NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உத்தரகாண்ட் சுரங்கபாதையில் சிக்கியுள்ள 41 பேரை மீட்க இன்னும் 4-5 நாட்கள் ஆகும் என்று தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உத்தரகாண்ட் சுரங்கபாதையில் சிக்கியுள்ள 41 பேரை மீட்க இன்னும் 4-5 நாட்கள் ஆகும் என்று தகவல்
    மீட்புப் பணிகளை மேற்பார்வையிட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று உத்தரகாண்ட் சென்றடைந்தார்.

    உத்தரகாண்ட் சுரங்கபாதையில் சிக்கியுள்ள 41 பேரை மீட்க இன்னும் 4-5 நாட்கள் ஆகும் என்று தகவல்

    எழுதியவர் Sindhuja SM
    Nov 19, 2023
    01:18 pm

    செய்தி முன்னோட்டம்

    உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணிகள் 8வது நாளாக நடந்து வரும் நிலையில், நான்கு வெவ்வேறு ஏஜென்சிகளை கொண்டு 4 விதமான மீட்புப் பணியைத் தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    மீட்புப் பணிகளை மேற்பார்வையிட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று உத்தரகாண்ட் சென்றடைந்தார்.

    மீட்புப் பணிகள் முடிய இன்னும் 4 முதல் 5 நாட்கள் ஆகலாம் என்று பிரதமர் அலுவலகத்தின் முன்னாள் ஆலோசகர் பாஸ்கர் குல்பே கூறியுள்ளார்.

    "ஆனால் தெய்வங்கள் போதுமான அளவு கருணை காட்டினால், அது அதற்கு முன்னதாகவே நடக்கும்," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    டக்ஜ்வ்

    அவசரகால வெளியேற்ற பாதை தற்போது கட்டப்பட்டு வருகிறது

    தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அவசரகால வெளியேற்ற பாதை தற்போது கட்டப்பட்டு வருகிறது.

    இன்று பிற்பகலுக்குள் எல்லைச் சாலைகள் அமைப்பு(BRO) சில்க்யாரா சுரங்கப்பாதைக்கு ஒரு புதிய சாலையைக் கட்டி முடிக்கும் என்று மீட்புக் குழு அதிகாரிகள் நம்புகிறார்கள்.

    அப்படி அது கட்டி முடிக்கப்பட்டால், அது சிக்கிய தொழிலாளர்களை அடைய மற்றொரு வழியை கொடுக்கும்.

    8 நாட்காளாக அந்த தொழிலாளர்களை மீட்க மீட்பு குழுக்கள் அதிநவீன ட்ரில்லிங் இயந்திரங்களை வைத்து பாறைகளில் துளையிட்டு வந்தனர்.

    எனினும், தோண்டும் பணி நடந்து கொண்டிருக்கும் போது பாதியிலேயே அந்த சுரங்கப்பாதை மீண்டும் மீண்டும் இடிந்து விழுந்ததால், இதுவரை துளையிடும் பணியை முழுமையாக முடிக்க முடியவில்லை.

    இதனால், வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்ட மீட்பு பணிகள் இன்னும் தொடங்கவில்லை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரகாண்ட்
    மத்திய அரசு

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    உத்தரகாண்ட்

    ஜோஷிமத்: அரசாங்க கணக்கெடுப்பிற்கு மாற்று கருத்து தெரிவிக்கும் மக்கள் இந்தியா
    ஜோஷிமத் தீர்வுத் திட்டத்தைச் சமர்பித்தனர் உத்தரகாண்டின் சாமோலி அதிகாரிகள் இந்தியா
    உத்தரகாண்டில் பெண் விவசாயிகள் கொண்டு இயங்கும் வேளாண் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனம் இந்தியா
    நைனிடால், முசோரியில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அதிக சேதம் ஏற்படும் இந்தியா

    மத்திய அரசு

    காவிரி விவகாரம்: தமிழக டெல்டா மாவட்டங்களில் முழு கடையடைப்பு போராட்டம்  தமிழ்நாடு
    வடகிழக்கு எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்து- 4 பேர் பலி, 100 பேர் காயம் டெல்லி
    காவிரி விவகாரம் - சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பிவைப்பு தமிழ்நாடு
    புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்கா பதவி ராஜினாமாவா? பதவி நீக்கமா? - தமிழிசை விளக்கம் தமிழிசை சௌந்தரராஜன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025