Page Loader
8 தென் தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 
அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய 'தேஜ்' புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது.

8 தென் தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 

எழுதியவர் Sindhuja SM
Oct 23, 2023
06:20 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகம் மற்றும் இந்திய கடலோர பகுதிகள் 5 ஆண்டுகளுக்கு பிறகு இரட்டை புயலை எதிர்கொள்ள இருக்கிறது. வங்கக்கடல் பகுதிகளில் புயலாக மாறக்கூடும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது. இது ஹமூன் புயலாக மாற அதிக வாய்ப்புள்ளது. மேலும், அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய 'தேஜ்' புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. எனவே, இதன் காரணமாக, தமிழகத்தின் எந்த பகுதிகளில் அதிக மழை பெய்யக்கூடும் என்பதை இப்போது பார்க்கலாம். அக்டோபர் 23 தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்-- நெல்லை, கன்னியாகுமாரி, தென்காசி, தேனி, மதுரை, திண்டுக்கல, விருதுநகர்

லக்ட்னவ்க்

அக்டோபர் 24

தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. அக்டோபர் 25 தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. அக்டோபர் 26 முதல் அக்டோபர் 29 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும்.