Page Loader
மறைந்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங்கிற்கும், இயக்குனர் பா.ரஞ்சித்திற்கும் என்ன உறவு?
அரசை கேள்வி கேட்டு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் பா.ரஞ்சித்

மறைந்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங்கிற்கும், இயக்குனர் பா.ரஞ்சித்திற்கும் என்ன உறவு?

எழுதியவர் Venkatalakshmi V
Jul 09, 2024
02:12 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த வாரம் சென்னையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மறைவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தாலும், அவர் இறந்ததும் முதல் ஆளாக ராஜாஜி மருத்துவமனைக்கு ஓடோடி வந்தவர்களில் இயக்குனர் பா.ரஞ்சித்தும் ஒருவர். அங்கிருந்து, ஆர்ம்ஸ்ட்ராங்கின் இறுதி சடங்கு வரை உடன் இருந்தார் ரஞ்சித். இந்த நிலையில் தான், நேற்று நள்ளிரவில் அவர் தனது எக்ஸ் பக்கத்தில், அரசை கேள்வி கேட்டு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். யாரும் இந்த கொலை பற்றி விரிவான அறிக்கை வெளியிடாத நிலையில், ரஞ்சித் அரசை நோக்கி பல கேள்விகளை முன்வைத்தது, அரசியல் விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் மூலம், ஆர்ம்ஸ்ட்ராங் இடத்தை ரஞ்சித் நிரப்பக்கூடும் என அவரின் ஆதரவாளர்களுக்கும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

பா. ரஞ்சித்தின் கேள்விகள்

ட்விட்டர் அஞ்சல்

பா. ரஞ்சித்தின் கேள்விகள்

தொடர்பு

அரசியல் தாண்டி பா.ரஞ்சித்துக்கும், ஆம்ஸ்ட்ராங்கிற்கும் உள்ள நட்பு

படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் சமாஜ் கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, அம்பேத்கரிய கொள்கைகளில் ஆர்வம் கொண்டு அரசியலில் தன்னை இணைத்துக்கொண்டவர். அவரை போலவே அம்பேத்கரின் கொள்கைகளில் தீவிர ஈடுபாடு கொண்டவர் இயக்குனர் ரஞ்சித். அவரின் படங்களின் மூலம் அது வெளிப்பட்டிருப்பதை காணலாம். இவர்கள் இருவருமே புரட்சி பாரதம் கட்சியின் நிறுவனர் பூவை மூர்த்தியின் சீடர்களாக கருதப்படுகிறார்கள். அதனால், சிறுவயதிலிருந்தே ஒன்றாக பயணித்திருக்கின்றனர். பா.ரஞ்சித் முதுகலை பட்டம் பெறுவதற்கும், சினிமா துறையில் கால் பதிப்பதற்கும், ஆம்ஸ்ட்ராங் ஒரு முக்கிய காரணமாக இருந்துள்ளார். தற்போது அன்னாரின் மறைவிற்கு பின்னர் ரஞ்சித் கேட்டிருக்கும் கேள்விகள், அவர் விரைவில் அரசியலில் நுழையக்கூடும் என்பதை காட்டுகிறதாக செய்திகள் தெரிவிக்கின்றன.