NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆந்திரா, கேரளா மாநிலத்திலிருந்து இறக்கப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆந்திரா, கேரளா மாநிலத்திலிருந்து இறக்கப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள்
    சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜியை நேற்று கைது செய்தனர் அமலாக்கத்துறையினர்

    ஆந்திரா, கேரளா மாநிலத்திலிருந்து இறக்கப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 15, 2023
    08:57 am

    செய்தி முன்னோட்டம்

    நேற்று(ஜூன் 14.,) முழுவதும், தமிழ்நாட்டின் அரசியல் சூழல் பரபரப்பாக காணப்பட்டது. அதற்கு காரணம், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டதும், அதன் தொடர்ச்சியாக அவர் உடல்நலம் குன்றி, ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் தான்.

    சட்டவிரோத பணப்பரிமாற்றம் நிகழ்ந்ததாக அமலாக்கத்துறையினரால் நடத்தப்பட்ட இந்த ரைடு குறித்து புதுத்தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

    அதன்படி, இந்த சோதனைக்காக அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா போன்றவற்றிலிருந்து அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளனராம்.

    இவர்கள் அனைவரும் சென்னை, கோவை என சோதனை நடைபெறும் இடங்களுக்கு அருகே ஒரு நாள் முன்னரே முகாமிட்டுள்ளனர்.

    அங்கிருந்து மறுநாள் அதிகாலை, அதாவது செவ்வாய் கிழமை (ஜூன் 13 .,) சோதனை நடத்த வேண்டிய இடங்களுக்கு குழுக்களாக பிரிந்து சென்றுள்ளனர்.

    card 2

    ஒரு வாரமாக நோட்டமிட்ட அமலாக்கத்துறையினர் 

    இந்த சோதனை குழுக்கள், கைப்பற்றப்படும் ஆவணங்கள் மற்றும் பணம் குறித்த விவரங்களை, உடனுக்குடன் டெல்லியில் இருந்த உயர்அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பும் விதமாக, கையோடு லேப்டாப்பையும் கொண்டு வந்துள்ளனர்.

    சேகரிக்கப்பட்ட விவரங்கள் அனைத்தையும், அவர்களுக்கு அனுப்பிய பிறகு, அவர்கள் உத்தரவின் பேரில், அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளனர் சோதனை அதிகாரிகள்.

    மேலும், இந்த சோதனைக்கு முன்னர் ஒரு வாரமாக, செந்தில் பாலாஜியின் நடவடிக்கைகளை அவர்கள் கண்காணித்ததாகவும் கூறப்படுகிறது.

    மறுபுறம், செந்தில் பாலாஜியும் இந்த சோதனையை எதிர்பார்த்ததாகவே கூறப்படுகிறது.

    இந்நிலையில் செந்தில் பாலாஜி சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பெயில் உள்ளிட்ட 3 வழக்குகளின் விசாரணை இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    செந்தில் பாலாஜி
    அமலாக்க இயக்குநரகம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    செந்தில் பாலாஜி

    'பழிவாங்கும் அரசியல்': செந்தில் பாலாஜி கைதுக்கு மத்திய அரசை சாடிய மல்லிகார்ஜுன கார்கே இந்தியா
    கைதுசெய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதயத்தில் 3 அடைப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தகவல் ரெய்டு
    காவிரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி  தமிழ்நாடு
    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூன் 28 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு  தமிழ்நாடு

    அமலாக்க இயக்குநரகம்

    அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்க துறையினர் சோதனை  சென்னை
    தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025