NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மறைந்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங்கிற்கும், இயக்குனர் பா.ரஞ்சித்திற்கும் என்ன உறவு?
    அடுத்த செய்திக் கட்டுரை
    மறைந்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங்கிற்கும், இயக்குனர் பா.ரஞ்சித்திற்கும் என்ன உறவு?
    அரசை கேள்வி கேட்டு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் பா.ரஞ்சித்

    மறைந்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங்கிற்கும், இயக்குனர் பா.ரஞ்சித்திற்கும் என்ன உறவு?

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 09, 2024
    02:12 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த வாரம் சென்னையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மறைவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தாலும், அவர் இறந்ததும் முதல் ஆளாக ராஜாஜி மருத்துவமனைக்கு ஓடோடி வந்தவர்களில் இயக்குனர் பா.ரஞ்சித்தும் ஒருவர்.

    அங்கிருந்து, ஆர்ம்ஸ்ட்ராங்கின் இறுதி சடங்கு வரை உடன் இருந்தார் ரஞ்சித்.

    இந்த நிலையில் தான், நேற்று நள்ளிரவில் அவர் தனது எக்ஸ் பக்கத்தில், அரசை கேள்வி கேட்டு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

    யாரும் இந்த கொலை பற்றி விரிவான அறிக்கை வெளியிடாத நிலையில், ரஞ்சித் அரசை நோக்கி பல கேள்விகளை முன்வைத்தது, அரசியல் விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    இதன் மூலம், ஆர்ம்ஸ்ட்ராங் இடத்தை ரஞ்சித் நிரப்பக்கூடும் என அவரின் ஆதரவாளர்களுக்கும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    பா. ரஞ்சித்தின் கேள்விகள்

    கோழைத்தனமான கொடூர படுகொலைக்கு ஆளான பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணன் திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்களின் திருவுடலை, சலசலப்பு பதற்றம் ஏதுமின்றி சட்டம் ஒழுங்கு பிரச்சனை நிகழாமல் நல்லடக்கம் செய்து விட்டோம். அண்ணன் இல்லாத, அவருக்குப் பிறகான இந்த வாழ்க்கையை அவர் கொண்ட கொள்கையான…

    — pa.ranjith (@beemji) July 8, 2024

    ட்விட்டர் அஞ்சல்

    பா. ரஞ்சித்தின் கேள்விகள்

    7. ஆதிக்க வர்க்கத்தாரே! எங்களின் சுயமரியாதையின் பொருட்டு நாங்கள் கிளெர்ந்தெழுவதை ரவுடித்தனம் என்கிறீர்கள். வருவோருக்கெல்லாம் லட்சக்கணக்கான புத்தகங்களை அன்பளிப்பாய் கொடுத்தவர், தம்மமே மானுட சமூகத்தின் விடுதலையை தரும் என்று பாபாசாகேப் வழியில் பௌத்தத்தை முன்னெடுத்தவருக்கு எதிராய்…

    — pa.ranjith (@beemji) July 8, 2024

    தொடர்பு

    அரசியல் தாண்டி பா.ரஞ்சித்துக்கும், ஆம்ஸ்ட்ராங்கிற்கும் உள்ள நட்பு

    படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் சமாஜ் கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, அம்பேத்கரிய கொள்கைகளில் ஆர்வம் கொண்டு அரசியலில் தன்னை இணைத்துக்கொண்டவர்.

    அவரை போலவே அம்பேத்கரின் கொள்கைகளில் தீவிர ஈடுபாடு கொண்டவர் இயக்குனர் ரஞ்சித்.

    அவரின் படங்களின் மூலம் அது வெளிப்பட்டிருப்பதை காணலாம்.

    இவர்கள் இருவருமே புரட்சி பாரதம் கட்சியின் நிறுவனர் பூவை மூர்த்தியின் சீடர்களாக கருதப்படுகிறார்கள்.

    அதனால், சிறுவயதிலிருந்தே ஒன்றாக பயணித்திருக்கின்றனர்.

    பா.ரஞ்சித் முதுகலை பட்டம் பெறுவதற்கும், சினிமா துறையில் கால் பதிப்பதற்கும், ஆம்ஸ்ட்ராங் ஒரு முக்கிய காரணமாக இருந்துள்ளார்.

    தற்போது அன்னாரின் மறைவிற்கு பின்னர் ரஞ்சித் கேட்டிருக்கும் கேள்விகள், அவர் விரைவில் அரசியலில் நுழையக்கூடும் என்பதை காட்டுகிறதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    பா ரஞ்சித்
    திமுக

    சமீபத்திய

    இந்தியாவின் தேசிய மொழி என்ன என்று ஸ்பெயினில் கேட்டவருக்கு MP கனிமொழி அளித்த நச் பதில்! கனிமொழி
    பென்ட்லியின் மிகவும் சக்திவாய்ந்த எஸ்யூவி வெளியாகியுள்ளது: விவரங்கள் இதோ எஸ்யூவி
    வக்ஃப் சொத்துக்களை பதிவு செய்வதற்கான மத்திய அரசின் வெப்சைட் இந்த வாரத்தில் தொடங்கப்படவுள்ளது வக்ஃப் வாரியம்
    தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பநிலை 3 டிகிரி அதிகரிக்க வாய்ப்பு தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாட்டில் ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக துவங்கியது ரம்ஜான்
    தமிழகத்தில் நாளை மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரை நிறைவு தேர்தல்
    தமிழகத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது; வரிசையில் நின்று வாக்கை பதிவு செய்த தலைவர்கள் தமிழகம்
    தமிழ்நாட்டில் வாக்குப் பதிவு சதவீதத்தில் ஏன் இத்தனை குளறுபடி? சத்யபிரதா சாகு விளக்கம்! தமிழ்நாடு செய்தி

    பா ரஞ்சித்

    ப. ரஞ்சித்தின் தங்கலான் படத்திற்காக 4 மணி நேரம் மேக்கப் போடும் விக்ரம் விக்ரம்
    வேங்கை வயலில் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டும் போலீஸ்: பா. ரஞ்சித் குற்றசாட்டு ஸ்டாலின்
    சிறிய பட்ஜெட் படங்களை விற்பதில் ஓடிடி-யிலும் பிரச்னை: பா. ரஞ்சித் வருத்தம் ஓடிடி
    'என்னுடைய அரசியல் எதிரி சாதி தான்' - கமல்ஹாசன் கமல்ஹாசன்

    திமுக

    தொகுதி பங்கீடு முடிவாகவில்லை..ஆனால் ஒரு கண்டிஷன்; மதிமுகவின் கோரிக்கை மதிமுக
    ராக்கெட் விளம்பர சர்ச்சைக்கு விளக்கம் அளித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி
    பணிப்பெண் சித்ரவதை வழக்கு: திமுக எம்எல்ஏ மகன், மருமகளுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றம்
    இறுதியாக திமுக- விசிக-மதிமுக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து; தனி சின்னத்தில் போட்டி விசிக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025