NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டெல்லியில் மோசமடைந்த காற்றின் தரம்: பள்ளிகளுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    டெல்லியில் மோசமடைந்த காற்றின் தரம்: பள்ளிகளுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு
    அதிகரித்துள்ள காற்று மாசால் புகை மூட்டமாக காணப்படும் டெல்லி சாலைகள்.

    டெல்லியில் மோசமடைந்த காற்றின் தரம்: பள்ளிகளுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு

    எழுதியவர் Srinath r
    Nov 03, 2023
    10:34 am

    செய்தி முன்னோட்டம்

    தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருவதால், தொடக்கப் பள்ளிகளுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை அளித்து ஆம் மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

    இன்று காலை நிலவரப்படி டெல்லியின் காற்றின் தரம், கடுமையான வகைக்கு வீழ்ந்துள்ளது.

    டெல்லியின் முக்கிய பகுதிகளான லோதி சாலை பகுதியில் 438, ஜஹாங்கிர்புரி பகுதியில் 491 , ஆர்கே புரம் பகுதியில் 486, விமான நிலையத்தைச் சுற்றி 473 ஆக காற்றின் தரக்குறியீடு உள்ளது.

    2nd card

    கார்கள், கட்டுமான நடவடிக்கைகளுக்கு தடை

    அதிகரித்து வரும் காற்று மாசு கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    அதன்படி பிஎஸ் 3 மற்றும் பிஎஸ் 4 டீசல் கார்களை டெல்லி குருகிராம், ஃபரிதாபாத், காசியாபாத், கௌதம் புத் நகர் பகுதிகளில் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் அத்தியாவசியம் இல்லாத கட்டுமான நடவடிக்கைகள், கட்டிட இடிப்பு, செப்பனிடப்படாத சாலைகளில் வாகனங்களின் இயக்கம், கழிவுநீர் பாதை அமைத்தல்,

    குடிநீர் பைப் லைன் அமைத்தல், வடிகால் வேலை மற்றும் திறந்த அகழி அமைப்பு மூலம் மின்சார கேபிள் அமைத்தல்,

    பெயிண்டிங், மெருகூட்டல் மற்றும் வார்னிஷ் வேலைகள் போன்றவை மற்றும் சாலை கட்டுமானம்/பழுதுபார்க்கும் பணிகள், நடைபாதைகள்/பாதைகள் போன்றவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் கார்களில் பயணிப்பதை தவிர்க்க, கூடுதலாக 20 மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகிறது.

    3rd card

    டெல்லியில் காற்று மோசம் அடைய காரணம் என்ன?

    வழக்கமாகவே டெல்லியின் காற்று மாசு அளவுகள் நவம்பர் 1 முதல் 15ஆம் தேதி வரை, அன்றை மாநிலங்களான ஹரியானா, பஞ்சாபில் எரியூட்டப்படும் விவசாய கழிவுகளால் அதிகரிக்கின்றன.

    பல்வேறு சலுகைகள் மூலம் அரசுகள் விவசாயக் கழிவுகள் எரிக்கப்படுவதை கட்டுப்படுத்தி வந்தாலும், கடந்த சில நாட்களாக இது அதிகரித்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மேலும் இந்த வருடம் அக்டோபர் மாதத்தில் போதிய அளவு மழை இல்லாததும் டெல்லியின் மோசமான காற்று மாசுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.

    4th card

    காற்றின் தரக் குறியீடு(AQI) என்றால் என்ன?

    காற்றிலுள்ள மாசு பொருட்களின் அளவைப் பொறுத்து, காற்றின் தரக் குறியீடு நிர்ணயிக்கப்படுகிறது. இந்த குறியீடு எவ்வளவு குறைவாக உள்ளதோ, காற்று அவ்வளவு நன்றாக உள்ளதாக பொருள்.

    பூஜ்ஜியத்திற்கும் 50க்கும் இடைப்பட்ட AQI நல்லதாகவும், 51 மற்றும் 100 திருப்திகரமாகவும், 101 மற்றும் 200 மிதமானதாகவும்,

    201 மற்றும் 300 மோசமானதாகவும், 301 மற்றும் 400 மிகவும் மோசமானதாகவும், 401 மற்றும் 500 கடுமையான மற்றும் 500க்கு மேல் இருந்தால், அது அபாயகரமானதாகவும் கருதப்படுகிறது.

    டெல்லியின் காற்று தரக்குறியீடு ஏற்கனவே மோசமாக உள்ள நிலையில், இது மேலும் மோசம் அடையலாம் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    காற்று மாசால் டெல்லியில் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பு

    In light of the rising pollution levels, all govt and private primary schools in Delhi will remain closed for the next 2 days

    — Arvind Kejriwal (@ArvindKejriwal) November 2, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அரவிந்த் கெஜ்ரிவால்
    டெல்லி
    மெட்ரோ
    காற்று மாசுபாடு

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    அரவிந்த் கெஜ்ரிவால்

    மதுபான ஊழலில் கிடைத்த பணத்தை கோவா பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஆம் ஆத்மி: ED கோவா
    டெல்லி மதுபானக் கொள்கை விவகாரம்: பாஜக பெரும் போராட்டம் பாஜக
    அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில் இரு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு டெல்லி
    பிரதமரின் பட்டபடிப்பு விவரங்கள் தேவையில்லை: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அபராதம் இந்தியா

    டெல்லி

    ரயில் நிலையத்தில் சுமைதூக்கும் தொழிலாளியாக மாறிய ராகுல் காந்தி ராகுல் காந்தி
    டெல்லியில் தச்சர்களை சந்தித்தார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்தியா
    இந்தியாவுடன் தூதராக உறவுகளை நிறுத்தியது ஆப்கானிஸ்தான் இந்தியா
    மிகவும் தேடப்பட்டு வந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி டெல்லியில் பிடிபட்டார்  என்ஐஏ

    மெட்ரோ

    நள்ளிரவு வரை மெட்ரோ சேவைகளை தொடர சென்னை மெட்ரோ நிர்வாகம் முடிவு? சென்னை
    சென்னை மெட்ரோ ரயில் பார்க்கிங் கட்டணம் உயர்வு - மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு சென்னை
    மதுரை மெட்ரோ: 27 ஸ்டேஷன்களுடன், 32 கி.மீ., வரை நீடிக்கப்படுவதாக அறிவிப்பு  மதுரை
    திருமங்கலம் மெட்ரோ பயணிகளுக்காக மினி பஸ் மற்றும் மின்சார ஆட்டோ சேவை அறிமுகம்  சென்னை

    காற்று மாசுபாடு

    போகி பண்டிகையையொட்டி பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க வேண்டாம் - தமிழக அரசு வேண்டுகோள் தமிழக அரசு
    டெல்லியில் குறைந்த பட்சவெப்பநிலை 1.4ஆக பதிவு - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை குளிர்காலம்
    மிகவும் மோசமடைந்தது டெல்லியின் காற்று மாசு  டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025