Page Loader
சென்னையில் ரூ.280 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் 
சென்னையில் ரூ.280 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்

சென்னையில் ரூ.280 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் 

எழுதியவர் Nivetha P
Dec 22, 2023
07:28 pm

செய்தி முன்னோட்டம்

இலங்கையை சேர்ந்த உதயகுமார் என்பவர் கடந்த 10ம்.,தேதி சென்னையிலுள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். இவர் போதைப்பொருள் கடத்த வந்துள்ளதாக ரகசியத்தகவல் ஒன்று போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது. அதன்பேரில் சம்பவயிடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அவரிடம் விசாரித்துள்ளனர். விசாரணையில் அவர் கொடுத்த தகவலின்பேரில், பெரம்பூரில் அக்பர் அலி என்பவர் தனது வீட்டில் ரூ.280கோடி மதிப்புள்ள 56.,கிலோ மெத்தம்பெட்டமைன் என்னும் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவரிடம் நடத்திய விசாரணையில், மியான்மரிலிருந்து மணிப்பூர் வழியே இலங்கைக்கு கடத்த முயன்றது தெரியவந்துள்ளது. தற்போது அவர்கள் இருவரையும் காவல்துறை கைது செய்துள்ளது. இவர்கள்மீது கடத்தல் பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தாண்டில் மட்டும் மொத்தம் இலங்கைக்கு கடத்தவிருந்த 65கி.,மெத்தம்பெட்டமைன், 3,338.,கி.,கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

பறிமுதல்