NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஹத்ராஸ்: 6 பேர் கைது, முக்கிய குற்றவாளிகள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஹத்ராஸ்: 6 பேர் கைது, முக்கிய குற்றவாளிகள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிப்பு
    சத்சங்கத்தில் கூடியிருந்த கூட்டம்

    ஹத்ராஸ்: 6 பேர் கைது, முக்கிய குற்றவாளிகள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 04, 2024
    04:33 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்தது செவ்வாய்க்கிழமை ஹத்ராஸில் நடைபெற்ற ஒரு மதக்கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த விவகாரத்தில், 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் சத்சங்கத்தை நடத்துவதில் ஈடுபட்டுள்ள ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது பற்றி அலிகார் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஷலப் மாத்தூர் கூறுகையில், "இந்த சம்பவத்தில் 4 ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்கள் மற்றும் 'சேவதர்களாக' பணியாற்றினர்." எனத்தெரிவித்தார்.

    பரிசு 

    தலைமறைவான முக்கிய குற்றவாளி

    இதற்கிடையில், 'முக்கிய சேவதர்' தேவ் பிரகாஷ் மதுகர் என்பவர் தான் எப்ஐஆரில் முக்கிய குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

    அவர் இந்த 'போலே பாபா'வின் பிராதன சீடராகவும், ஊரெங்கும் சத்சங்கங்களை நடத்துபவராகவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

    எனினும் தற்போது தலைமறைவாகி விட்ட மதுகரை கைது செய்ய, அவரைபற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என போலீசார் அறிவித்துள்ளனர்.

    மேலும்,மதுகரை கைது செய்ய நீதிமன்றத்தில் ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் ஒன்றை பிறப்பித்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    மாயம்

    மாயமான போலே பாபா

    எனினும், இந்த விவகாரத்தில் எஃப்.ஐ.ஆரில் சாமியார் 'போலே பாபா' பெயர் தற்போதுவரை சேர்க்கப்படவில்லை.

    அனாலும், காவல்துறையினர் அவரை தேடி வருவதாகவும், விரைவில் 'போலே பாபா'வையும் அதிகாரிகள் விசாரிக்கலாம் எனக்கூறப்படுகிறது.

    மறுபுறம், 'போலே பாபா' என்றழைக்கப்படும் நாராயண் சகார் ஹரியின் பின்னணி குறித்த தகவல்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

    கூட்டநெரிசலில் பலர் உயிரிழந்த நேரத்தில், சத்சங்க அமைப்பாளர்கள் சாட்சியங்களை அழித்தும், கூடியிருந்தவர்களின் செருப்புகள் மற்றும் பிற பொருட்களை அருகிலுள்ள வயல்களில் வீசியும் நிகழ்வில் இருந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை மறைக்க முயன்றதாக எஃப்ஐஆர் மேலும் குற்றம் சாட்டியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஹத்ராஸ்
    கைது

    சமீபத்திய

    மே 17இல் தொடங்குகிறது ஐபிஎல் 2025; ஆறு மைதானங்களில் மட்டும் போட்டி; ஜூன் 3இல் ஃபைனல் ஐபிஎல் 2025
    IACCS: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வான் பாதுகாப்பு வெற்றியின் முதுகெலும்பு இவர்கள்தான் ஆபரேஷன் சிந்தூர்
    கூகுள் பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ சேவை முடங்கியதால் பொதுமக்கள் அவதி யுபிஐ
    இது போருக்கான சகாப்தம் அல்ல.. ஆனால்.. பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள் பிரதமர் மோடி

    ஹத்ராஸ்

    ஹத்ராஸ்: மக்கள் நசுக்கப்பட்டாலும் போலே பாபா 'முதலில் வெளியேற' அனுமதி; FIR-இல் மாயமான பாபா பெயர்  உத்தரப்பிரதேசம்
    ஹத்ராஸ் நெரிசல்: இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என்று கூறிக்கொண்ட'போலே பாபா' உத்தரப்பிரதேசம்

    கைது

    நடிகை கௌதமி கொடுத்த நில மோசடி வழக்கில் 6 பேர் கைது - மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அதிரடி  காவல்துறை
    சென்னையில் ரூ.280 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்  இலங்கை
    அங்கித் திவாரி கைது எதிரொலி-லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு  திண்டுக்கல்
    பிரான்சில் கடந்த 4 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்ட பயணிகள் விமானம் இன்று மும்பை வந்து சேர்ந்தது  மும்பை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025