NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'வாக்களிக்கும் உரிமைக்கு தகவல் அவசியம்': தேர்தல் பத்திரத் திட்டத்தை ரத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    'வாக்களிக்கும் உரிமைக்கு தகவல் அவசியம்': தேர்தல் பத்திரத் திட்டத்தை ரத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
    தேர்தல் பத்திரத் திட்டத்தை ரத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

    'வாக்களிக்கும் உரிமைக்கு தகவல் அவசியம்': தேர்தல் பத்திரத் திட்டத்தை ரத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 15, 2024
    11:18 am

    செய்தி முன்னோட்டம்

    தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில்,"வாக்களிக்கும் உரிமைக்கு தகவல் அவசியம்" என்று என்று கூறி, தேர்தல் பத்திரத் திட்டத்தை ரத்து செய்யவேண்டுமென உச்ச நீதிமன்றம் ஒருமனதாக தீர்ப்பளித்துள்ளது.

    வாக்காளர்கள் வாக்களிக்கத் தேவையான அத்தியாவசிய தகவல்களைப் பெற உரிமை உண்டு என்றும், தேர்தல் செயல்பாட்டில் அரசியல் கட்சிகள் முக்கியப் பங்காற்றுகின்றன என்றும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியது.

    ஜனவரி 2018 இல் தொடங்கப்பட்ட, தேர்தல் பத்திரங்கள் திட்டம் என்பது தனிநபர்கள் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள், ஒரு வங்கியிலிருந்து வாங்கி அரசியல் கட்சிக்கு வழங்கக்கூடிய நிதிக் கருவிகள் ஆகும். அரசியல் பங்களிப்பை சட்டம் அனுமதிக்கும் போது, ​​பங்களிப்பாளர்களின் தொடர்புகளையும் அது சுட்டிக்காட்டுகிறது என்றும், அவர்களைப் பாதுகாப்பது அரசியலமைப்பின் கடமை என்றும் தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் கூறினார்.

    தேர்தல் பத்திரங்கள்

    தேர்தல் பாத்திரங்கள் குறித்து நீதிபதிகள் கூறியது என்ன?

    அரசியல் கட்சிகள் தேர்தல் செயல்பாட்டில் தொடர்புடைய அமைப்புகள் என்றும், அரசியல் கட்சிகளுக்கு நிதியுதவி செய்பவர்கள் பற்றிய தகவல்கள் அவசியம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

    நிதி அளிப்பவர்கள் பற்றிய விவரங்களைக் குறிப்பிடாத தேர்தல் பத்திரங்கள் அரசியல் சானத்தின் பிரிவு 19(1)(a) இன் கீழ் தகவல் அறியும் உரிமையை மீறுவதாகவும் உச்ச நீதிமன்றம் கூறுகிறது.

    தனிநபர்கள், வர்த்தக நிறுவனங்கள், கட்சியினர் தங்களது அடையாளங்களை வெளிப்படுத்தாமல், அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்குவதற்கு வசதியாக இந்தத் தேர்தல் பத்திரத் திட்டம் கொண்டுவரப்பட்டது.

    இத்திட்டத்தின் விதிகளின்படி, இந்தியாவின் எந்தவொரு குடிமகன், நாட்டில் இணைக்கப்பட்ட அல்லது நிறுவப்பட்ட நிறுவனம் தேர்தல் பத்திரங்களை வாங்கலாம். இந்த பத்திரங்கள் ரூ. 1,000 முதல் ரூ 1 கோடி வரை பல்வேறு மதிப்புகளில் கிடைக்கின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தேர்தல்
    வாக்காளர்

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    தேர்தல்

    தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி நாளை பதவியேற்க உள்ளதாக தகவல்  தெலுங்கானா
    3 முக்கியத் தலைவர்கள் பங்கேற்க மறுத்ததால் INDIA கூட்டணி கட்சிகள் கூட்டம் ஒத்திவைப்பு  காங்கிரஸ்
    டிசம்பர் 21இல் இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு தேர்தல் நடத்தப்படும் என அறிவிப்பு மல்யுத்தம்
    தனது மருமகனை அரசியல் வாரிசாக அறிவித்தார் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி உத்தரப்பிரதேசம்

    வாக்காளர்

    கலர் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி? தேர்தல் ஆணையம்
    வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுவதும், 6.11 கோடி வாக்காளர்கள் தமிழ்நாடு
    வாக்காளர் பட்டியலின் திருத்த பணிகள் - இன்றும் நாளையும் சிறப்பு முகாம்கள்  தேர்தல் ஆணையம்
    வாக்காளர் அடையாள அட்டையின்றி ஓட்டளிப்பது எப்படி எனத்தெரிந்து கொள்ளுங்கள் வாக்காளர் அடையாள அட்டை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025