Page Loader
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாள்: காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி 
1984 முதல் 1989 வரை இந்தியாவின் 7வது பிரதமராக பதவி வகித்த ராஜீவ் காந்தி ஆகஸ்ட் 20, 1944 அன்று பிறந்தார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாள்: காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி 

எழுதியவர் Sindhuja SM
Aug 20, 2023
11:18 am

செய்தி முன்னோட்டம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளையொட்டி, அரசியல் தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று லடாக்கில் உள்ள பாங்காங் சோ நதிக்கரையில் இருந்து அவருக்கு அஞ்சலி செலுத்தினார். இதற்கிடையில், சோனியா காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே, பிரியங்கா காந்தி வத்ரா மற்றும் பிற காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் வைத்து முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு அஞ்சலி செலுத்தினர். 1984 முதல் 1989 வரை இந்தியாவின் 7வது பிரதமராக பதவி வகித்த ராஜீவ் காந்தி ஆகஸ்ட் 20, 1944 அன்று பிறந்தார்.

ட்ஜ்க

பாங்காங் ஏரிக்கரையில் இன்று பிரார்த்தனை கூட்டம் நடைபெறுகிறது

காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களும் இன்று அதிகாலை டெல்லியில் உள்ள வீரபூமிக்கு வெளியே ராஜீவ் காந்திக்கு அஞ்சலி செலுத்தினர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 79வது பிறந்தநாளை முன்னிட்டு பாங்காங் ஏரிக்கரையில் இன்று பிரார்த்தனை கூட்டம் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 20ஆம் தேதி தனது தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று லடாக்கில் உள்ள பாங்காங் ஏரிக்கு பைக்கில் புறப்பட்டார். நேற்று தன் பயணம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்த ராகுல் காந்தி, "பாங்காங் ஏரிக்கு சென்று கொண்டிருக்கிறோம். இது உலகின் மிக அழகான இடங்களில் ஒன்று என்று என் தந்தை சொல்லி இருக்கிறார்" என கூறி இருந்தார்.