NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பட்டாசு வெடிக்கும்போது தீக்காயம் ஏற்பட்டால் என்ன செய்வது? தீயணைப்புத்துறையினர் கூறும் அறிவுரை
    அடுத்த செய்திக் கட்டுரை
    பட்டாசு வெடிக்கும்போது தீக்காயம் ஏற்பட்டால் என்ன செய்வது? தீயணைப்புத்துறையினர் கூறும் அறிவுரை
    பட்டாசை வெடிக்கும் போது கவனமும், பாதுகாப்பும் மிக மிக அவசியம்

    பட்டாசு வெடிக்கும்போது தீக்காயம் ஏற்பட்டால் என்ன செய்வது? தீயணைப்புத்துறையினர் கூறும் அறிவுரை

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 30, 2024
    09:01 pm

    செய்தி முன்னோட்டம்

    இன்று தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்ண்டாடப்படுகிறது.

    பொதுமக்கள் புத்தாடை அணிந்து, இனிப்புகள் பகிர்ந்து, பட்டாசு வெடிப்பது மரபு.

    ஆனால் அந்த பட்டாசை வெடிக்கும் போது கவனமும், பாதுகாப்பும் மிக மிக அவசியம். ஆண்டுதோறும், பட்டாசு விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது.

    இதை தவிர்க்க பொதுமக்கள் சிறிது சிரத்தை எடுத்து பட்டாசு வேடிக்கையில் கவனமுடன் இருக்க வேண்டும்.

    இந்த நிலையில் பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிக்க என்ன செய்வது என தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை சில நெறிமுறைகளை குறிப்பிடுகிறது.

    நெறிமுறைகள்

    பட்டாசு வெடிக்கும்போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்

    பெரியவர்களின் முன்னிலையில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

    பட்டாசு வெடிக்க நீண்ட ஊதுபத்தி பயன்படுத்த வேண்டும்.

    பட்டாசு வெடிக்கும் இடத்தில் ஒரு வாளியில் தண்ணீரை வைத்திருக்க வேண்டும்.

    செருப்புகள் அணிந்து கொள்ள வேண்டும்.

    ராக்கெட் பட்டாசுகளை தவிர்க்க வேண்டும்; அவற்றை திறந்தவெளியில் வெடிக்கச் செய்யலாம்.

    மருத்துவமனை, கோயில், மற்றும் குடிசை வீடுகள் அருகே பட்டாசு வெடிக்கக்கூடாது.

    அதிக ஒலியுடன் கூடிய பட்டாசுகளை வெடிக்கக்கூடாது. அரசு அறிவித்த நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

    தீக்காயம்

    தீக்காயம் ஏற்பட்டால் என்ன செய்வது?

    தீக்காயம் ஏற்பட்டால், காயத்தில் உடனே தண்ணீர் ஊற்ற வேண்டும்.

    சிலர் தண்ணீர் ஊற்றினால் கொப்புளம் வரும் என நினைக்கிறார்கள், ஆனால் அது தவறு.

    தண்ணீர் ஊற்றிய பிறகு அருகிலுள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். இங்கே புளித்த மாவு போன்றவற்றை வைக்கக்கூடாது.

    பெரிதாக தீ விபத்து ஏற்பட்டால், உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    தீயணைப்பு வாகனங்கள் வருவதற்கு முன்னதாக, உடல்நலம் பருமனாக உள்ளவர்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளை பாதுகாப்பாக வெளியேற்றலாம்.

    மின்சார பெட்டிகளை அணைத்து, கேஸ் சிலிண்டரை வெளியே கொண்டு வரவும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தீபாவளி
    பண்டிகை

    சமீபத்திய

    CBSE +2 வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது; மாணவர்களை விட மாணவிகள் முன்னிலை சிபிஎஸ்இ
    ஜம்மு-காஷ்மீரின் ஷோபியனில் லஷ்கர் தீவிரவாதிகளுக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே மோதல்; ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை ஜம்மு காஷ்மீர்
    உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது எது? அன்னாசி பழமா? பப்பாளியா? உடல் ஆரோக்கியம்
    பொள்ளாச்சி பாலியல் வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளி என அதிரடி தீர்ப்பு பொள்ளாச்சி

    தீபாவளி

    துப்பாக்கி திரைப்படம் விஜய் நடிக்க காரணமாக இருந்தது யார் தெரியுமா? தீபாவளி 2023
    தீபாவளி பற்றி அதிகம் தேடப்பட்ட 5 கேள்விகள்: கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை வெளியீடு தீபாவளி 2023
    அதிக காட்சிகளை திரையிட்டதற்காக திருப்பூர் சுப்பிரமணியம் திரையரங்குக்கு நோட்டீஸ் தமிழ்நாடு
    கனடாவில் தீபாவளி கொண்டாட்டத்தை சீர்குலைத்த காலிஸ்தானிகள் கனடா

    பண்டிகை

    தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் தற்காலிக பேருந்து நிலையங்கள் சென்னை
    ஆயுத பூஜை ஏன் கொண்டாடப்படுகிறது? அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவங்கள் என்னென்ன? ஆயுத பூஜை
    தென்னிந்தியாவிலேயே சரஸ்வதிக்கென அமைந்துள்ள தனி கோயிலில் ஆயுத பூஜை சிறப்பு வழிபாடு தமிழ்நாடு
    வெற்றிகளை வழங்கும் விஜயதசமி - வரலாறு அறிவோம் வாருங்கள் விஜயதசமி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025