NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திமுக வழக்கறிஞர் சரமாரியாக வெட்டி கொலை: காரணம் என்ன ? - க்ரைம் ஸ்டோரி
    அடுத்த செய்திக் கட்டுரை
    திமுக வழக்கறிஞர் சரமாரியாக வெட்டி கொலை: காரணம் என்ன ? - க்ரைம் ஸ்டோரி
    திமுக வழக்கறிஞர் சரமாரியாக வெட்டி கொலை : காரணம் என்ன ? - க்ரைம் ஸ்டோரி

    திமுக வழக்கறிஞர் சரமாரியாக வெட்டி கொலை: காரணம் என்ன ? - க்ரைம் ஸ்டோரி

    எழுதியவர் Nivetha P
    Nov 05, 2023
    02:42 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்த வார Newsbytes.,ன் க்ரைம் ஸ்டோரி: தமிழ்நாடு, நாமக்கல் மாவட்டம், எருமைப்பட்டி கிராமம் அருகேயுள்ள வரகூர் பகுதியினை சேர்ந்தவர் மணிகண்டன்(40).

    இவர் திமுக கட்சியின் வழக்கறிஞராக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

    அதன்படி, வழக்கம் போல் மணிகண்டன் நேற்று(நவ.,4) தனது பணியினை முடித்து விட்டு தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்துள்ளார்.

    அப்போது அவரை ஒரு மர்ம கும்பல் பின்தொடர்ந்து வந்ததாக தெரிகிறது.

    குறிப்பிட்ட இடத்திற்கு வந்த பிறகு அந்த கும்பல் மணிகண்டனை வழிமறித்து ஆயுதங்கள் கொண்டு சரமாரியாக வெட்டியுள்ளனர்.

    வெட்டுப்பட்ட மணிகண்டன் சரிந்து விழுந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்துள்ளார்.

    அதன் பின் அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஒடியுள்ளனர்.

    கொலை

    கொலை செய்த கும்பலை பிடிக்க தனிப்படை அமைப்பு 

    இதனைத்தொடர்ந்து வழக்கறிஞர் மணிகண்டன் வெட்டி கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து தகவலறிந்து எருமைப்பட்டி காவல்துறை சம்பவயிடத்திற்கு விரைந்தனர்.

    இறந்து கிடந்த மணிகண்டனின் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனை செய்ய நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

    தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறை, தங்கள் விசாரணையினை துவங்கியுள்ளதாக தெரிகிறது.

    குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும், இவர் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்ட விவகாரத்தால் கொலை செய்யப்பட்டாரா?

    ரியல் எஸ்டேட் பிரெச்சனை காரணமாக கொலை செய்யப்பட்டாரா?

    அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்னும் கோணத்தில் காவல்துறை தங்கள் விசாரணையினை துவங்கியுள்ளனர்.

    முன்னதாக மணிகண்டன் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தநிலையில் அண்மையில் இவர் திமுக கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    க்ரைம் ஸ்டோரி
    தமிழ்நாடு
    கொலை
    காவல்துறை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    க்ரைம் ஸ்டோரி

    திருச்சியை உறையவைத்த லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம், பாகம் 1 - க்ரைம் ஸ்டோரி கொள்ளை
    திருச்சியை உறையவைத்த லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம், பாகம் 2 - க்ரைம் ஸ்டோரி திருச்சி
    நர்ஸ் வேடமிட்டு விஷ ஊசிப்போட்டு மனைவியை கொலை செய்ய முயற்சித்த முன்னாள் காதலி - க்ரைம் ஸ்டோரி  கேரளா
    மாணவிகளை மசாஜ் செய்ய வற்புறுத்தி அத்துமீறிய தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது-க்ரைம் ஸ்டோரி  கைது

    தமிழ்நாடு

    மிக தீவிர புயலாக வலுவடைந்தது 'ஹமூன்': 6 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  புதுச்சேரி
    புதுக்கோட்டையில் 1 அடி நீளமுள்ள வாழை குருத்தில் பூத்துள்ள வாழைப்பூ  புதுக்கோட்டை
    'வரலாம் வா வரலாம் வா' - ரிவெர்ஸ் வாக்கிங் செய்யும் அமைச்சர் மா.சுப்ரமணியம்  எக்ஸ்
    பள்ளிக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான 2,222 காலியிடங்கள் - கூடுதலாக 1,000 பணியிடங்கள் சேர்க்க முடிவு பள்ளிக்கல்வித்துறை

    கொலை

    அலுவலகத்திற்குள் புகுந்து CEOவை வெட்டி கொன்ற முன்னாள் ஊழியர் பெங்களூர்
    இரண்டு  பேரை வெட்டி கொன்றுவிட்டு இன்ஸ்டகிராமில் பதிவிட்ட குற்றவாளி  பெங்களூர்
    6 மாத குழந்தையுடன் அதன் குடும்பத்தையும் கொன்று எரித்த கொடூர சம்பவம்  ராஜஸ்தான்
    சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு; குற்றவாளியை தேடும் போலீஸ் சென்னை

    காவல்துறை

    15 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த நீதி- என்ன நடந்தது சௌமியா விஸ்வநாதன் கொலை வழக்கில்? டெல்லி
    கொல்லப்பட்ட பத்திரிகையாளர் சௌம்யா கொலையில் துப்பு துலங்கியது எப்படி? கொலை
    அண்ணாமலை வீட்டின் முன்பு அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடி கம்பம் அகற்றம் பாஜக
    திருட வந்த இளைஞர்களை ஓட ஓட விரட்டிய 80 வயது முதியவர், குவியும் பாராட்டுக்கள் : க்ரைம் ஸ்டோரி  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025