NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாட்களுக்கு தடை
    அடுத்த செய்திக் கட்டுரை
    கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாட்களுக்கு தடை

    கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாட்களுக்கு தடை

    எழுதியவர் Sindhuja SM
    May 18, 2024
    10:02 am

    செய்தி முன்னோட்டம்

    தென்காசி பழைய குற்றாலம் அருவியில் நேற்று பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் திருநெல்வேலியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் அடித்துச் செல்லப்பட்டான்.

    பின்னர் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் அவனது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    எனவே, கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இறந்தவர் திருநெல்வேலியில் உள்ள என்ஜிஓ காலனியை சேர்ந்த கே அஸ்வின் என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

    அஸ்வின் சமீபத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வில் தேர்ச்சி பெற்றவர் ஆவார்.

    இந்நிலையில், நேற்று அந்த சிறுவன் தென்காசியின் மேலகரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்.

    இந்தியா 

    மணிமுத்தாறு அருவிகளுக்கு செல்லவும் தடை 

    அதனைத்தொடர்ந்து, நேற்று மதியம் குளித்து மகிழ, அவர் தனது உறவினர்களோடு பழைய குற்றாலம் சென்றார்.

    இந்நிலையில், அஸ்வின் மற்றும் சில சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து கொண்டிருந்த போது திடீரென நீர்வரத்து அதிகரித்தது. அப்போது வந்த வெள்ளத்தில் அவர் அடித்து செல்லப்பட்டார்.

    அதன்பிறகு, கலெக்டர் ஏ.கே.கமல் கிஷோர், எஸ்பி டி.பி.சுரேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    சிறிது நேரத்தில், பழைய குற்றாலம் அருவியில் இருந்து சுமார் அரை கி.மீ தொலைவில் அஸ்வின் உடலை தீயணைப்பு வீரர்கள் கண்டுபிடித்தனர்.

    பழைய குற்றாலம் மட்டுமின்றி குற்றாலம் மெயின் அருவி, ஐந்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனிடையே திருநெல்வேலியில் உள்ள மணிமுத்தாறு அருவிகள் மற்றும் மாஞ்சோலை மலைப்பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    குற்றாலம்
    தென்காசி
    திருநெல்வேலி

    சமீபத்திய

    சென்னையில் அதிகாலை முதல் மிதமழை; தமிழகத்தில் இன்று கனமழை எச்சரிக்கை எங்கே? தமிழகம்
    தீவிரமான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் ஜோ பைடன்
    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு

    குற்றாலம்

    குற்றால அருவியில் உற்சாக குளியல் - குவியும் சுற்றுலா பயணிகள்  சுற்றுலா
    சோகத்தில் முடிந்த சுற்றுலா; தென்காசியில் கார்-லாரி மோதி 6 பேர் பலி தென்காசி
    குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு; வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நெல்லை சிறுவன் வெள்ளம்

    தென்காசி

    'சலூன்' ரயில் பெட்டியில் தென்காசி சென்றார் முதல்வர் ஸ்டாலின்
    திருநெல்வேலியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல் - பெற்றோருக்கு வலைவீச்சு திருநெல்வேலி
    தமிழகத்தில் மற்றுமொரு நாகர்கோவில் பாதிரியார் பாலியல் புகாரில் கைது நாகர்கோவில்
    மகளிர் இலவச பேருந்து காரணமாக பேருந்துகள் நிறுத்தப்பட்டது! தென்காசி ஆட்சியர் பரபரப்பு பேச்சு!  தமிழ்நாடு

    திருநெல்வேலி

    நாங்குநேரி சம்பவம்: மேலும் ஒரு சிறுவன் கைது, சாதிரீதியான கயிறுகளுக்கு எதிராக நடவடிக்கை  காவல்துறை
    நாங்குநேரி சம்பவம் : மாணவருக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவர்கள் மூலம் சிகிச்சை தமிழக அரசு
    லோக்சபா தேர்தல் - நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் போட்டியிட விருப்பம்  பாஜக
    கூடங்குளம் அருகே தரைத்தட்டிய இழுவை கப்பல்  தூத்துக்குடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025