NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மணிப்பூரில் வன்முறை: மாநிலம் முழுவதும் இராணுவ பாதுகாப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    மணிப்பூரில் வன்முறை: மாநிலம் முழுவதும் இராணுவ பாதுகாப்பு
    மணிப்பூர் மாநிலத்தில் மொபைல் இன்டர்நெட் சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது மணிப்பூர் அரசு.

    மணிப்பூரில் வன்முறை: மாநிலம் முழுவதும் இராணுவ பாதுகாப்பு

    எழுதியவர் Sindhuja SM
    May 04, 2023
    02:07 pm

    செய்தி முன்னோட்டம்

    மெய்த்தே சமூகத்திற்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவது குறித்த நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக பழங்குடியின குழுக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வந்தது.

    இதற்கு மத்தியில், மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இராணுவம் இன்று(மே 4) அணிவகுப்பு நடத்தியது.

    இம்பால், சுராசந்த்பூர் மற்றும் காங்போக்பி ஆகிய இடங்களில் வன்முறை வெடித்ததை அடுத்து மணிப்பூரின் 8 மாவட்டங்களில் நேற்று இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    மணிப்பூர் மாநிலத்தில் மொபைல் இன்டர்நெட் சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது மணிப்பூர் அரசு.

    வன்முறையை கட்டுப்படுத்த ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் வரவழைக்கப்பட்டன.

    நிலைமையை கட்டுக்குள் வைத்திருக்க ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் சார்பில் இன்று கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.

    details

    7,500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மீட்கப்பட்டனர்

    வன்முறையைத் தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ராணுவ முகாம்கள் மற்றும் அரசு அலுவலக வளாகங்களில் 7,500-க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    "மணிப்பூரில் சட்டம் ஒழுங்கை மீட்டெடுப்பதற்காக இந்திய இராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் 7,500 க்கும் மேற்பட்ட பொதுமக்களை இரவோடு இரவாக வெளியேற்ற பெரிய மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன. மணிப்பூரில் உள்ள மக்களின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய இராணுவம் உறுதிபூண்டுள்ளது." என்று இராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    மெய்த்தே சமூகத்தை ST பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் 'பழங்குடியினர் ஒற்றுமை அணிவகுப்பு' பேரணியில் நேற்று கலந்துகொண்டனர்.

    இந்த போராட்டத்தை தொடர்ந்து அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    இந்திய ராணுவம்

    சமீபத்திய

    யூகோ வங்கியின் முன்னாள் தலைவரை அமலாக்கத்துறை கைது செய்தது அமலாக்கத்துறை
    தென்கிழக்கு ஆசியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; எந்தெந்த நாடுகளில் அதிக பாதிப்பு கொரோனா
    ரூ.20 கோடி மதிப்புள்ள வைரம் மாயம்: போலி வைரம் நீதிமன்றத்தில் எப்படி வந்தது? போலீசார் தீவிர விசாரணை நீதிமன்ற காவல்
    பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கிடையாது; ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலக பிசிசிஐ முடிவு பிசிசிஐ

    இந்தியா

    தமிழ்நாட்டில் மதமாற்றம் செய்யப்படுகிறதா: உச்ச நீதிமன்றத்திற்கு பதிலளித்த தமிழக அரசு தமிழ்நாடு
    ஜி20 மாநாடு: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்புப் படைகளை அனுப்ப திட்டமிட்டிருக்கும் மத்திய அரசு  ஜம்மு காஷ்மீர்
    காலிங் பெல்லை அடித்ததற்காக 3 சிறுவர்களை கொன்ற அமெரிக்க-இந்தியர்  அமெரிக்கா
    டெல்லியில் போராடும் மல்யுத்த வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதரவு மு.க ஸ்டாலின்

    இந்திய ராணுவம்

    விபத்தில் ராணுவ வீரர்கள் 16 பேர் பலி! இந்தியா
    குடியரசு தினத்தில் 50 போர் விமானங்கள் பங்கேற்பு; பொதுமக்களுக்கு 32 ஆயிரம் டிக்கெட் விற்பனை; இந்தியா
    'ஏரோ இந்தியா 2023' சர்வதேச விமான கண்காட்சி - பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார் மோடி
    இந்திய ராணுவத்தில் விரைவில் AI - என்னென்ன பயன்கள்? செயற்கை நுண்ணறிவு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025