NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தேர்தல் 2024: இதுவரை இல்லாத அளவுக்கு, ரூ.4,650 கோடி வரை பறிமுதல் செய்த தேர்தல் கமிஷன்       
    அடுத்த செய்திக் கட்டுரை
    தேர்தல் 2024: இதுவரை இல்லாத அளவுக்கு, ரூ.4,650 கோடி வரை பறிமுதல் செய்த தேர்தல் கமிஷன்       
    மார்ச் 1ஆம் தேதி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் தினமும் ரூ.100 கோடிக்கு மேல் பறிமுதல் செய்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    தேர்தல் 2024: இதுவரை இல்லாத அளவுக்கு, ரூ.4,650 கோடி வரை பறிமுதல் செய்த தேர்தல் கமிஷன்       

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 15, 2024
    05:21 pm

    செய்தி முன்னோட்டம்

    மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி தொடங்குவதற்கு முன்பே, தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையில் அதிகாரிகள் வரலாறு காணாத வகையில் ரூ.4,650 கோடி வரை பறிமுதல் செய்துள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

    இது 2019 நாடாளுமன்றத் தேர்தலில் செய்யப்பட்ட பறிமுதல்களை விட அதிகமாகும். அதோடு, மார்ச் 1ஆம் தேதி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் தினமும் ரூ.100 கோடிக்கு மேல் பறிமுதல் செய்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    "2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், நாட்டில் 75 ஆண்டுகால மக்களவைத் தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான பணப்பட்டுவாடா பறிமுதல்களை செய்துள்ளது தேர்தல் ஆணையம்," என்று ECI ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    தேர்தல் கமிஷன் அறிக்கை

    ECI is on track for the highest ever seizures of inducements recorded in history of Lok Sabha elections; on average, Rs.100 crore seized every day since 1st March . Rs. 4650 crores seized even before polling begins: higher than in 2019 polls#GE2024https://t.co/VCIo3BVRQz pic.twitter.com/L2quiqUELK

    — Spokesperson ECI (@SpokespersonECI) April 15, 2024

    தேர்தல்

    தீவிர கண்காணிப்பில் தேர்தல் ஆணையம்

    பறக்கும் படையினர், புள்ளிவிவர கண்காணிப்பு குழுக்கள், வீடியோ பார்க்கும் குழுக்கள் மற்றும் எல்லை சோதனைச் சாவடிகள் 24 மணி நேரமும் கண்காணித்து, பறிமுதல்களை செய்து வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    பணம், மதுபானம், இலவசங்கள் மற்றும் போதைப் பொருட்களின் நடமாட்டம் மற்றும் விநியோகம் இல்லை என்பதை உறுதிப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அது கூறியது.

    மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது.

    முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தேர்தல்
    தேர்தல் ஆணையம்

    சமீபத்திய

    தனது 65வது பிறந்தநாளில் 'முகரகம்' என்ற சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டார் மோகன்லால் மோகன்லால்
    கல்வி நிதி வழங்க மறுக்கும் மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தமிழக அரசு
    புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக் கர்நாடகா
    175 பில்லியன் டாலர் மதிப்புள்ள 'Golden Dome' பாதுகாப்புத் திட்டத்தை டிரம்ப் வெளியிட்டார்; அதன் சிறப்பம்சங்கள் என்ன? அமெரிக்கா

    தேர்தல்

    6 மாநிலங்களின் உள்துறைச் செயலாளர்கள் திடீர் மாற்றம்: தேர்தல் ஆணையம் அதிரடி  தேர்தல் ஆணையம்
    தேர்தல் விதிமுறைகளை மீறியதற்காக தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்குப்பதிவு பிரேமலதா
    தேர்தல் 2024: விசிக தலைவர் தொல். திருமா சிதம்பரத்தில் போட்டியிடுகிறார் தொல். திருமாவளவன்
    தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது: தேர்தல் ஆணையம் அறிவிப்பு தேர்தல் ஆணையம்

    தேர்தல் ஆணையம்

    காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்  ராகுல் காந்தி
    ராஜஸ்தானில் இன்று சட்டசபை தேர்தல்; ஆட்சியை பிடிக்க காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி ராஜஸ்தான்
    வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள 15.33 லட்சம் பேர் விண்ணப்பம் - சத்ய பிரதா சாகு தகவல்  வாக்காளர் அடையாள அட்டை
    சட்டமன்ற தேர்தல்: 4 மாநிலங்களில் இன்று தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது தேர்தல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025