NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தனியார் பள்ளிகளில் இலவச கல்வி திட்டத்தில் 80,000 பேர் விண்ணப்பம் - தமிழக அரசு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தனியார் பள்ளிகளில் இலவச கல்வி திட்டத்தில் 80,000 பேர் விண்ணப்பம் - தமிழக அரசு 
    தனியார் பள்ளிகளில் இலவச கல்வி திட்டத்தில் 80,000 பேர் விண்ணப்பம் - தமிழக அரசு

    தனியார் பள்ளிகளில் இலவச கல்வி திட்டத்தில் 80,000 பேர் விண்ணப்பம் - தமிழக அரசு 

    எழுதியவர் Nivetha P
    May 01, 2023
    02:00 pm

    செய்தி முன்னோட்டம்

    இலவச கட்டாய கல்வியினை 6-14 வயதுடைய அனைத்து குழந்தைகளுக்கும் வழங்க இலவச கட்டாய கல்விக்கான குழந்தைகளின் உரிமை சட்டம் தமிழ்நாடு அரசு மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    இது அரசியலமைப்பு சட்டம் 21-Aன் கீழ் சட்டமாக இயற்றப்பட்டது.

    இதன்படி வழக்கப்படி அரசு பள்ளிகளில் இலவசமாக மாணவர்கள் படிக்கலாம்.

    பொருளாதார ரீதியில் பின்தங்கிய குடும்பத்தினை சேர்ந்த குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படிக்க ஆசைப்பட்டால் அவர்களுக்கான வழியினையும் தமிழக அரசு செய்துள்ளது.

    அதன்படி ஒவ்வொரு தனியார் பள்ளிகளிலும் குறைந்தது 25%இந்த திட்டத்தின் கீழ் குழந்தைகளை சேர்த்து கொள்ளவேண்டும்.

    அவர்களுக்கான கட்டணத்தினை அரசு செலுத்திவிடும்.

    இதனைதொடர்ந்து இலவச மற்றும் கட்டாய கல்வி கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கான சேர்க்கை ஆன்லைன் மூலம் கடந்த 20ம்தேதி துவங்கியது.

    பள்ளி

    மே 18ம் தேதி வரை முன்பதிவு செய்யலாம் 

    ஆன்லைன் முன்பதிவு துவங்கி இந்த 10 நாட்களுக்குள் 80,000 பேர் இதில் விண்ணப்பித்திருப்பதாக தற்போது தனியார் பள்ளிகள் இயக்குனர் நாகராஜ முருகன் அறிவித்துள்ளார்.

    மேலும் நாகராஜ முருகன் கூறுகையில், மே 18ம் தேதி வரை இந்த பதிவு செய்வதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    rte.tnschools.gov.in என்னும் இணையதளம் மூலம் பெற்றோர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

    இந்த திட்டத்தின் மூலம் மாணவர்கள் 8ம்வகுப்பு வரை கட்டாய கல்வியினை பெறலாம்.

    இந்நிலையில் இந்த சட்டம் மூலம் பள்ளியில் சேர்க்கப்படாத குழந்தைகள், அவர்கள் வயதுக்கேற்ப வகுப்பில் சேர்வதற்கான ஏற்பாடுகளையும் அரசு வழங்குகிறது.

    இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் 3,98,000 மாணவர்கள் இலவச கல்வியினை பெறுகிறார்கள் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    தமிழக அரசு

    சமீபத்திய

    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025
    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி: ஆர்சிபி அணிக்கு எதிராக பீல்டிங் தேர்வு செய்த பிபிகேஎஸ்!  ஐபிஎல் 2025
    இந்தியாவிற்கு எதிராக திட்டமிடப்பட்ட 48 மணி நேர தாக்குதல் திட்டத்தை 8 மணி நேரத்திலேயே நிறுத்திய பாகிஸ்தான்; ஏன்? இந்திய ராணுவம்

    தமிழ்நாடு

    திருவேடகத்தில், திருஞானசம்பந்தர் பாடல் எழுதப்பட்ட தங்க ஏடு கண்டுபிடிப்பு தமிழக அரசு
    இனி, திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாறலாம்: தமிழக அரசு தமிழக அரசு
    திருமண மண்டபங்களில் மதுபானங்களுக்கு NO : அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு  தமிழ்நாடு செய்தி
    ரேஷன் கார்டில் மகளின் பெயரை நீக்கிய தந்தை - கலெக்டரிடம் மனு அளித்த மாணவி!  கடலூர்

    தமிழக அரசு

    அம்பாசமுத்திரம் பகுதியில் உயிர்பன்மை அருங்காட்சியகம் மற்றும் பாதுகாப்பு மையம் - தமிழக அரசு தமிழ்நாடு
    தமிழக பள்ளியில் இந்து மாணவர்கள் குங்குமம், விபூதி வைக்க தடை விதித்த தலைமை ஆசிரியை - வைரல் வீடியோ திண்டுக்கல்
    தமிழக கோயில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கான செலவினத்தொகை ரூ.50,000ஆக அதிகரிப்பு அறநிலையத்துறை
    3 வகையான சத்துமாவு திட்டம்: மார்ச் 1ஆம் தேதி ஆரம்பம் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025