NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / விஜய் மல்லையா, நிரவ் மோடியிடம் இருந்து பலகோடி சொத்துக்கள் மீட்பு: நிதி அமைச்சர் தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    விஜய் மல்லையா, நிரவ் மோடியிடம் இருந்து பலகோடி சொத்துக்கள் மீட்பு: நிதி அமைச்சர் தகவல்
    பணமோசடி தடுப்புச் சட்டத்தில் பலகோடி சொத்துக்கள் மீட்பு

    விஜய் மல்லையா, நிரவ் மோடியிடம் இருந்து பலகோடி சொத்துக்கள் மீட்பு: நிதி அமைச்சர் தகவல்

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 18, 2024
    12:50 pm

    செய்தி முன்னோட்டம்

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாயன்று, அமலாக்க இயக்குனரகம் (ED) 22,280 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உரிமை கோருபவர்களுக்கு வெற்றிகரமாக மீட்டெடுத்துள்ளது என தெரிவித்தார்.

    அதோடு, பொருளாதார குற்றவாளிகளை எதிர்த்துப் போராடுவதில் மத்திய அரசாங்கத்தின் இடைவிடாத உறுதிப்பாட்டை இது வலியுறுத்துகிறது எனவும் நாடாளுமன்றத்தில் நடைபெறும் குளிர்காலகூட்டத்தொடரின் போது அவர் தெரிவித்தார்.

    மானியங்களுக்கான துணைக் கோரிக்கைகளின் முதல் தொகுதி மீதான விவாதத்தின் போது மக்களவையில் பேசிய நிதியமைச்சர், சமீப ஆண்டுகளில் முறைகேடாகச் சம்பாதித்த சொத்துக்களை மீட்டெடுக்கவும், பொதுத்துறை வங்கிகளுக்கு திருப்பித் தரவும், முதலீட்டாளர்களை ஏமாற்றவும் ED மேற்கொண்ட குறிப்பிடத்தக்க முயற்சிகளை எடுத்துரைத்தார்.

    பணமோசடி

    பணமோசடி தடுப்பு சட்டத்தில் மீட்கப்பட்ட சொத்துக்கள் 

    "பணமோசடி தடுப்புச் சட்டத்தில் (PMLA), பெரிய வழக்குகளில் இருந்து குறைந்தது ரூ. 22,280 கோடி மதிப்பிலான சொத்துக்களை ED வெற்றிகரமாக மீட்டெடுத்துள்ளது. அவர்கள் நாட்டை விட்டு வெளியேறினாலும் நாங்கள் யாரையும் விட்டு வைக்கவில்லை. நாங்கள் அவர்களைத் தொடர்ந்து சென்றுள்ளோம்," என்று அவர் கூறினார்.

    "ED இந்தப் பணத்தை வசூலித்து வங்கிகளுக்குத் திருப்பிக் கொடுக்கப்படுவதை உறுதி செய்துள்ளது" என்றார்.

    "நாங்கள் அவர்களைப் பின்தொடர்கிறோம். வங்கிகள் மற்றும் முதலீட்டாளர்களுக்குச் சொந்தமான பணம் திரும்பப் பெறப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம்" என்று சீதாராமன் மேலும் கூறினார்.

    சொத்து மீட்பு

    முக்கிய குற்றவாளிகளான விஜய் மல்லையா மற்றும் நீரவ் மோடியின் சொத்துக்கள் 

    முக்கிய வழக்குகளாக கருதப்படும் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான ரூ.14,131.6 கோடி மதிப்பிலான சொத்துக்களை ED மீட்டெடுத்துள்ளதாகவும், பின்னர் அவை பொதுத்துறை வங்கிகளுக்கு திருப்பி தரப்பட்டதாகவும் நிதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.

    இதேபோல், நீரவ் மோடி வழக்கில் இருந்து ரூ.1,052.58 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பொது மற்றும் தனியார் வங்கிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

    மெஹுல் சோக்ஸி வழக்கில், 2,565.90 கோடி மதிப்புள்ள சொத்துக்களை ED பறிமுதல் செய்துள்ளது எனவும், அவை இப்போது ஏலம் விடப்பட உள்ளன எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விஜய் மல்லையா
    நிதியமைச்சர்
    நிதி அமைச்சர்
    அமலாக்க இயக்குநரகம்

    சமீபத்திய

    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்
    மிச்சமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் டிஜே வேண்டாம், cheer leaders வேண்டாம், உணர்வுகளை மனதில் கொள்ளுங்கள்: கவாஸ்கர் கோரிக்கை ஐபிஎல் 2025

    விஜய் மல்லையா

    மற்றுமொரு தொழிலதிபர் வீட்டு திருமணம்: விஜய் மல்லையாவின் மகனுக்கு இந்த வாரம் திருமணம்! திருமணம்
    விஜய் மல்லையாவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது இந்தியா

    நிதியமைச்சர்

    சமூக வலைத்தளங்களில் பரவிய ஆடியோ பதிவு குறித்து விளக்கமளிக்கும் நிதியமைச்சர்  தமிழ்நாடு
    நிதியமைச்சரின் ஆடியோ விவகாரம் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்  பாஜக
    எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும்: நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்  இந்தியா
    நிர்மலா சீதாராமனின் மகளுக்கு பிரதமர் மோடியின் ஆலோசகருடன்  திருமணம் இந்தியா

    நிதி அமைச்சர்

    திமுக கட்சியிலிருந்து மிசா பாண்டியன் சஸ்பெண்ட் - பின்னணி குறித்த தகவல்கள்  திமுக
    ரிசர்வ் வங்கிக்கு மிரட்டல் மின்னஞ்சல்: 3 பேரை மும்பை போலீசார் கைது செய்து விசாரணை ரிசர்வ் வங்கி
    முழுக்கால பட்ஜெட்டுக்கும், இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடருக்கும் என்ன வித்தியாசம்? நாடாளுமன்றம்
    இடைக்கால பட்ஜெட் 2024: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று என்ன அறிவிக்கக்கூடும்? எதிர்பார்ப்புகள் என்ன? பட்ஜெட்

    அமலாக்க இயக்குநரகம்

    ₹100 கோடி பொன்சி மோசடி வழக்கில், நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன் பிரகாஷ் ராஜ்
    20 லட்சம் லஞ்சம் வாங்கிய விவகாரம்: மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை நிறைவு மதுரை
    டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு: ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்  டெல்லி
    பணமோசடி வழக்கில் விவோவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த அமலாக்கத்துறை அமலாக்கத்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025