தமிழ்நாட்டிலிருந்து அயோத்திக்கு பட்டாசு ஏற்றி சென்ற லாரி தீப்பிடித்து வெடித்தது; வைரலாகும் காணொளி
செய்தி முன்னோட்டம்
வரவிருக்கும் ஜனவரி 22-ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
இந்த விழாவிற்காக, நேற்று, ஜனவரி 16 ஆம் தேதி இரவு, உத்தரபிரதேசத்தை நோக்கி, தமிழ்நாட்டில் இருந்து பட்டாசு ஏற்றிக்கொண்டு லாரி சென்றுள்ளது.
உன்னாவோவின் பூர்வா கோட்வாலி பகுதியில் உள்ள கார்கி கெடா கிராமத்திற்கு அருகே செல்லும் போது, லாரி தீப்பிடித்து எறிந்துள்ளது.
எரியும் வாகனத்திலிருந்து வானத்தை நோக்கி பட்டாசுகள் வெடித்து சிதறின. பெரும் சத்ததுடனும், வானவேடிக்கை போல லாரியிலிருந்த பட்டாசுகள் வெடித்தன என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
மூன்று மணி நேரத்துக்கும் மேலாக கொழுந்துவிட்டு எரிந்த தீ, தீயணைப்பு துறையினரால் பெரும் போராட்டத்திற்கு பிறகு அணைக்கப்பட்டது.
தீ விபத்தில் காயம் ஏதும் ஏற்படவில்லை. எனினும் தீவிபத்துக்கான காரணமும் தெரியவில்லை.
ட்விட்டர் அஞ்சல்
பட்டாசு ஏற்றி சென்ற லாரி தீப்பிடித்து வெடித்தது
#WATCH Live pictures of the explosion: On January 22, a sudden fire broke out in a truck full of firecrackers going from Tamil Nadu to Ayodhya for the consecration of Ram temple in #Ayodhya.. Explosion started. #RamMandirPranPratishta #explosion #firecrackers #unnao #TamilNadu pic.twitter.com/5FwYCLvF45
— chandan jha (@chandan_jha_11) January 17, 2024