NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆர்ம்ஸ்ட்ராங் கொலையில் கைதான திருவேங்கடம் என்கவுன்ட்டர்: உண்மையை மறைக்க அரங்கேற்றப்பட்டதா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆர்ம்ஸ்ட்ராங் கொலையில் கைதான திருவேங்கடம் என்கவுன்ட்டர்: உண்மையை மறைக்க அரங்கேற்றப்பட்டதா?
    இந்த என்கவுண்டர் விவகாரம் பல சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பாமல் இல்லை

    ஆர்ம்ஸ்ட்ராங் கொலையில் கைதான திருவேங்கடம் என்கவுன்ட்டர்: உண்மையை மறைக்க அரங்கேற்றப்பட்டதா?

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 15, 2024
    03:38 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாட்டின் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங் சில நாட்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதானவர்களில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ரவுடி திருவேங்கடம், நேற்று தமிழக காவல்துறையினரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளார்.

    ஆர்ம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை திருவேங்கடம் வசம் இருந்ததாகவும், அவற்றை கைப்பற்ற திருவேங்கடம் தங்கியிருந்த வீட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் அவரை அழைத்துச் சென்ற போது, அவர் தப்ப முயன்றதாகவும், காவல்துறையினர் சிலரை அவர் தாக்கியதாகவும், உடனே போலீசார் தற்காப்புக்காக சுட்டதில் அவர் உயிரிழந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இந்த என்கவுண்டர் விவகாரம் பல சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பாமல் இல்லை.

    எதிர்க்கட்சிகள்

    இந்த என்கவுண்டரில் பல கேள்விகள் அரசியல் வல்லுநர்கள் எழுப்பியுள்ளனர்

    இந்த என்கவுண்டரில் பல கேள்விகள் அரசியல் வல்லுநர்கள் எழுப்பியுள்ளனர் இந்த என்கவுண்டர் விவகாரமே, யாரையோ தப்ப வைக்க நடைபெற்றதாகவும், இது ஒரு போலி என்கவுண்டர் என அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    திருவேங்கடம் கொல்லப்பட்டது, கொலையின் பின்னணியில் உள்ள உண்மையை மூடிமறைக்கும் என்றும், மாநில அரசு தொடர்ந்து உண்மைகளை மறைத்து வருவதாகவும் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.

    அதிமுக செயல்தலைவர் எடப்பாடி பழனிசாமியும், பாமக நிறுவனர் ராமதாசும் இந்த விவகாரத்தில் சந்தேங்கள் இருப்பதாக கூறினார்.

    கேள்விகள்

    பல விடை தெரியாத கேள்விகளை எழுப்பும் என்கவுண்டர்

    இந்த என்கவுண்டர் விவகாரத்தில், பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்துள்ளன: அதிகாலையில் அழைத்துச் சென்று கொலையை செய்யப்பட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன?

    காவலில் இருக்கும் கைதி கைவிலங்கிட்டு இருக்கும் போது எப்படி காவல்துறையினரை தாக்க முடியும்? கொலை செய்ததாக தானே சரணடைந்ததாக கூறப்படும் நபர் தப்பி ஓட வேண்டும் என எப்படி நினைத்திருப்பார்?

    அவர் கையில் கள்ளத்துப்பாக்கி எப்படி வந்தது? என பல விடைதெரியாத கேள்விகள் இந்த விஷயத்தில் ஆளுங்கட்சி எதையோ மறைக்க நினைக்கிறது என்ற பிம்பத்தையே அதிகரிக்கிறது.

    இந்த கொலை வழக்கில் தானாக சரணடைந்தவர் ஏன் தப்பியோட முயற்சிக்க வேண்டும் என்ற கேள்வி எழுவதாக, 'மக்கள் கண்காணிப்பகம்' அமைப்பை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் ஆசீர்வாதம் கூறுகிறார்.

    அரசியல் கொலை

    திமுக ஆட்சியில் அரசியல் கொலைகள் அதிகரித்துள்ளனவா?

    தமிழகத்தில் அடுத்தடுத்து நடைபெறும் அரசியல் கொலை சம்பவங்களால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒரு பக்கம், 'தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே சட்டம் ஒழுங்கு சீர்குலையும்.

    ஸ்டாலினின் விடியல் ஆட்சியிலும் அது விதிவிலக்கல்ல' என அ.தி.மு.க குற்றம் சுமத்துகிறது.

    ஆனால், ஆளும் திமுக அரசோ, 'முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல்துறை இருப்பதால்தான் ஆளும்கட்சியினர் தவறு செய்தால் கூட கைது செய்யப்படுகிறார்கள்' என்கிறது.

    ஸ்டாலினின் தி.மு.க ஆட்சிக்கு வந்த 200 நாள்களில் 587 கொலைகள் நடந்துள்ளதாக அரசு வழக்கறிஞரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான ஐ.எஸ்.இன்பதுரை ஆளுநர் ரவியிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

    இந்த கொலைகளுக்கு ஆளும் கட்சியின் பதில் என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

     SC வழிகாட்டுதல்கள் 

    என்கவுண்டர் குறித்து SC வழிகாட்டுதல்கள் 

    குற்றவியல் நடமாட்டம் தொடர்பான எந்தவொரு உளவுத்துறை அல்லது உதவிக்குறிப்பும் வழக்கு நாட்குறிப்பில் அல்லது ஏதேனும் மின்னணு வடிவத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.

    என்கவுன்டர்-மரணத்தின் போது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட வேண்டும்.

    என்கவுன்டர் தொடர்பாக ஒரு சுயாதீன விசாரணை CID அல்லது மற்றொரு காவல் நிலையத்தின் போலீஸ் குழுவால் நடத்தப்பட வேண்டும்.

    என்கவுண்டர் சம்பவம் பற்றிய தகவல் NHRC அல்லது மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு அனுப்பப்பட வேண்டும் உள்ளிட்ட நடைமுறை விதிகளை உச்ச நீதிமன்றம் வகுத்துள்ளது.

    அதேபோல மனித உரிமைகள் ஆணையமும் என்கவுன்டரில் காவல்துறையினரே சம்பந்தப்பட்டிருப்பதால், மாநில சிஐடி போன்ற ஒரு சுயாதீன ஏஜென்சியால் வழக்குகள் விசாரிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட விதிகளை வகுத்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கொலை
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி
    தமிழக காவல்துறை

    சமீபத்திய

    தனது 65வது பிறந்தநாளில் 'முகரகம்' என்ற சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டார் மோகன்லால் மோகன்லால்
    கல்வி நிதி வழங்க மறுக்கும் மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தமிழக அரசு
    புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக் கர்நாடகா
    175 பில்லியன் டாலர் மதிப்புள்ள 'Golden Dome' பாதுகாப்புத் திட்டத்தை டிரம்ப் வெளியிட்டார்; அதன் சிறப்பம்சங்கள் என்ன? அமெரிக்கா

    கொலை

    ஏமனில் மரண தண்டனையில் உள்ள மகளைக் காப்பாற்ற "பணம்" ஒப்பந்தம் செய்ய தாய்க்கு அனுமதி ஏமன்
    அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் மீது இந்தியா விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: இந்திய-அமெரிக்க தலைவர்கள் வலியுறுத்தல் அமெரிக்கா
    பீகாரில் கோவில் பூசாரி சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து பதற்றம் பீகார்
    செக் குடியரசு துப்பாக்கிச் சூடு: சார்லஸ் பல்கலைக்கழகத்தில் 14 பேர் சுட்டுக்கொலை, 25 பேர் காயம் துப்பாக்கி சூடு

    தமிழ்நாடு

    ஸ்மோக்கிங் பிஸ்கெட் விவகாரம்: தமிழ்நாடு உணவுப்பாதுகாப்புத்துறை விடுத்த எச்சரிக்கை தமிழ்நாடு செய்தி
    இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாட்டை சேர்ந்த மாணவி அமெரிக்காவில் கைது  அமெரிக்கா
    மலக்குடலில் மறைத்து தங்கம் கடத்தல்: 70 லட்சம் மதிப்புள்ள தங்கம் திருச்சியில் பறிமுதல் திருச்சி
    ஊட்டி உள்ளிட்ட குளிர் பிரதேசங்களை தாக்கியது வெப்ப அலைகள்  கேரளா

    தமிழ்நாடு செய்தி

    ஊராட்சிகளுக்கு வரி செலுத்த புதிய இணையதளம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் தமிழ்நாடு
    விரைவில் திருநங்கைகளுக்கும் உரிமை தொகை: அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு  தமிழக அரசு
    மறைந்த பங்காரு அடிகளாரின் இறுதி சடங்கு இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் தமிழ்நாடு
    தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது; நாளை கனமழை பெய்ய வாய்ப்பு கனமழை

    தமிழக காவல்துறை

    காணும் பொங்கல்: சுற்றுலா தளங்களில் குவியும் பொதுமக்கள் பொங்கல்
    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டின் கொள்ளை வழக்கில் சிக்கிய மூன்றாவது ஆள் யார்? வைரல் செய்தி
    ஐஸ்வர்யா வீட்டின் கொள்ளை விவகாரத்தில் புதிய ட்விஸ்ட்: காணாமல் போனதோ 60 சவரன்; மீட்கப்பட்டதோ 100 சவரன்! தமிழ்நாடு
    சென்னை கலாஷேத்ரா மாணவிகளின் பாலியல் தொல்லை விவகாரம் - விசாரணை நடத்த டிஜிபி உத்தரவு சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025