NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / "இதயம் நொறுங்கியது" : மணிப்பூர் மக்களை சந்தித்த பிறகு ராகுல் காந்தி உருக்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    "இதயம் நொறுங்கியது" : மணிப்பூர் மக்களை சந்தித்த பிறகு ராகுல் காந்தி உருக்கம்
    மணிப்பூர் மக்களை சந்தித்த பிறகு ராகுல் காந்தி உருக்கம்

    "இதயம் நொறுங்கியது" : மணிப்பூர் மக்களை சந்தித்த பிறகு ராகுல் காந்தி உருக்கம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Jun 30, 2023
    05:03 pm

    செய்தி முன்னோட்டம்

    மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தபோது மனம் உடைந்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை (ஜூன் 30) தெரிவித்தார்.

    இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள ராகுல் காந்தி, "மணிப்பூரில் வன்முறையால் அன்புக்குரியவர்கள் மற்றும் வீடுகளை இழந்தவர்களின் நிலையைப் பார்ப்பது மற்றும் கேட்பது மனவேதனை அளிக்கிறது.

    ஒவ்வொரு சகோதரரின் முகத்திலும் உதவிக்கான கூக்குரல் உள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.

    மோதலால் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் அமைதி திரும்ப வேண்டுகோள் விடுத்த ராகுல் காந்தி, "மணிப்பூருக்கு இப்போது மிக முக்கியமான விஷயம் அமைதி மற்றும் மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பதுதான்.

    அந்த இலக்கை நோக்கி நமது முயற்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.

    state govt ban rahul gandhi visit

    ராகுல் காந்தியின் பயணத்தை தடுத்த மாநில அரசு

    முன்னதாக நேற்று, வியாழக்கிழமை (ஜூன் 29), மணிப்பூரின் சுராசந்த்பூரில் இனக் கலவரம் நடந்த பகுதிக்கு ராகுல் காந்தி காரில் சென்றார். ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் பாதி வழியில் தடுத்து நிறுத்தப்பட்டார்.

    இதையடுத்து மீண்டும் இம்பால் திரும்பி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் சென்றுள்ளார்.

    இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களைச் சந்திப்பதை அதிகாரிகள் தடுக்கிறார்கள் என்று முன்பு குற்றம் சாட்டிய மாநில காங்கிரஸ் தலைவர் கெய்ஷாம் மேகசந்திரா, பின்னர் மொய்ராங்கிற்கு வர நிர்வாகம் ராகுல் காந்தியை அனுமதிக்கவில்லை என்று கூறினார்.

    இது குறித்து பேசிய ராகுல் காந்தியும், அரசாங்கம் தன்னைத் தடுப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்றும், அமைதிக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ராகுல் காந்தி
    மணிப்பூர்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ராகுல் காந்தி

    ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம்: அடுத்து என்ன நடக்கும் இந்தியா
    எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு ராகுல் காந்தி கூறிய பதில் இந்தியா
    ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் 'காந்திய தத்துவத்திற்கு இழைத்த துரோகம்': அமெரிக்க எம்பி இந்தியா
    ராகுல் காந்தி தகுதி நீக்கத்தினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு காங்கிரஸ்

    மணிப்பூர்

    மணிப்பூர் வன்முறை: நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அமித்ஷா நடவடிக்கை  இந்தியா
    மணிப்பூர் வன்முறை: இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு இந்தியா
    மணிப்பூர் வன்முறையை விசாரிக்க குழு அமைக்கப்படும்: அமித்ஷா  இந்தியா
    மணிப்பூர் வன்முறை: 140 ஆயுதங்கள் மாநில நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது  மத்திய அரசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025