NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஞானவாபி வழக்கு: மசூதி வளாகத்திற்குள் ஆய்வை தொடங்கியது தொல்லியல் துறை
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஞானவாபி வழக்கு: மசூதி வளாகத்திற்குள் ஆய்வை தொடங்கியது தொல்லியல் துறை
    வசுகானா அமைப்பை தான் இந்து மனுதாரர்கள் சிவலிங்கம் என்று கூறுகிறார்கள்

    ஞானவாபி வழக்கு: மசூதி வளாகத்திற்குள் ஆய்வை தொடங்கியது தொல்லியல் துறை

    எழுதியவர் Sindhuja SM
    Jul 24, 2023
    10:11 am

    செய்தி முன்னோட்டம்

    இந்திய தொல்லியல் துறையை(ASI) சேர்ந்த 30 பேர் கொண்ட குழுவினர் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் இன்று(ஜூலை-24) ஆய்வை தொடங்கினர்.

    அந்த மசூதி ஒரு பழங்கால இந்து கோவிலின் மேல் கட்டப்பட்டதா என்பதை தீர்மானிப்பது அவர்களது நோக்கமாக உள்ளது.

    ஞானவாபி மசூதி நிர்வாகக் குழு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெறவுள்ள நிலையில் இந்த ஆய்வு தொடங்கியுள்ளது.

    ஐந்து இந்துப் பெண்கள் தங்களுக்கும் ஞானவாபி மசூதியில் வழிபடுவதற்கு உரிமை இருக்கிறது என்பதை நிலைநாட்ட கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனுவை விசாரித்த மாவட்ட நீதிபதி ஏ.கே.விஷ்வேஷ், மசூதியை ஆய்வு செய்து அதன் அறிக்கையை ஆகஸ்ட் 4ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு ASIக்கு உத்தரவிட்டார்.

    உய்ப்

     வசுகானா அமைப்பு இருக்கும் இடத்தில் ஆய்வு நடத்தப்படாது

    மசூதியின் மூன்று குவிமாடங்களுக்கு கீழே ஆய்வு செய்ய GPR(கிரவுண்ட் பெனட்ரேட்டிங் ரேடார்) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும், "தேவைப்பட்டால்" அங்கு அகழாய்வு நடத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதற்கு முன்பே உச்ச நீதிமன்றம் அந்த மசூதியின் வசுகானா அமைப்பை பாதுகாக்க உத்தரவு பிறப்பித்திருந்ததால், வசுகானா அமைப்பு இருக்கும் இடத்தில் ஆய்வு நடத்தப்படாது.

    இந்த அமைப்பை தான் இந்து மனுதாரர்கள் சிவலிங்கம் என்று கூறுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    தொல்லியல் துறை ஆய்வை அனுமதித்து மாவட்ட நீதிபதி தற்போது உத்தரவு பிறப்பித்திருப்பது, சிவலிங்கத்தின் ஆய்வை ஏற்கனவே ஒத்திவைத்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அவமதிப்பதாக உள்ளது என்று மஸ்ஜித் கமிட்டி வாதிட்டு வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தொல்லியல் துறை
    உச்ச நீதிமன்றம்

    சமீபத்திய

    பெங்களூருவில் 12 மணிநேரத்தில் 130 மி.மீ கனமழை: 3 பேர் உயிரிழப்பு - ஆரஞ்சு எச்சரிக்கை வெளியீடு பெங்களூர்
    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா காசா
    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025

    தொல்லியல் துறை

    வடக்குப்பட்டில் நடக்கும் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட சோழர் கால தொல்பொருட்கள்  காஞ்சிபுரம்
    ஹைதராபாத்: 1,000 ஆண்டுகள் பழமையான சமண தூண்கள் கண்டுபிடிப்பு  ஹைதராபாத்
    தமிழ் மொழி அனைவரையும் வாழவைத்து கொண்டிருக்கிறது - மு.க.ஸ்டாலின் உரை  மு.க ஸ்டாலின்
    விருதுநகர் வெம்பக்கோட்டை அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள்  விருதுநகர்

    உச்ச நீதிமன்றம்

    இஸ்லாமியர்கள் இட ஒதுக்கீடு விவகாரம் குறித்து அமித்ஷாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்  கர்நாடகா
    திருமணம் செய்துகொள்ள அனைவருக்கும் அடிப்படை உரிமை உள்ளதா: ஒரே பாலின திருமண விவாதம்  இந்தியா
    ஒரே பாலின திருமணங்களுக்கு ராஜஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது: மத்திய அரசு  ராஜஸ்தான்
    ஒரே பாலின தம்பதிகள் குழந்தையை தத்தெடுக்க சட்டம் அனுமதிக்கிறது: தலைமை நீதிபதி இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025