NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கனமழை எதிரொலி: 4 மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை; IT ஊழியர்களுக்கு WFH அறிவுறுத்தல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கனமழை எதிரொலி: 4 மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை; IT ஊழியர்களுக்கு WFH அறிவுறுத்தல்
    4 மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை என முதல்வர் அறிவுறுத்தல்

    கனமழை எதிரொலி: 4 மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை; IT ஊழியர்களுக்கு WFH அறிவுறுத்தல்

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 14, 2024
    02:05 pm

    செய்தி முன்னோட்டம்

    இன்று காலை 5.30 மணிக்கு, தென் கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி மேற்கு, வடமேற்கு திசை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது.

    இதனால், தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழை அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன் தொடர்ச்சியாக கனமழை எச்சரிக்கை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    அதன் பின்னர் வெளியான அறிவிப்பில் பருவமழை பாதிப்பு அதிகம் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ள நான்கு மாவட்டங்களில் - சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு, நாளை (அக்டோபர் 15) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அலுவலகம்

    IT அலுவலகங்களுக்கு WFH அறிவுறுத்தல்

    மேலும், பருவமழை தீவிரம் காரணமாக நாளை முதல் வரும் 18ஆம் தேதி வரை தனியார் IT நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்த வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

    மேலும், தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் பாதிப்பிற்குள்ளாகக்கூடிய பகுதிகளுக்கு முன்கூட்டியே அனுப்பி வைக்கப்பட வேண்டும் எனவும், வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய பகுதிகளில் மீட்பு படகுகள் இன்றே நிலைநிறுத்தப்பட வேண்டும் அவர் ஆய்வு கூட்டத்தில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    மேலும் பொதுமக்களின் வசதிக்காக மெட்ரோ மற்றும் பறக்கும் ரயில்களின் சேவைகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    மின் விநியோகம் சீராக இருக்கவும், கட்டுப்பாட்டு மையத்தில் கூடுதலான பணியாளர்கள் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    Read | கனமழை எச்சரிக்கை தொடர்பாக நடந்த ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய அறிவுறுத்தல்கள் என்னென்ன? 👇

    ▪️ நாளை (அக். 15) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.

    ▪️ நாளை முதல் வரும்…

    — Sun News (@sunnewstamil) October 14, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பள்ளிகளுக்கு விடுமுறை
    பள்ளிகளுக்கு விடுமுறை
    பள்ளி மாணவர்கள்
    பள்ளிகள்

    சமீபத்திய

    தொடர்ந்து அபத்தமாக உளறும் அமெரிக்கா அதிபர் டிரம்ப்: '0 வரி கட்டணங்கள்' எதுவும் முடிவு செய்யப்படவில்லை என்கிறார் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    இந்தியா அமெரிக்காவிற்கு '0-கட்டண' வர்த்தக ஒப்பந்தத்தை வழங்கியுள்ளதாக டிரம்ப் கூறுகிறார் இந்தியா
    இந்தியாவின் தாக்குதலால் பாகிஸ்தானின் கிரானா மலைகளில் கதிர்வீச்சு கசிவா? அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு மறுக்கிறது பாகிஸ்தான்
    கெனிஷா வாழ்வின் ஒளி... நல்ல தந்தையாக தொடர்வேன்.. ஆர்த்தி ரவியின் அறிக்கைக்கு ரவி மோகன் பதில் ரவி

    பள்ளிகளுக்கு விடுமுறை

    திருச்செந்தூர் அருகே பரிதாபம் - திடீர் வெடிச்சத்தம் கேட்டு 10 வயது பள்ளி மாணவன் பலி திருச்செந்தூர்
    புதுச்சேரியில் மார்ச் 16 முதல் 26 வரை பள்ளிகளுக்கு விடுமுறை - வேகமெடுக்கும் வைரஸ் காய்ச்சல் புதுச்சேரி
    மாணவர்களுக்கு நற்செய்தி! 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி!  புதுச்சேரி
    ஜூன் 12 ஆம் தேதிக்கு பள்ளிகளின் திறப்பு ஒத்திவைப்பு!  பள்ளி மாணவர்கள்

    பள்ளிகளுக்கு விடுமுறை

    திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் கனமழை எதிரொலி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மழை
    நவம்பர் 10 வரை பள்ளிகளை மூட உத்தரவு: டெல்லியில் அதிரடி  டெல்லி
    காற்று மாசுபாடு காரணமாக பள்ளிகளுக்கு நாளை முதல் குளிர்கால விடுமுறை: டெல்லியில் அதிரடி  டெல்லி
    கனமழை எச்சரிக்கை எதிரொலி- தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர்

    பள்ளி மாணவர்கள்

    கேரளா பள்ளியில் முன்னாள் மாணவர் துப்பாக்கி சூடு துப்பாக்கி சூடு
    முதல்வர் திறனாய்வு தேர்வு முடிவுகள் டிசம்பர் 1ம் தேதி வெளியாகும் என்று அறிவிப்பு   தமிழ்நாடு
    பள்ளிகளுக்கு மழைக்கான விடுமுறை அளிப்பதில் நிலவும் குழப்பத்திற்கு விரைவில் தீர்வு - பள்ளிக்கல்வித்துறை  பள்ளிக்கல்வித்துறை
    11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு  தமிழ்நாடு

    பள்ளிகள்

    10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொது தேர்வு தேதிகளில் மாற்றமில்லை: அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு
    பயிற்சி மையங்களில் 16 வயதுக்குட்பட்ட மாணவர்களை சேர்க்க முடியாது: மத்திய அரசு உத்தரவு கல்வி
    சென்னையில் உள்ள பிரபல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்  சென்னை
    சென்னை பள்ளிகளுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி: சென்னை பெருநகர கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025