Page Loader
25 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

25 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

எழுதியவர் Sindhuja SM
May 22, 2024
07:02 pm

செய்தி முன்னோட்டம்

தென்மேற்கு ஒட்டிய மேற்கு மத்திய வங்கக் கடலில் வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேசக் கடற்கரை அருகே குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. எனவே, மே 22 தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: கோவை, திருப்பூர், தேனி மற்றும் நீலகிரி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, தருமபுரி, கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், பெரம்பலூர்

தமிழகம் 

மே 23

தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும்.