NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஞானவாபி மசூதியில் ஆக்கிரமிப்பு பணிகளை மேற்கொள்ளக் கூடாது: உச்ச நீதிமன்றம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஞானவாபி மசூதியில் ஆக்கிரமிப்பு பணிகளை மேற்கொள்ளக் கூடாது: உச்ச நீதிமன்றம் 
    மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இந்த ஆய்வு தொடங்கப்பட்டது.

    ஞானவாபி மசூதியில் ஆக்கிரமிப்பு பணிகளை மேற்கொள்ளக் கூடாது: உச்ச நீதிமன்றம் 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 24, 2023
    12:25 pm

    செய்தி முன்னோட்டம்

    வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தில் எந்தவிதமான ஆக்கிரமிப்பு பணிகளையும் மேற்கொள்ள வேண்டாம் என இந்திய தொல்லியல் துறைக்கு உச்ச நீதிமன்றம் இன்று(ஜூலை 24) உத்தரவிட்டது.

    வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி, ஒரு பழங்கால இந்து கோவிலின் மேல் கட்டப்பட்டதா என்பதை தீர்மானிக்க இன்று காலை இந்திய தொல்லியல் துறை அந்த மசூதியில் ஆய்வை தொடங்கியது.

    மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இந்த ஆய்வு தொடங்கப்பட்டது.

    இதற்கு எதிராக மசூதி நிர்வாகக் குழு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் இன்று விசாரணைக்கு வந்தது.

    "தொல்லியல் துறை ஆய்வுக்கு எதிராக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது, ​​அந்த உத்தரவு மீறப்பட்டுள்ளது" என்று மசூதி நிர்வாகத்தின் வழக்கறிஞர் வாதிட்டார்.

    பிஜிக்கி

    அறிவியல் பூர்வமாக மட்டும் அகழ்வாராய்ச்சி செய்ய அனுமதி

    மனுதாரர்களின் தரப்பை விசாரித்த இந்திய தலைமை நீதிபதி DY சந்திரசூட் "எந்தவொரு ஆக்கிரமிப்பு வேலையும் நடைபெறாமல் இருக்கும்படி நாங்கள் செய்கிறோம்" என்று தெரிவித்தார்.

    மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முஸ்லீம் மனுதாரர்களுக்கு கால அவகாசம் வழங்கலாம் என்றும் நீதிமன்றம் பரிந்துரைத்தது.

    மேலும், வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை ஜூலை 26ஆம் தேதி மாலை 5 மணி வரை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றம், ஞானவாபி மசூதி வளாகத்தை அறிவியல் பூர்வமாக மட்டும் அகழ்வாராய்ச்சி செய்ய தொல்லியல் துறைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

    அடுத்த வாரம் திங்கட்கிழமை வரை ஒரு வார காலத்திற்கு அந்த இடத்தில் எந்த தோண்டுதல் பணியும் நடைபெறாததை உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உச்ச நீதிமன்றம்
    தொல்லியல் துறை

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    உச்ச நீதிமன்றம்

    திருமணம் செய்துகொள்ள அனைவருக்கும் அடிப்படை உரிமை உள்ளதா: ஒரே பாலின திருமண விவாதம்  இந்தியா
    ஒரே பாலின திருமணங்களுக்கு ராஜஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது: மத்திய அரசு  ராஜஸ்தான்
    ஒரே பாலின தம்பதிகள் குழந்தையை தத்தெடுக்க சட்டம் அனுமதிக்கிறது: தலைமை நீதிபதி இந்தியா
    மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் பதவி பறிபோகுமா: உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு  இந்தியா

    தொல்லியல் துறை

    வடக்குப்பட்டில் நடக்கும் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட சோழர் கால தொல்பொருட்கள்  காஞ்சிபுரம்
    ஹைதராபாத்: 1,000 ஆண்டுகள் பழமையான சமண தூண்கள் கண்டுபிடிப்பு  ஹைதராபாத்
    தமிழ் மொழி அனைவரையும் வாழவைத்து கொண்டிருக்கிறது - மு.க.ஸ்டாலின் உரை  மு.க ஸ்டாலின்
    விருதுநகர் வெம்பக்கோட்டை அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள்  விருதுநகர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025