NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பெற்றோர், சகோதரியை தானே கொலை செய்து விட்டு நாடகமாடிய டெல்லி நபர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பெற்றோர், சகோதரியை தானே கொலை செய்து விட்டு நாடகமாடிய டெல்லி நபர்
    மூவரை கொன்ற வழக்கில் கைதான அர்ஜுன்

    பெற்றோர், சகோதரியை தானே கொலை செய்து விட்டு நாடகமாடிய டெல்லி நபர்

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 05, 2024
    12:47 pm

    செய்தி முன்னோட்டம்

    டெல்லியில் நடந்த மூன்று கொலை வழக்கில் அதிர்ச்சித் திருப்பமாக, தனது வீட்டில் பெற்றோரும் சகோதரியும் இறந்து கிடந்ததாக காவல்துறையில் புகார் அளித்தவர், அவர்களை கொலை செய்ததற்காக இப்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

    காவல்துறையினரின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்ட 20 வயதான அர்ஜுன், தனது பெற்றோருடன் உறவை முறித்துக் கொண்டார்.

    மேலும் பெற்றோர்கள் அவரை விட தனது சகோதரியை விரும்புவதால் வருத்தமடைந்தார்.

    அதோடு அர்ஜுனின் தந்தை தனது சகோதரிக்கு சொத்தை மாற்ற திட்டமிட்டு இருந்ததும், அர்ஜுனை கோபப்படுத்தியது என்று போலீசார் தெரிவித்தனர்.

    வழக்கு

    மர்மமான முறையில் இறந்து கிடைத்ததாக புகார்

    டெல்லியை சேர்ந்த ராஜேஷ் குமார், அவரது மனைவி கோமல் மற்றும் அவர்களது மகள் கவிதா ஆகிய மூவரின் உடல்கள் கத்திக் காயங்களுடன் புதன்கிழமை காலை அவர்களது வீட்டில் இருந்து மீட்கப்பட்டன.

    காலை 5.30 மணிக்கு நடைப்பயிற்சி முடித்து திரும்பியபோது தனது குடும்பத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை அர்ஜூன் கண்டதாக கூறியிருந்தார்.

    திருப்பம்

    கொலை செய்து நடனமாடியது அம்பலம்

    அர்ஜுனின் அவசர அழைப்பு பெற்றதும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், தடயவியல் நிபுணர்கள், குற்றவியல் குழு மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் விசாரணையை தொடங்கினர்.

    காவல்துறையினரின் கூற்றுப்படி, வீட்டில் கொள்ளை அல்லது திருடப்பட்டதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை.

    விசாரணையின் போது முரண்பாடுகள் வெளிப்பட்டதால் அர்ஜுனின் வாக்குமூலம் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

    தொடர்ச்சியான விசாரணைக்குப் பிறகு, அர்ஜுன் உண்மையை ஒப்புக்கொண்டார்.

    மேலும் தனிப்பட்ட மனக்கசப்புகள் காரணமாக தூண்டப்பட்ட ஒரு திட்டமிட்ட செயலில் தனது குடும்ப உறுப்பினர்களைக் கொன்றதாக ஒப்புக்கொண்டார் எனபோலீசார் தெரிவித்தனர்.

    வாக்குமூலம்

    ஸ்ட்ரிக்டான அப்பா, சகோதரி பெயரில் சொத்தை மாற்ற திட்டம் உள்ளிட்டவை கொலை செய்ய தூண்டியுள்ளது

    அர்ஜுனின் வாக்குமூலத்தின்படி, அர்ஜுன் தனது தந்தையுடன் ஒரு கசப்பான உறவைக் கொண்டிருந்தார்.

    அவரது அப்பா ஒரு ஓய்வுபெற்ற ராணுவ வீரர் எனவும், அவர் தினசரி வழக்கங்கள் மற்றும் படிப்புகள் தொடர்பாக அடிக்கடி கண்டித்துள்ளார்.

    மேலும் சமீபத்தில் அவரை பகிரங்கமாக கண்டித்துள்ளார்.

    அதோடு அவரது தந்தை, சகோதரிக்கு சொத்தை மாற்ற திட்டமிட்டுள்ளதை அறிந்த அர்ஜுன் கோபமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    டிசம்பர் 4ஆம் தேதி, அவரது பெற்றோரின் திருமண நாள்.

    அர்ஜுன் வீட்டில் கத்தியைப் பயன்படுத்தி குடும்பத்தினரை தூக்கத்தில் கொன்றுவிட்டு, காலை நடைப்பயணத்திற்குச் சென்று நாடகமாடியுள்ளார்.

    டெல்லி பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு பிஏ படிக்கும் அர்ஜுன், பயிற்சி பெற்ற குத்துச்சண்டை வீரர் ஆவார், அவர் டெல்லி மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    கொலை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    டெல்லி

    ஷேக் ஹசீனாவின் நீட்டிக்கப்பட்ட தாங்கும் காலத்திற்கு டெல்லி எவ்வாறு தயாராகிறது ஷேக் ஹசீனா
    நீண்ட நேரம் உட்கார்ந்திருந்ததால் WWII காலத்து உடல்நல கோளாறால் பாதிக்கப்பட்ட UPSC ஆர்வலர் யுபிஎஸ்சி
    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 20 வரை நீட்டிப்பு அரவிந்த் கெஜ்ரிவால்
    டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்

    கொலை

    புனே விபத்து: ரத்த மாதிரிகளை மாற்ற டாக்டருக்கு ரூ.3 லட்சம் லஞ்சம் விபத்து
    பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா கொலை வழக்கில் கைது நடிகர்
    ரசிகர் மன்ற நிர்வாகியை வைத்து கொலையை அரங்கேற்றிய கன்னட நடிகர் தர்ஷன் நடிகர்
    ரேணுகாசாமி கொலை வழக்கு: காவல்துறை பிடியில் சிக்கும் கன்னட திரையுலகின் பிரபல நடிகர்கள் தர்ஷன், சிக்கண்ணா  கன்னட படங்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025