NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஹரியானா இனமோதல்களுக்கு முன்னுரிமை அளித்த உச்ச நீதிமன்றம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஹரியானா இனமோதல்களுக்கு முன்னுரிமை அளித்த உச்ச நீதிமன்றம் 
    கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    ஹரியானா இனமோதல்களுக்கு முன்னுரிமை அளித்த உச்ச நீதிமன்றம் 

    எழுதியவர் Sindhuja SM
    Aug 02, 2023
    06:39 pm

    செய்தி முன்னோட்டம்

    ஹரியானாவில் இரண்டு மதத்தினருக்கு இடையே மோதல்கள் ஏற்பட்டதால், கடந்த இரண்டு நாட்களாக ஹரியானா மற்றும் டெல்லியில் பதட்டம் நிலவி வருகிறது.

    இந்த கலவரத்தை எதிர்த்து, விஷ்வ ஹிந்து பரிஷத்(VHP) மற்றும் பஜ்ரங்-தள் ஆகிய இந்து அமைப்பினர் இன்று டெல்லியில் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர்.

    இந்த போராட்டம் நடத்தப்பட்டால் மேலும் கலவரங்கள் வெடிக்க வாய்ப்பிருப்பதால், இந்த கலவரத்தை நிறுத்தவேண்டும் என்று கோரி பத்திரிகையாளர் ஷாஹீன்-அப்துல்லா சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இதற்கிடையில், ஜம்மு-காஷ்மீரின் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்ததற்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்க தொடங்கி இருந்தது.

    அதனால், இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5-நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முக்கியான அந்த மனுக்களை விசாரித்து கொண்டிருந்தது.

    டியோ

    'முக்கியமான பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை நிறுவ வேண்டும்': உச்ச நீதிமன்றம் 

    இந்நிலையில், மனுதாரர் ஷாஹீன் அப்துல்லாவின் வழக்கறிஞர் CU சிங், நீதிபதி அனிருத்தா போஸை இன்று காலை அணுகி, ஹரியானா விவகாரம் குறித்து சீக்கிரம் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரினார்.

    இந்த மனுவின் அவசரத்தை புரிந்து கொண்ட தலைமை நீதிபதி, உடனடியாக நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி எஸ்.வி.என்.பாட்டி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வை உருவாக்கி, இந்த வழக்கை இன்று பிற்பகல் 2 மணிக்கு விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், VHP மற்றும் பஜ்ரங் தள் நடத்தும் போராட்டங்களின் போது வெறுப்பு பேச்சு இருக்க கூடாது என்றும், வன்முறையை தடுக்க வேண்டும் என்றும் மத்திய/மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டனர்.

    மேலும், கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஹரியானா
    உச்ச நீதிமன்றம்
    டெல்லி
    டி.ஒய்.சந்திரசூட்

    சமீபத்திய

    துருக்கி மற்றும் அஜர்பைஜானுடன் எந்த வணிக உறவும் கிடையாது; அகில இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு முடிவு வர்த்தகம்
    பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை அழிக்க வெறும் 23 நிமிடங்கள் தான்; ராஜ்நாத் சிங் அதிரடி ராஜ்நாத் சிங்
    சீன, பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்தியாவின் பிரம்மோஸுக்கு இணையாக இல்லை: அமெரிக்க போர் நிபுணர் இந்தியா
    மழை பெய்யும்போது ஜொமாட்டோ, ஸ்விக்கியில் ஆர்டர் செய்பவரா நீங்கள்? அதிக டெலிவரி சார்ஜசிற்கு தயாராகுங்கள் ஸ்விக்கி

    ஹரியானா

    திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களில் கொள்ளை - தனிப்படைகள் அமைத்து காவல்துறை தேடல் திருவண்ணாமலை
    OYO நிறுவனரின் தந்தை 20வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார் இந்தியா
    கொலை வழக்கிற்கு சாட்ஜிபிடியின் உதவியை நாடிய நீதிமன்றம்! நடந்தது என்ன? சாட்ஜிபிடி
    லண்டன் கல்லூரியில் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் நடந்ததாக இந்திய மாணவர் குற்றம் சாட்டு லண்டன்

    உச்ச நீதிமன்றம்

    இம்ரான் கான் விடுவிப்பு: என்ன நடக்கிறது பாகிஸ்தானில் பாகிஸ்தான்
    'தி கேரளா ஸ்டோரி' விவகாரம்: தமிழ்நாடு, மேற்கு வங்க அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்  இந்தியா
    அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கிற்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு  போக்குவரத்து காவல்துறை
    ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கிற்கு இன்று தீர்ப்பு அளிக்கிறது உச்சநீதிமன்றம்  தமிழ்நாடு

    டெல்லி

    பிரதமர் மோடி பங்கேற்கும் டெல்லி பல்கலைக்கழக விழா: கருப்பு சட்டை அணிய தடை பிரதமர் மோடி
    டெல்லி மெட்ரோ ரயிலில் மதுபாட்டில்களை எடுத்துச் செல்ல அனுமதி மெட்ரோ
    குழந்தை தத்தெடுப்பு குறித்து திருநங்கை தொடர்ந்த வழக்கு - 2 வார கால அவகாசம்  காவல்துறை
    'விவசாயிகளின் நலனுக்காக ஆண்டுக்கு ரூ.6.5 லட்சம் கோடி செலவிடுகிறோம்': பிரதமர் மோடி இந்தியா

    டி.ஒய்.சந்திரசூட்

    தூக்கு தண்டனைக்கான மாற்று வழிகளை ஆய்வு செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றம் இந்தியா
    அதிக மரங்களை வெட்ட முற்பட்டதற்காக மும்பை மெட்ரோவிற்கு அபராதம்: உச்ச நீதிமன்றம்  இந்தியா
    ஒரே பாலின திருமணங்கள் பற்றி மாநிலங்கள் என்ன நினைக்கிறது: மத்திய அரசு கேள்வி  இந்தியா
    ஒரே பாலின திருமணங்கள்: 2வது நாள் விசாரணையில் என்ன விவாதிக்கப்பட்டது இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025