NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜார்கண்ட் மருத்துவக்கல்லூரியில் தமிழக மருத்துவர் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜார்கண்ட் மருத்துவக்கல்லூரியில் தமிழக மருத்துவர் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு 
    ஜார்கண்ட் மருத்துவக்கல்லூரியில் தமிழக மருத்துவர் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

    ஜார்கண்ட் மருத்துவக்கல்லூரியில் தமிழக மருத்துவர் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு 

    எழுதியவர் Nivetha P
    Nov 03, 2023
    12:29 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலம் நாமக்கல்-புத்தூரை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளியான மதியழகன், இவரது மனைவி பூங்கோடி.

    இவர்களுக்கு மதன்குமார்(28)என்ற மகனும், ஜனனி ஸ்ரீ (24)என்னும் மகளும் இருந்துள்ளனர்.

    மகள் ஜனனி லேப் டெக்னீஷியனாக தனியார் கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார்.

    மகன் மதன்குமார் தனது எம்.பி.பி.எஸ்.படிப்பினை முடித்துவிட்டு ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தடயவியல் மருத்துவப்படிப்பு 2ம்.,ஆண்டு ராஜேந்திரன் மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்துள்ளார்.

    மருத்துவக்கல்லூரி விடுதியில் தங்கி படித்துவந்த இவர் திடீரெனெ மாயமாகியுள்ளார்.

    இதனைத்தொடர்ந்து, சக மாணவர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர்.

    அப்போது அவர் விடுதியின் பின்புறம் பாதி எரிந்த நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த காவல்துறை, சடலத்தை மீட்டு பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    படுகொலை 

    சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும் காவல்துறை 

    மேலும், கொலை நடந்த இடங்களில் ஆய்வு செய்தனர்.

    அப்போது ஒரு மொபைல் போன் மற்றும் சில கைரேகைகளை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிகிறது.

    தமிழக மருத்துவர் மதன்குமாரை கொடூரமாக கொலை செய்த மர்ம நபர்கள் அவரை விடுதியின் மாடியில் வைத்து எரித்து பாதி எரிந்த பின்னர் மேலே இருந்து கீழே தள்ளிவிடப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வரும் காவல்துறை, பிரேதப்பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே முழு விவரம் தெரியவரும் என்று கூறியுள்ளனர்.

    இதனிடையே மருத்துவப்படிப்பு பயில வந்த தனது மகன் இறந்த செய்தி கேட்ட அவரது பெற்றோர் கதறி அழுத நிலையில் மதன்குமாரின் உடலை வாங்க தற்போது ராஞ்சிக்கு விமானம் மூலம் புறப்பட்டுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மருத்துவக் கல்லூரி
    தமிழ்நாடு
    கொலை
    காவல்துறை

    சமீபத்திய

    இந்தியா விநியோகத்தைக் குறைத்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் அணை கட்டுமானத்தை சீனா துரிதப்படுத்துகிறது பாகிஸ்தான்
    கவாசாகி எலிமினேட்டருக்கு போட்டியாக ரெபெல் 500 க்ரூஸரை இந்தியாவில் அறிமுகம் செய்தது ஹோண்டா ஹோண்டா
    வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது நடிகர் சூர்யா
    2024-25 நிதியாண்டிற்கான ஐடிஆர் தாக்கல்: முக்கிய காலக்கெடு மற்றும் விபரங்கள்; வரி செலுத்துபவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை வருமான வரி அறிவிப்பு

    மருத்துவக் கல்லூரி

    150 மருத்துவக் கல்லூரிகளிடம் இருந்து அங்கீகாரம் பறிக்கப்படலாம் இந்தியா
    மருத்துவ மாணவிகள் ஹிஜாப் அணிய ஐஎம்ஏ தலைவர் டாக்டர் சுல்பி நுஹு எதிர்ப்பு கேரளா
    செங்கல்பட்டு அரசு மருத்துவமனை - தவறான சிகிச்சை காரணமாக பெண் குழந்தையின் கை முறிவு  செங்கல்பட்டு
    லஞ்சம் பெற்ற விவகாரம்: தேனி அரசு மருத்துவமனை முதல்வர் பணியிடை நீக்கம் தேனி

    தமிழ்நாடு

    ஆம்னி பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் - ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் பண்டிகை
    ஒடிசா அரசாங்கத்தில் தமிழருக்கு முக்கிய பொறுப்பு ஒடிசா
    'அம்மான்னா சும்மா இல்ல டா' - கன்றுக்குட்டியை காப்பாற்ற 5 கிமீ வரை ஆட்டோவுக்கு பின்னால் ஓடிய தாய் பசு  தஞ்சாவூர்
    'மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர்' - சைக்கிளில் பயணம் செய்து விழிப்புணர்வு மேற்கொள்ளும் அசாம் இளைஞர்  அசாம்

    கொலை

    'சல்மான் கானை கண்டிப்பாக கொல்வோம்': கனடாவை சேர்ந்த ரவுடி மிரட்டல்  கனடா
    சீனாவில் மழலையர் பள்ளியில் கத்திக்குத்து, ஆறு பேர் பலியான பரிதாபம் சீனா
    ஆலந்தூர் ரயில்வே ஸ்டேஷன் கொலை வழக்கு - கைதானவர் மீதான குண்டர் சட்டம் ரத்து  காவல்துறை
    அலுவலகத்திற்குள் புகுந்து CEOவை வெட்டி கொன்ற முன்னாள் ஊழியர் பெங்களூர்

    காவல்துறை

    'லியோ' படத்தின் சிறப்பு காட்சிக்கு விதிக்கப்பட்ட புது கட்டுப்பாடுகள்  தமிழக அரசு
    சென்னையில் நடந்த சுங்கத்துறை தேர்வில் ப்ளூடூத் மூலம் தேர்வு எழுதி மோசடி - க்ரைம் ஸ்டோரி க்ரைம் ஸ்டோரி
    தொடரும் ஓலா, ஊபர் போராட்டம்; பாதுகாப்பு கோரும் ராப்பிடோ ஓட்டுனர்கள் ஓலா
    மு.க.அழகிரிக்கு எதிரான வழக்கு - மனுதாரருக்கு அபராதம் விதித்த உச்சநீதிமன்றம்  மதுரை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025