின் 'பெஸ்ட் ஃப்ரெண்ட்' ஓர்ஹான் அவத்ரமணி; யார் அந்த மர்ம மனிதர்?  பாலிவுட்
    சென்னையில் கனமழை, வெள்ளம்: பள்ளிகள் மூடல், அவசர கால எண்கள் அறிவிப்பு  சென்னை
    தமிழகத்திற்கு ஆரஞ்சு அலெர்ட்: அடுத்த 5 நாட்களுக்கான வானிலை எச்சரிக்கை  புதுச்சேரி

    வெள்ளம்

    தென் கொரியாவில், கனமழை, வெள்ளம்: 33 பேர் பலி தென் கொரியா
    உத்தரகாண்டில் கனமழை, நிலச்சரிவு, வெள்ள அபாய எச்சரிக்கை  உத்தரகாண்ட்
    மீண்டும் உயர்ந்தது யமுனையின் நீர்மட்டம்: உஷார் நிலையில் டெல்லி டெல்லி
    வட இந்தியாவில் தொடரும் கனமழை, வெள்ளம்: மின்னல் தாக்கி இருவர் பலி  மகாராஷ்டிரா

    கனமழை

    கனமழை எதிரொலி - ஒத்திவைக்கப்பட்டது சென்னை பல்கலைக்கழக தேர்வுகள்  பருவமழை
    சென்னை மேற்கு மாம்பலம் பகுதிகளில் மழைநீர் ஏன் தேங்கியது?- மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்கம்  சென்னை
    டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை  வானிலை ஆய்வு மையம்
    செம்பரப்பாக்கம் ஏரியிலிருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு 3,000 கனஅடியாக உயர்வு  சென்னை

    தென்காசி

    'சலூன்' ரயில் பெட்டியில் தென்காசி சென்றார் முதல்வர் ஸ்டாலின்
    திருநெல்வேலியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல் - பெற்றோருக்கு வலைவீச்சு திருநெல்வேலி
    தமிழகத்தில் மற்றுமொரு நாகர்கோவில் பாதிரியார் பாலியல் புகாரில் கைது நாகர்கோவில்
    மகளிர் இலவச பேருந்து காரணமாக பேருந்துகள் நிறுத்தப்பட்டது! தென்காசி ஆட்சியர் பரபரப்பு பேச்சு!  ட்ரெண்டிங் வீடியோ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025